இந்தியாகேரள மாநிலத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனாவின் புதிய திரிபு
15 Dec,2023
கேரள மாநிலத்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் திரிபு பரவி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வைரஸ் தொற்று சிங்கப்பூரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் மருத்துவ பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கேரள மாநிலத்தில் குறித்த கொரோனா வைரஸ் திரிபு தொற்றுறுதியான 230 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக , ஊடக செய்திகளில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அங்கு தொற்றுறுதி செய்யப்பட்ட 1,104 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக . ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.