மாணவியை சீரழித்த ஆட்டோ டிரைவர்!
06 May,2019
ஈரோட்டில் ஆசை வார்த்தை கூறி 8-ம் வகுப்பு மாணவியை சீரழித்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது 32). ஆட்டோ டிரைவர் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ராமு ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு சென்று வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராமு அந்த மாணவிடம் பழகி வந்தார்.
மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் இந்த சிறுமி வீட்டில் இருந்தார். நேற்று ராமு மாணவி வீட்டிற்கு சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்து மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ராமு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ராமு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஈரோடு மகளிர் போலீசார் ராமு மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.