பூவையே... நீ பூவல்ல... வேர்!
08 Mar,2019
x
காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும்
பூவல்ல நீ!
நச்சுக் காற்றை உள்ளிழுத்து
மூச்சுக் காற்றை வெளியிடும்
இலையுமல்ல நீ!
குரங்குகள் குந்தி
பழங்கள் தின்னும்
கிளையுமல்ல நீ!
விரிந்து பரந்த
கிளைகளை தாங்கும்
அடி மரமுமல்ல நீ!
கல்லுாரி முடிக்கும் முன்னே
காதல் கணை உன் மீது
பாயலாம்!
தேர்வெழுதும் நேரத்தில்
தெரு முனை போராட்டம்
உன்னை அழைக்கலாம்!
விமான பயணம்
வெளிநாட்டு வேலை
மயக்கத்தை தரலாம்!
கணவன் - மனைவி
உறவில் விரிசல்
எப்போதும் விழலாம்!
தாம்பத்ய வாழ்க்கையில்
பிறந்த - புகுந்த வீடு
போர்க்களம் ஆகலாம்!
காலம் மாறினாலும்
கலாசாரம், பண்பாட்டை
கட்டிக் காப்பவள் நீ!
வேதனைகளையும்
சோதனைகளையும்
சாதனைகளாக்க
பழகிக் கொள்!
ஒருநாளில் அழியும்
பூவல்ல நீ...
ஊழிக் காற்றையும் தாங்கும்
சமுதாய மரத்தின் வேர் நீ!
பாரதி சேகர்