அரண்மனையை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் இந்திய இளவரசி!
16 Nov,2023
,
இந்திய மாநிலம், ராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்துள்ள உமைத் பவன் அரண்மனையை சொகுசு தங்குமிடம், ஆடம்பர திருமண மண்டபம் மற்றும் சுற்றுலா தலமாக மாற்றி சுயதொழில் செய்து வருகிறார் இளவரசி சிவரஞ்சனி ராஜ்யேவோ.
1929 நவம்பர் 18 -ம் திகதி தொடங்கிய உமைத் பவன் அரண்மனையின் கட்டமான பணிகள் மேற்கத்திய தொழில் நுட்பங்களுடன், இந்திய கலைநயத்துடன் நடைபெற்று 1943 -ம் ஆண்டு நிறைவு பெற்றது.
26 ஏக்கர் பரப்பளவில், 347 அறைகளைக் கொண்டுள்ள இந்த அரண்மனையானது ராஜபுத்திரர் காலத்தின் பெருமைக்கு சான்றாக உள்ளது. மேலும் இந்த அரண்மனை அரசு குடியிருப்பு, ஆடம்பரமான தாஜ் பேலஸ் ஓட்டல் மற்றும் ஒரு அருங்காட்சியகம் என மூன்று பகுதிகளாக செயல்பட்டது.
இதன் பின் 1971-ம் ஆண்டில் இருந்து சொகுசு தங்குமிடமாகவும் செயல்பட்டது. இதனை தாஜ் ஓட்டல் நிர்வாகம் நிர்வகித்து வரும் நிலையில், லக்சரியான பேலஸ் திருமண மண்டபமாகவும் செயல்படுகிறது. பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமணம் நடைபெற்றதும் இங்கு தான்.
இந்த அரண்மனையின் மன்னர் காஜ் சிங்கின் மூத்த மகள் சிவரஞ்சனி. அரண்மனைக்கு அதிகாரப்பூர்வ வாரிசாக இளைய சகோதரர் சிவராஜ் சிங் இருந்தாலும், சிவரஞ்சனி தான் தந்தையுடன் சேர்ந்து கோட்டைகள், அரண்மனை அருங்காட்சியங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவற்றின் வணிகத்தை பார்த்து வருகிறார்.
அதாவது, அரண்மனையின் சொத்துக்களை வணிகமாக்கி அதன் மூலம் வருமானத்தை பெற்று வருகிறார். இசை மீது ஆர்வம் கொண்ட இவர் பிரபலமான மெஹ்ரான்கர் கோட்டை மற்றும் அஹிசத்ரகர் கோட்டையில் இசை திருவிழாவையும் நடத்தி வருகிறார்.
ஒரு வருடத்திற்கு 8 மாதங்கள் திருவிழாக்கள் மற்றும் ஓட்டல்களால் ஜோத்பூரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், அரண்மனையால் நல்ல வருமானம் பெருகிக் கொண்டிருக்கிறது.