சரித்திரம் மீண்டும் சுழர்கிறது
16 May,2019
உலக வரை படத்தில்
ஒரு சிறு துளி போல்
இலங்கை என்று
ஒரு தீவு
ஓடிக்கொண்டே
இருக்கிறது இரத்தம்
சிங்கள பெரும் தேசியமும்
மதவாதமும் இனவாதவும்
வளர்ந்து விட்ட சிறு தீவில்
சரித்திரம் மீண்டும் மீண்டும்
சுழல்கிறது
யாருக்குமே அமைதி
இல்லாத தேசமாகிப்போனது
விஷம் விதைத்தவர்கள்
எல்லாம் வினையை
அறுபடை செய்துகொண்டு
இருக்கிறார்கள்
அமைதியாகவே இருக்கிறார்
புத்தர் மட்டும்
அந்த ஆலமரத்தடியில்
யாரும் அவர் வழியை
பின்பற்ரவில்லை
என்ற கவலையோடு .
uthayakumar