தமிழ் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு;என்ன நடந்தது?

29 Jan,2025
 

 
 
தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 13 மீனவர்கள் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
 
புதுச்சேரியின் காரைக்கால், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று இரவு (ஜனவரி 27) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
 
இவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல், தினேஷ், காரத்திகேசன், செந்தமிழ், பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன், வெற்றிவேல், தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடியை சேர்ந்த நவெந்து, வானகிரியை சேர்ந்த ராஜேந்திரன், ராம்கி, நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார், நந்தகுமார், பாபு, குமரன் ஆகிய 13 பேர் ஜனவரி 26ம் தேதி காலை 10 மணியளவில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்றனர்.
 
 
 
நேற்று (ஜனவரி 27) இரவு 9.30 மணியளவில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 13 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த கைது நடவடிக்கையின்போது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. அந்தத் துப்பாக்கிச் சூட்டில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பாபு ஆகியோர் காயமடைந்துள்ளனர். மேலும் மூவருக்கு துப்பாக்கிச்சூடு அல்லாத சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
 
கைது செய்யப்பட்ட மீனவர்கள்
 
 
 
இந்த சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
 
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மீன்பிடிப் படகில் இருந்த 13 மீனவர்களில் 2 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
 
மேலும் மூன்று மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு, அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறோம்.
 
டெல்லியில் உள்ள இலங்கைத் தூதர் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, இந்தச் சம்பவம் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரகமும் இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்திடம் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றிருக்கிறது.
 
மீனவர்கள் தொடர்பான விவகாரங்களில் மனிதநேய உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டுமென்பதை இந்திய அரசு எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளது. பலப்பிரயோகம் செய்வது எந்தத் தருணத்திலும் ஏற்கத்தக்கதல்ல” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
‘கடற்படை வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்து முயன்றனர்’
 
 
படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகு
 
ஆனால், இலங்கை கடற்படை வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மீனவர்கள் குழு ஆக்ரோஷமாக தாக்க முயன்றதாலேயே துப்பாக்கி பிரயோகம் நடந்ததாக இலங்கை கடற்படை விளக்கமளித்துள்ளது.
 
“ஜனவரி 27ஆம் தேதியன்று இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த ஏராளமான இந்திய மீன்பிடிக் கப்பல்களை வடக்கு கடற்படைக் கட்டளை அவதானித்தது.
 
கடற்படை கப்பல்களை அங்கு அனுப்புவதன் மூலம் அந்த மீன்பிடி படகுகளை நாட்டின் கடல் எல்லையில் இருந்து அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 
அப்போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு, மீன் வளங்களை சேகரித்துக்கொண்டிருந்த பதிமூன்று இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
 
இந்திய மீன்பிடிக் கப்பலை கடற்படையினர் கைது செய்யவிருந்த போது, கடற்படையினரின் உத்தரவை மீறியதாலும் மேலும் கலவரமான நடத்தையாலும் கடற்படைக் குழுவொன்று கப்பலில் ஏறியுள்ளது.
 
அப்போது அதில் இருந்த மீனவர்கள் தங்கள் கப்பலுக்குள் கடற்படையினர் ஏற விடாமல் தடுக்கும் வகையில் இடையூறு விளைவித்து, கடும் எதிர்ப்பை காட்டி, மீன்பிடி கப்பலை ஆக்ரோஷமாக கையாண்டனர்.
 
கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலில் ஏறும்போது, கடற்படை வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மீனவர்கள் குழு ஆக்ரோஷமாக தாக்க முயன்றது.
 
கடற்படை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்டபோது, அந்த துப்பாக்கியின் செயல்பாட்டினால் இரண்டு மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.
 
கடற்படையினரால் இரு மீனவர்களுக்கும் அடிப்படை முதலுதவிகளை வழங்கியதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக கடற்படையினர் காங்கேசன்துறை காவல் துறையிடம் புகார் செய்துள்ளனர்.
 
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகும் 11 மீனவர்களும் ஜனவரி 28ஆம் தேதி காலையில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் மேல் நடவடிக்கைக்காக யாழ்மயிலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்” என இலங்கை கடற்படை கூறியுள்ளது.
 
 
 இளங்குமரன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
 
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவித்து இந்தியாவுக்கு அழைத்துவர வேண்டுமென புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
 
இதற்கிடையில், காயம்பட்ட மீனவர்களை மருத்துவமனைக்குச் சென்று பார்த்த தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி, இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
 
உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய இளங்குமரன், “இந்திய மீனவர்கள் பலர் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி எங்கள் கடல் வளத்தை அழித்து வருகின்றனர். நேற்று இதுபோல வந்தவர்களை கடற்படையினர் கைதுசெய்ய முயன்றபோது அவர்கள், கடற்படையினரையும் கடத்திக்கொண்டு இந்தியா செல்ல முயன்றபோது துப்பாக்கிச் சூடு நடந்தது.
 
முந்தைய அரசை நம்பாமல் உங்களுக்கு வாக்களித்தோம், எங்கள் வலைகள் அவர்களால் அறுக்கப்படுகின்றன என்று எங்கள் மக்கள் கேட்கிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. காயம்பட்ட மீனவர்களை குணப்படுத்தி இந்தியாவுக்கு அனுப்புவோம். ஆனால், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்படும்” என்கிறார்.
 
 
படக்குறிப்பு, (கோப்புப்படம்)
 
தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் மீது நீண்ட நாட்களாக இதுபோன்ற தாக்குதல் நடக்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அப்படியான சூழல் ஏற்பட்டிருப்பதைத் தடுக்கவேண்டும் என்கிறார் புதுச்சேரியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் தேசிய மீனவர் பேரவையின் தலைவருமான என். இளங்கோ.
 
“பல ஆண்டுகளாக இந்தப் பிரச்னை இருந்து வருகிறது. இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்க, 2014ல் இருந்து 2016வரை நான்கு கட்டங்களாகப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
 
இந்தப் பேச்சு வார்த்தையில் இலங்கைத் தரப்பு, இந்திய வெளியுறவுத் துறை, தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் கலந்துகொண்டனர்.
 
இந்தப் பேச்சு வார்த்தைகளில் முடிவேதும் எடுக்கப்படவில்லை என்றாலும், அவை சுமுகமாகவே முடிவுக்கு வந்தன. இந்தப் பேச்சு வார்த்தைகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர்.
 
அதற்குப் பிறகு, பெரிதாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. இப்போது மீண்டும் இதுபோல நடக்கத் துவங்கியிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களில் கைதுசெய்யப்படும் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்” என்கிறார் இளங்கோ.
 
இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 10ஆம் தேதிவரை யாழ்ப்பாணச் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies