ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடும்! நீங்களும் சரியில்லை! இருமியபடி பேசினாரா ஜெயலலிதா? உறைய வைக்கும் video
20 Oct,2022
சென்னை: உயிரிழக்கும் முன் ஜெயலலிதா பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த ரிப்போர்ட் 600 பக்கங்களுக்கும் மேல் உள்ளது.
இதில் பல அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர்.
அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அறிக்கை
இந்த நிலையில் உயிரிழக்கும் முன் ஜெயலலிதா பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது.,
இந்த ஆடியோவில் ஜெயலலிதா இருமியபடி பேசி உள்ளார். அவரிடம், அவரின் தனிப்பட்ட மருத்துவர் சிவக்குமார் பேசியது இந்த ஆடியோவில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது .
இதில் ஜெயலலிதாவின் குரல் மிகவும் சோகமாக இருக்கிறது. இந்த ஆடியோ அவர் உயிர் இழக்கும் ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.