ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தமுடியுமா? - பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!
29 Apr,2020
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு காலத்தில், 'ஒரு நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, ஜூன் 1ஆம் தேதி முதல், நாடு முழுதும் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்த மாநிலத்தில் வசிக்காததால், அவர்களால் ரேஷன் பொருட்களை பெற முடியவில்லை. அதனால், ஒருநாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, ஊரடங்கு காலத்தில் அமல்படுத்த, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். ரேஷன் கார்டு போன்ற அடையாள அட்டை இல்லாததால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, எந்த சலுகைகளும் வழங்க, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மறுத்து வருகின்றன என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது .இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ரமணா, சஞ்சய் கவுல், கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'ஊரடங்கு காலத்தில், ஒரு நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த முடியுமா என்பது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.