சீனாவுக்கு தண்ணி காட்டிய இந்தியா போதாக்குறைக்கு எல்லையில் ராணுவத்தையும் நிறுத்தியது
29 Apr,2020
கொரோனாவை உலகிற்கு பரப்பி விட்டு. அதில் இருந்து மீண்ட சீனா தற்போது அல்லாடும் உலக நாடுகளை குறிவைத்து அன் நாடுகளில் உள்ள கம்பெனிகளின் பங்குகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா வைரஸின் தாயகம் என கருதப்படும் சீனா இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது. உலகமே லாக்டவுனில் இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் சீனா, இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்க ஆரம்பித்தது. எனவே எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்களை, சீனா நிறுவனங்கள் கையகப்படுத்தும் சூழல் உருவாகும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் உடனே சுதாரித்து கொண்ட மத்திய அரசு, அந்திய நேரடி முதலீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தற்போது விதித்துள்ளது. சீனாவிற்கு செக் வைக்கும் விதமாகதான் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவும் சூழலில், சீனாவிற்கு செக் வைக்கும் விதமாக மற்றொரு அதிரடி இந்தியா மேற்கொண்டுள்ளது. அது என்னவென்றால் எல்லையில் தனது ராணுவத்தை இந்தியா குவித்துள்ளது.