அல்லாவுக்கும் அந்தோனிக்கும் கொழுவல்.
17 May,2019
அன்று..
புட்டுக்கும் தேங்காய் பூவுக்கும் கொழுவல்..
பரிகாரம்
சொந்த மொழி பேசிய சொந்தவனை
எதிரி என்று வரிந்து
பொது எதிரியை நண்பனாக்கி
காட்டிக் கொடுத்தோம்
வெட்டிக் கொன்றோம்
துரத்தி அடித்ததோம்
கள்ளமாய் காணி பிடித்தோம்..
கிழக்கின்
பூர்வகுடிகளை அகதியாக்கினோம்
வடக்கில்
பள்ளிவாசல்களில் ஆயுதங்கள் குவித்து
ஆயத்தமானோம்.
அதற்குள்..
வரிகளுக்கு விளங்கிவிட
கூட்டோடு காலி பண்ணி விட்டது
அசைவது அசையாதது இழந்து
புத்தளத்தை அடைந்தோம்.
அல்லாவின் நவீன தூதன்
அஷ்ரப்பின் உதவியுடன்
அடிப்படைவாத வெறிக்குள்
மூழ்கினோம்..
ஹிஸ்புல்லாவின் வழியில்
ஊர்காவல் படை அமைத்தோம்...
மிச்ச சொச்ச
சொந்த மொழி பேசும்
சொந்தங்களையும்
குந்த விடாமல்
குதறித்தள்ளினோம்..
சிவன் பிள்ளைகளை
அல்லாவின் சிஷ்யைகள் ஆக்கினோம்..
எங்கள் பிள்ளைகளுக்கு
காசும் கல்யாணமும் செய்து வைத்தோம்.
குடித்தொகையை
அளவு கணக்கின்றி பெருக்கித்தள்ளினோம்.
முள்ளிவாய்க்கால் என்பது
பெருந்துயர் என்கிறார்கள்
நாங்கள் பாட்டாசு போட்டவர்கள்
கூட்டத்தில்
பாற்சோறு உண்டோம்.
கூடிக் களித்தோம்..
கொண்டாடி மகிழ்ந்தோம்.
எமது காட்டிக் கொடுப்பை
உளவுப் பணி என்றோம்
சிறீலங்கா மாதாவுக்கான
சீரிய கடமை என்றோம்
எம்மை நாமே மெச்சி நின்றோம்..
பெரும் மானுடத் துயரை
சிம்பிளாய் கடந்து போனோம்.
காலச் சக்கரம்
கடந்து போனது..
எங்கள் உண்மை முகம் வெளியில்
வந்தது..
அல்லாவுக்கும் அந்நோனியாருக்கும்
கொழுவல் போட்டோம்..
மீண்டும்
சொந்த மொழி பேசியவனை
கொன்று குவித்தோம்.
புனிதப் போரின்
அத்தியாயம்
இஸ்லாமிய அரசின் கீழ் என்றோம்.
எங்கள் இரத்தமும்
அவன் இரத்தமும்
ஒன்றே என்பது மறந்தோம்..
எங்கள் தோலும்
அவன் தோலும்
ஒன்றே என்பது தொலைத்தோம்..
எங்கள் ஆடையும்
அவனின் ஆடையும்
ஒன்றே என்பது வெறுத்தோம்..
எங்கள் மொழியும்
அவன் மொழியும்
ஒன்றே என்பதை கிடப்பில் போட்டோம்..
அராபிய எடுபிடிக்குள்
எண்ணெய் வள செல்வச் செழிப்புக்குள்
இஸ்லாமிய அடிப்படைவாதத்துள்
எம்மை மூழ்கி எடுத்தோம்
வார்ப்புக்களை வளர்த்து விட்டோம்.
இன்று..
நிம்மதி தொலைத்தோம்.
செய்த பாவத்தின்
பலனை அனுபவிக்கிறோம்..
நாமே நம்மை
இஸ்லாமிய ஆட்சியின்
குடிகளாகச் சூடிக் கொண்டதும்
வெறுப்பை வளர்த்ததும் தான் மிச்சம்.
TAMILAN