1000 அடியில் மீதேனை தோண்டி எடுக்கும் இந்தியா இந்த 2 வயது குழந்தையை எடுக்கவில்லை ஏன் ?

29 Oct,2019
 


 
தேடி தேடி விவசாய நிலங்களை பார்த்து, 1000 அடி வரை தோண்டி மீதேன் மற்றும் கனிமங்களை எடுகும் இந்தியா. மணப்பாறையில் உள்ள 28 அடி ஆளத்தில் விழுந்த குழந்தையை ஏன் எடுக்கவில்லை ? முதலில் 28 அடியில் விழுந்து இருந்த குழந்தையை மீட்க்கிறோம் என்று கூறி மீட்க்கப் போய், பின்னர் 108 அடிக்கு கீழே தள்ளி விட்டுள்ளார்கள் இந்த தரம் கெட்ட மீட்ப்பு பணியாளர்கள். அரசு விரைந்து செயல்பட்டு இருந் ராணுவத்தை இறக்கி இருக்க முடியும். மகாவலி புரத்தில் குப்பை எடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த மோடி எங்கே போய்விட்டார்.
அட எந்த ஒரு டாப்பிக்குமே கிடைக்கலயே என்று இருந்த மீடியாக்களுக்கு இது ஒரு சூப்பர் தீனி. சோக கீதங்களை போட்டுஸ “மீட்க்கப்படுமா குழந்தை” என்று பட்டி மன்றம் ஆரம்பித்துவிட்டார்கள். டி,ஆ.பி ரேட் எகிறவேண்டும் என்று மேலும் சில மீடியாக்கள் நேரடியாக களம் சென்று முகாமிட்டுள்ளார்கள். இது இப்படி இருக்க அச் சிறுவன் காப்பாற்றப்படவேண்டும் என்று அரசியல் பிரபலங்களும் , நடிகர்களும் வேண்டு கோள் விடுத்து. தமது முகத்தையும் ஒரு முறை TV ல் காட்டி சந்தோஷமடைகிறார்கள்.
ஹைட்ரோ கார்பன் எங்கே இருக்கிறது என்று நிலத்தை தோண்டாமலே கண்டு பிடிக்கும் கருவிகள் இந்தியாவில் ஏராளம். ஆனால் ஒரு தமிழன் குழந்தை இன்று மண்ணில் புதைந்தால், அதனை மிட்க்க எந்த ஒரு பெரிய நிறுவனங்களும் முன் வரவே இல்லை. ஏதோ மணல்பாறை என்னும் இடத்தில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தின் பிள்ளை அல்லவா ஸ காப்பாறினால் என்ன மண்ணில் புதைந்து போனால் என்ன ? நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்
சிறுவன் சுஜித் விழுந்த ஆழ்துளைக் கிணறு மூடப்பட்டது!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில், சிறுவன் சுஜித்தின் மரணத்திற்கு காரணமான ஆழ்துளைக் கிணறு இன்று காலை மூடப்பட்டது.
சிறுவன் உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டதும், நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு, சிறுவனின் உடலை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்டதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, சிறுவன் சுஜித் விழுந்த ஆழ்துளைக் கிணறு மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மூடப்பட்டது.
சிறுவன் சுஜித் உயிரிழப்பு.. ஆழ்துளைக் கிணற்றில் இருந்து உடல் மீட்பு..!
 
மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் 650 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 நாட்களான நிலையில் அழுகிய நிலையில் சிறுவன் உடல் மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ – கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன், கடந்த 25 ந்தேதி மாலை 5:40 மணி அளவில் வீட்டுமுன்பு விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் மூடப்படாமல் இருந்த 650 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
சிறுவன் சுஜித்தை மீட்க முதலில் தீயணைப்பு வீரர்கள், ரெஸ்கியூ ரோபோ மணிகண்டன், தமிழக பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஸ்டன்ட் கலைஞர்கள் அன்பறிவு, ஐஐடி ஆராய்சியாளர்கள் என பலரும் சிறுவன் சுஜித்தை மீட்க முயற்சி மேற்கொண்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் அந்த ஆழ்துளை கிணற்றுக்கு இணையான கிணறு தோண்டும் பணியும் கடுமையான பாறைகளால் கை கொடுக்கவில்லை.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்க ஒவ்வொருவர் புதிய புதிய முயற்சிகள் மேற்கொண்ட போதும் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக 10 அடி ஆழத்தில் இருந்து 25 அடி, 40 அடி, 65 அடி என நழுவி 88 வது அடிக்கு சென்றதால் மீட்புப் பணி மேலும் சவாலானது.
துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீட்புப் பணிகளை பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளை வழங்கிச் சென்றாலும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல் நாளில் இருந்தே அங்கேயே தங்கி இருந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும் அங்கேயே இருந்தனர். காவல்துறையினர் தன்னார்வலர்களும் பொறுப்புடன் கடமையாற்றினர்.
சிறுவன் சிக்கிய உள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் 10 அடி தூரத்தில் 1 மீட்டர் சுற்றளவில் 90 அடி ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் உள் வீரர்களை இறக்கி 10 அடி தூரத்திற்கு டிரில்லிங் செய்து சிறுவன் சிக்கியுள்ள குழாய்க்குள் சென்று சிறுவனை மீட்க தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி ஓ.என்.ஜி.சி 300 ரிக் எந்திரம், எல் அண்ட் டி கம்பெனியின் 350 ரிக் எந்திரம், ஆகியவற்றை கொண்டு ஆழ்துளை கிணற்றுக்கு துளையிடப்பட்டது. அதுவும் பாறையில் துளையிட முடியாமல் தவித்ததால் பாறைகளை விரைவாக துளைத்தெடுக்கும் போர்வெல் லாரி வரவழைக்கப்பட்டது.
ஒரு மீட்டர் சுற்றளவுக்கு 6 இடங்களில் போர்வெல் துளை போட்டு, பின்னர் ரிக் எந்திரத்தால் உடைத்து எடுத்தனர். இதுவரை 65 அடிக்கு போர்வெல் துளையிடப்பட்ட 55 அடிக்கு ரிக் எந்திரம் உடைத்து துளையிட்டுள்ளது. 90 அடிக்கு துளையிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
சிறுவன் சுஜித் மீட்பு பணி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு தெரிந்து கொண்டதாகவும், சிறுவன் விரைவாக மீட்கப்படவேண்டும் என்றும் பிரதமர் மோடி டிவிட் வெளியிட்டிருந்தார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சிறுவன் மீட்பு பணி குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டார்..!
பலூன் மூலம் மீட்பது, கம்பியை உள்ளே விட்டு மீட்பது என்று பலரது ஆலோசனைகளும் ,அறிவுரைகளும் மீட்பு பணியின் போது செயல்படுத்தப்பட்டாலும் சிறுவனை மீட்கும் பணி சவாலானது என்பதை விட பல சவால்களை தகர்த்து எரிந்து சிறுவனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அதிகாலை 2:22 மணியளவில் சிறுவன் உயிரிழப்பை ராதாகிருஷ்ணன் அதிகாரபூர்வமாக அறிவித்தார், திங்கட்கிழமை இரவு 10:30 மணி அளவில் சிறுவன் சுஜித் தவறி விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாகவும், சிறுவனின் உடல் அழுகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
5 நாட்களாக 80 மணி நேரம் சிறுவனை உயிருடன் மீட்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் சிறுவன் மீண்டு வர வேண்டும் என்ற அனைத்து தாயுள்ளம் கொண்டவர்களின் வேண்டுதல்களும் வீணாகிபோனது தான் வேதனையின் உச்சம்..!
பயன்பாடில்லா மூடப்படாத தரைமட்ட ஆழ்துளை கிணறுகள் எத்தனை விபரீதமானது என்பதற்கு சிறுவன் சுஜித்தின் மரணம் ஒரு உதாரணம்



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies