இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை நீடித்தது பாகிஸ்தான் !
19 Jul,2025
இந்தியாவுக்கு சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள், இராணுவ விமானங்கள், பொது போக்குவரத்து விமானங்கள் போன்றவை பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கபட்டிருந்த தடை பாகிஸ்தான் அரசாங்கத்தால் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு தலையடுத்து இந்தியா ஒப்பரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை முன்னெடுத்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்ககள் மீது தாக்குதலை மேற்கொண்டது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவுக்கு சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள், இராணுவ விமானங்கள், பொது போக்குவரத்து விமானங்கள் போன்றவை பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசாங்கத்தால் தடை விதிக்கப்ப் அந்நாட்டு அரசு தடைவிதித்தது.
இந்த நிலையில் குறித்த தடை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி காலை 5.19 மணி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி வரை பாகிஸ்தானின் அனைத்து விமானங்களும் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இந்திய அரசு தடைவிதித்தது. இதேவேளை, கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி பாகிஸ்தான் அரசு தங்களது வான்வெளியை இந்தியா பயன்படுத்த தடை வித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.