படகில் பிரித்தானியா செல்ல முற்பட்ட 19 அகதிகள் நடுகடலில் இருந்து மீட்பு!!
05 Jun,2019
இன்று புதன்கிழமை காலை, பா-து-கலேயில் இருந்து ஆங்கில் கால்வாய் வழியாக சிறிய படகு ஒன்றின் மூலம் பிரித்தானியா செல்ல முற்பட்ட 19 அகதிகள் கைது செய்யபட்டுள்ளனர்.
தற்காலிக படகு ஒன்றின் மூலம் Dunkerque துறைமுகத்தில் இருந்து இவர்கள் பயணித்துள்ளனர். மிக மோசமான காலநிலையை கருத்தில் கொள்ளாது, சட்டவிரோதமாக பிரித்தானியா நோக்கி பயணபட்ட நிலையில், பிரெஞ்சு எல்லைக்கு உட்பட்ட கடற்பிராந்தியத்தில் வைத்து அவர்களை Manche et de la mer du Nord அதிகாதிகள் மீட்டுள்ளனர். மோசமான காற்று வீசியதால், அதிகாலை 2.15 மணிக்கு படகில் பயணித்தவர்களே அப்பிராந்திய SAMU அதிகாரிகளை அழைத்துள்ளனர். அதன் பின்னரே அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கபட்டு காலை 7 மணிக்கு பா-து-கலேக்கு அழைத்துவரபட்டனர். பின்னர் அவர்கள் 8 மணிக்கு காவல்துறையினரால் கைது செய்யபட்டனர். கடந்த ஒக்டோபரில் இருந்து கடல் மூலம் பிரித்தானியாவுக்குச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை இரண்டுமடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது.