''ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் கொலைக்கு காரணம் யார்
28 Oct,2018
''ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் கொலைக்கு காரணம் யார் என்பது குறித்து ராஜபக்ேஷ தெரிவித்த கருத்துக்கு காங்.,- தி.மு.க., பதில் என்ன,'' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.சிவகங்கை அருகே காளையார்கோவிலில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர் கூறியதாவது:இலங்கையில் ராஜபக்ேஷ மீண்டும் பிரதமர் ஆகியிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மத்திய காங்., அரசு உதவியதாக தெரிவித்து இருந்தார்.அதற்கு இன்று வரை காங்கிரசும், தி.மு.க.,வும் பதிலளிக்கவில்லை. இன்னும் 2000 ஆண்டுகள் ஆனாலும், தமிழர்களுக்கு நடந்த இக்கொடுமை சரித்திரத்தில் அகலாது. இலங்கை தமிழர்கள் மீது அன்பும், ஆதரவும் காட்டும் துணிச்சல் மிக்க பிரதமர் மோடி.ராஜிவ் கொலை கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்கின்றனர். கவர்னர் நடவடிக்கையிலும் யாரும் தலையிட முடியாது, என்றார்.