கடந்த 4 நாட்களாக துருக்கியில் தவித்த 400 விமான பயணிகள் மீட்பு
                  
                     16 Dec,2024
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 கடந்த 4 நாட்களாக துருக்கியில் தவித்த 400 விமான பயணிகள் இரண்டு விமானங்களில் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். கடந்த 12ம் தேதி துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து 400 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஒன்று இந்தியா புறப்படத் தயாராக இருந்தது. ஆனால் அந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
	 
	 
	அதனால் 400 பயணிகளும் துருக்கியில் சிக்கிக் கொண்டனர். தொடர் முயற்சிக்கு பின்னர் தனித்தனி விமானங்களில் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 200 பயணிகளுடன் புறப்பட்ட ஒரு விமானம் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு டெல்லி வந்தடைந்தது. அதேபோல் இரண்டாவது விமானம் நேற்று அதிகாலை மும்பை விமான நிலையத்தில் 200 பயணிகளுடன் தரையிறங்கியது.
	 
	மேலும், இண்டிகோ விமானம் சர்வர் செயலிழந்திருப்பது குறித்து டெல்லியின் ஐஜிஐ விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். துருக்கியில் இருந்து தாயகத்திற்குத் திரும்பிய பயணிகளின் முகத்தில் மகிழ்ச்சியடைந்தனர்