டாடா குழுமத்தை அடுத்து வழி நடத்தபோவது ரத்தன் டாடாவின் மருமகளா?
10 Oct,2024
டாடா குழுமத்தை அடுத்து வழி நடத்தபோவது ரத்தன் டாடாவின் மருமகளான மாயா டாடா என சொல்லப்படுகிறது
டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரின் டாடாவின் உயிர் பிரிந்தது. மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டாடா குழும தலைவராக 21 ஆண்டுகளாக இருந்து வந்த ரத்தன் டாடா, கடந்த 2012-ம் ஆண்டு அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றவர். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர். 2012 வரை டாடா குழுமத் தலைவராக இருந்த இவர் பின்னர், டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.