டென்மார்க்கில் பிள்ளைகளை பெற்றோரே பராமரிக்க ஏற்பாடு.-கர்ப்பிணி பெண்கள்ஆபத்தில்
30 Dec,2018
டென்மார்க்கில் பிள்ளைகள் பராமரிப்பு என்பது எப்போதுமே பிரச்சனைக்குரிய விடயமாகவே இருந்து வருகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த காலத்திற்குக் காலம் பற்பல யோசனைகள் வெளியாவதும் வழமை.
இதுபோல ஒரு யோசனை இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெற்றோரே தமது பிள்ளைகளை பராமரிக்க முடியும். இதற்காக அவர்களுக்கு நகரசபை சம்பளமும் வழங்கும்.
1868 குறோணர்களில் இருந்து 7481 குறோணர்கள் வரை இந்த சம்பளமானது வேறுபடுகிறது. இத்தகைய ஏற்பாட்டிற்கு டென்மார்க்கில் உள்ள 98 நகரசபைகளில் அரைப்பங்கு நகரசபைகள் இணக்கம் தெரிவித்துள்ளன. வரும் முதலாம் திகதி மேலும் மூன்று நகரசபைகள் இணைகின்றன.
பிள்ளைகளை சுமார் 24 வாரங்கள் பராமரிக்க இந்த ஏற்பாடு வழி செய்வதாக செய்திகள் கூறுகின்றன. பிறந்த பிள்ளையை வோக்கஸ்ரூவ என்ற பராமரிப்பிற்கு ஒப்படைப்பதை தாமதித்தல், அல்லது பாடசாலை போக முன்னர் வரும் ஆறு மாதங்களில் பராமரித்தல் என்று பல பிரிவுகள் உள்ளன.
ஆனால் பெற்றோர் பராமரித்தால் அவர்கள் வேலைக்கு போவது, பிள்ளைகள் மற்றைய பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது, மொழியறிவு போன்றவற்றில் பின்னடைவு ஏற்படும் என்ற பழைய கருத்தொன்றும் உள்ளது.
மறுபுறம் பராமரிப்பு நிலையங்கள் செல்வும் பிள்ளைகள், உளவியலாளர் கூறுவது போல அபார திறமை பெறுவது உண்மையோ உண்மை என்பதற்கு வலுவான ஆதாரம் இருக்கிறதா என்பது ஒரு கேள்வி.
இருப்பினும் இன்றைய காலைச் செய்தியில் இந்த விவகாரம் முக்கிய இடம் பிடித்தது. செய்தி இப்படி இருந்தாலும் நகரசபைகள் இதற்குள் ஆயிரம் முடிச்சுக்களை வைத்திருப்பார்கள். விவகாரத்தை தட்டையாக பார்க்காமல் இப்படியொரு செய்தி தொலைக்காட்சிகளில் உலாப்போகிறது. உங்கள் நிலைப்பாடு என்னவென நகரசபைகளிடம் விசாரித்தால் உண்மைச் சூத்திரங்களை புரியமுடியுமன்றோ?
ஆபத்தில் டென்மார்க் கர்ப்பிணி பெண்கள்
டென்மார்க்கில் உள்ள கர்ப்பிணிப் பெண்களில் பலர் சர்க்கரை வியாதி இலக்கம் இரண்டில் சிக்குண்டு துயர்படும் ஆபத்து இருப்பதாக இன்றைய காலைச் செய்தி தெரிவிக்கிறது.
காரணம் கர்ப்பிணி பெண்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவது டென்மார்க்கில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 2008ம் ஆண்டு 1758 கர்ப்பிணிகள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தனர், 2014ல் இந்தத் தொகை 2059 ஆக உயர்ந்தது 2017ம் ஆண்டு 2532 ஆக எகிறியிருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் இவ்வாறு சர்க்கரை வியாதி – 2 ஐ சந்திக்க பல காரணங்கள் உள்ளன. ஆனால் முக்கியமான காரணம் இப்பெண்கள் அளவுக்கு மீறிய நிறை கொண்டிருப்பதாகும்.
2017ம் ஆண்டு கணக்குகளின்படி டென்மார்க்கில் ஒவ்வொரு மூன்று பெண்களுக்கும் ஒருவர் என்ற அடிப்படையில் நிறை கூடிய பெண்களாக இருக்கிறார்கள். இதனால் சர்க்கரை வியாதி – 2 ற்கான ஆபத்து அதிகமாகவே இருக்கிறது.
தாய் சர்க்கரை வியாதியடைந்திருந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும் இதனால் வயிற்றில் உள்ள குழந்தைஎ அதிக சர்க்கரையை உவியும். இதனால் குழந்தைக்கு பசி அதிகரிக்கும். விளைவு அது அதிக உணவை உண்ணும், முடிவாக குழந்தை நிறைகூடிப் பிறக்கும்.
பிற்காலத்தில் இந்த பாதிப்பு கண்ட தாய் பிள்ளை இருவருமே சர்க்கரை வியாதி – 2 னால் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
நிறை கூடியோர் அதிகமாக இருக்கும் ஐரோப்பிய நாடு டென்மார்க் என்பது கவனிக்கத்தக்கது.
TKS.S.K.DURAI