தமிழகம் திரும்ப விரும்புபவர்களுக்கு இணையத்தள பதிவை ஆரம்பித்தது அரசு
30 Apr,2020
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்துகொள்வதற்காக இணையத்தள முகவரியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நாட்டிற்குத் திரும்புவதற்கு இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழகம் திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காக இணையப் பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தகவல்களை பெறுவதற்காகவும், எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தனிமைப்படுத்துதல் வசதிகளை ஏற்படுத்தவும் இணையப் பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யுமாற தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது