பஞ்சாபில் 3 வயது சிறுமி கற்பழிப்பு - தமிழ்நாட்டை சேர்ந்தவர் கைது
28 May,2019
பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் சுல்தான்பூர் லோதி கிராமத்தில் பீகாரை சேர்ந்த ஒரு தொழிலாளி தங்கியிருந்தார். அவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது 3 வயது மகளை பக்கத்தில் ஒரு அறையில் தங்கியிருந்த கணேஷ் (55) என்பவர் ஏமாற்றி தனது அறைக்கு அழைத்துச்சென்று கற்பழித்தார். சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சிறுமியை மீட்டனர். கணேஷை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் கணேஷ் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என தெரிந்தது. கைதான அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.