16 வருடங்களுக்குப் பின் யாழ்ப்பாணம் சென்றவருக்கு பாதி வழியில் ஏற்பட்ட விபரீதம்!
05 Apr,2019
16 வருடங்களுக்குப் பின் யாழ்ப்பாணம் வர முயற்சித்த ஒருவர் கேரளாவின் Kempegowda விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
2002ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் இந்தியா சென்ற 38 வயதான விபுலானந்தம் தாசரா என்ற இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2018ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் ஒரு கடவுச்சீட்டு தயாரித்துள்ளார்.
இந்நிலையில் அவரின் சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு செல்லும் நோக்கில் இலங்கை வர முயற்சித்துள்ளார்.
இதன்போதே கேரளாவின் Kempegowda விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பல்வேறு சட்டங்களை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.