இந்தியாவிற்கு குற்றச்செயலுடன் தப்பி ஓடிய கனேடிய பிரஜையை கைது செய்ய நடவடிக்கை
14 Dec,2023
இந்தியாவிற்கு தப்பிச் சென்ற குற்றச்செயல் ஒன்றோடு தொடர்புடைய கனேடிய பிரஜையை கண்டுப்பிடிக்க இன்டர்போல் எனப்படும் பன்னாட்டுக் காவலகத்திடம் கனேடிய பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த ராஜ் குமார் மெஹ்மி (வயது 60) என்ற நபரே இவ்வாறு இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபருக்கு எதிராக 80 கிலோ கிராம் எடையுடைய கொக்கோய்ன் போதைப் பொருளை கனடாவிற்குள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மேலும், இந்த குற்றத்திற்காக அவருக்கு கனடிய நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட15 ஆண்டுகள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நோக்கிலே இவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இவரை கைது செய்யும் நோக்கில் கனேடிய அதிகாரிகள் பன்னாட்டுக் காவலகத்திடம் ஒத்துழைப்பினை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.