கள்ளகாதல் ஜோடி செய்த செயலால் மிரண்டுபோன பயணிகள், வெளியான அதிரவைக்கும் சம்பவம்.!
10 Nov,2018
ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே புளியங்குளத்தில் வசித்து வருபவர் நயினார். இவரது மனைவி இலக்கியா இவர்களுக்கு ரஞ்சனா என்ற 2 வயது மகள் இருந்தார்.
இந்நிலையில் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று நவம்பர் 5-ம் தேதி புளியங்குளம் திரும்பிய இலக்கியா வீட்டிற்கு சென்று சேரவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தார் இதுகுறித்து போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சாத்தான்குளத்துக்கு சென்ற அரசுபேருந்தில் குழந்தையுடன் சென்ற ஒரு ஜோடி திடீரென்று மயங்கியுள்ளனர்.
பின்னர் குழந்தை அழுகுரல் சத்தம் தொடர்ந்து கேட்டதால் பயணிகள் அவர்களை பார்த்துள்ளனர். அப்பொழுது மயங்கிய நிலையில் அவர்கள் இருப்பதை கண்டதும் ஓட்டுநர் பேருந்தை மருத்துமனைக்கு திரும்பினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவருமே ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர் . பிறகு இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் தற்கொலை செய்த 2 பேரும் கள்ளக்காதல் ஜோடி என கண்டறிந்தனர்.
மேலும் இறந்தது காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த இலக்கியாவும், அவரது, கணவரின் அண்ணன் மணிகண்டன் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் அவர்களுக்கு இடையே தவறான பழக்கம் இருந்துள்ளதும், இதுகுறித்து போலீசிற்கு புகார் சென்றதால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.