தாய்லாந்து புலியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இந்திய இளைஞரை!புலி திடீரென தாக்கி
31 May,2025
தாய்லாந்து வன உயிரியல் பூங்காவில், புலியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இந்திய இளைஞரை, புலி திடீரென தாக்கியது.
தாய்லாந்து நாட்டில் பிரபலமான சுற்றுலா நடவடிக்கையாக புலியைத் தொட்டு, அதற்கு ஆகாரம் கொடுப்பது, அதன் மீது சாய்ந்தும், நம் மீது அதனை ஏறவைத்தும், அதன் வாலைப் பிடித்தப்படியும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை இருந்துவருகிறது.
இதற்காக உலகம் முழுக்க இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்து நாட்டிற்குச் சென்றுவருகின்றனர். அதிலும், யூடியூபர்களின் பயணத்தால், தாய்லாந்தில் தற்போது இந்தச் சுற்றுலா நடவடிக்கை மிகவும் பிரபலமாகிவருகிறது.
இந்த நடவடிக்கையில், வன உயிரியல் பூங்கா ஊழியரும், புலியின் பயிற்சியாளருமான ஒருவர் எப்போதும் புலியுடன் இருப்பார்கள். அவர்களின் வழிகாட்டுதலின்படி புலி நடந்துகொள்ளும், அதேபோல், சுற்றுலாப்பயணிகளும் அந்த நபர் சொல்வதைப் பின்பற்றி புலியுடன் தங்கள் விருப்பம் போல் புகைப்படம் எடுத்துக்கொள்வர்.
அந்தவகையில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் தாய்லாந்து நாட்டிற்குச் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளார். அங்கு ஃபூகெட் வன உயிரியல் பூங்காவில், புலியைக் கண்டு ரசிக்கவும், அதனுடன் போட்டோ எடுக்கவும் முடிவு செய்த அவருக்கு அதிர்ச்சிக்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்திலும் வைரலாகிவருகிறது.