கனடாவில் ஒரே நேரத்தில் 14-வீடுகள் பற்றி எரிந்து நாசம்
03 Jun,2019
கனடாவில் ஒரே நேரத்தில் 14-வீடுகள் தீ பிடித்து எரிந்ததில் பெரும் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.
இந்j நிலையில், நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்து தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கட்டுக்கடங்கா தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், இது தொடர்பில் பொலிஸாரினால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த தீ விபத்து, கனடாவின் பெடல் ப்ரேரி மெடிஸ் செட்டில்மெண்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.