சமையல் டிப்ஸ்
08 Mar,2019
பக்கோடா செய்ய, கடலை மாவுக்கு பதிலாக, கடலை பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்சியில் கரகரப்பாக அரைத்து, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் கலந்து செய்தால், மொறுமொறுப்பாக இருக்கும்
* பிரியாணி காரமாக இருந்தால், 'கார்ன்பிளேக்ஸ்' ஒரு கரண்டி எடுத்து, வெறும் வாணலியில் ஒரு நிமிடம் சூடாக்கி சேர்த்தால், காரம் குறைந்து விடும்; ருசியாகவும் இருக்கும்
* பருப்பு சாதத்திற்கு, பருப்பை வேக வைக்கும்போதே, முருங்கை காயின் நடுவில் உள்ள சதை பகுதியையும் எடுத்து வேக வைத்து, சாதத்துடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்
* இஞ்சி, பூண்டு விழுது அரைக்கும்போது, அதனுடன், உப்பு துாள் ஒரு தேக்கரண்டி, சூடான எண்ணெய்யும் கலந்து வைத்தால், நீண்ட நாட்களுக்கு, 'ப்ரெஷ்' ஆக இருக்கும்.