சண்டையை நிறுத்த மோதியால் முடியுமா? இரான் வைத்திருக்கும் நம்பிக்கை என்ன?

09 Nov,2023
 

 
 
அக்டோபர் 7 ஆம் தேதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது ஏராளமான ராக்கெட்டுகளை ஏவி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இதற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி, இது "தீவிரவாத தாக்குதல்" என்று கூறினார்.
 
அன்றிலிருந்து காஸா பகுதியில் இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடர்கிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில், இரான் அதிபர் எப்ரஹீம் ரையீஸியும் பிரதமர் நரேந்திர மோதியும் திங்கள்கிழமை தொலைபேசியில் பேசினர்.
 
இந்த உரையாடலுக்குப் பிறகு, காஸா விவகாரத்தில் இரானும் இந்தியாவும் ஒன்றிணைந்து இஸ்ரேலை சமாதானப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
 
உரையாடல் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்த பிரதமர் நரேந்திர மோதி, இந்த மோதலால் ஏற்படும் உயிரிழப்புகள் கவலையளிப்பதாகக் கூறினார்.
 
 
காஸா விவகாரத்தில் இரானும் இந்தியாவும் ஒன்றிணைந்து இஸ்ரேலை சமாதானப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
 
இரான் வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்கில் நடந்து வரும் இந்த மோதலைத் தடுக்க இந்தியா தனது முழுத் திறனையும் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோதியிடம் எப்ரஹீம் ரையீஸி கேட்டுக்கொண்டதாகக் கூறியது.
 
இதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியானிடம் பேசினார்.
 
பாலத்தீனத்தின் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்துள்ளதால், இது முக்கியத்துவம் பெறுகிறது.
 
எனினும், பாலத்தீனம் தொடர்பான தனது கொள்கையில் மாற்றம் இல்லை என்றும், இரு நாடுகளின் தீர்வை ஆதரிப்பதாகவும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. மோதலுக்கு மத்தியில், பாலத்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோதி, காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளையும் அனுப்பினார்.
 
ஆனால், பிரதமர் மோதி மற்றும் எப்ரஹீம் ரையீஸி இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரான் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் நேரடியாகத் தாக்கப்பட்டதால், இந்தியாவின் நிலைப்பாடு குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
 
இரானின் செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ, திங்களன்று நரேந்திர மோதியுடனான தனது உரையாடலின் போது இரான் அதிபர் கூறியது பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்தது.
 
அதில், போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும், காஸா மக்களுக்கு உதவி வழங்குவதில் உலக நாடுகளின் கூட்டு முயற்சி இருக்கிறது என்றும் கூறினார்.
 
அந்த அறிக்கையின்படி, "காஸாவில் வசிப்பவர்களுக்கு எதிரான சியோனிஸ்டுகளின் குற்றங்களைத் தடுக்க இன்று இந்தியா தனது முழுத் திறனையும் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என ரையீஸி கூறியிருந்தார்.
 
"பாலத்தீனர்களின் தொடர்ச்சியான கொலைகளால் அனைத்து சுதந்திர நாடுகளும் அமைதியற்ற நிலையில் உள்ளன, மேலும் இந்த கொலைகளின் தாக்கம் பிராந்தியத்திற்கு வெளியேயும் காணப்படும்" என்று ரையீஸி கூறினார்.
 
ஐஆர்என்ஏ கருத்துப்படி, ரையீஸி இந்தியப் பிரதமருடனான தனது உரையாடலில், 'சியோனிச அத்துமீறலை எதிர்ப்பதற்கு பாலத்தீன குழுக்களுக்கு முழு உரிமை உண்டு. இந்த ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவிக்க போராடும் பாலத்தீன மக்களுக்கு அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க வேண்டுகிறோம்.' எனக் கூறியுள்ளார்.
 
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை மோசமடைவதை தடுத்து உடனடியாக அமைதியை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.
 
இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உரையாடலின் போது, ​​காஸாவில் நிலைமை கட்டுக்கடங்காமல் இருப்பதைத் தடுக்கவும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளைத் தொடரவும், முழு பிராந்தியத்திலும் உடனடியாக அமைதியை மீட்டெடுக்கவும் பிரதமர் நரேந்திர மோதி உறுதியளித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.
 
பயங்கரவாதச் சம்பவங்கள், வன்முறைகள் மற்றும் சாதாரண மக்களின் உயிர் இழப்புகள் குறித்து பிரதமர் கவலை தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல்-பாலத்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலையான மற்றும் நீண்டகால நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
 
?
இரான் ஒரு ஷியா இஸ்லாமிய நாடு. இரானுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஷியா முஸ்லிம்கள் உள்ளனர். இந்தியா பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் அதாவது பாகிஸ்தான் உருவாகாமல் இருந்திருந்தால் இந்தியா இரானுடன் இருந்திருக்கும்.
 
மறுபுறம், 2014ல் மோதி தலைமையிலான அரசு பதவிக்கு வந்த பிறகு, இஸ்ரேலும் இந்தியாவும் நெருங்கி வந்தன. பாதுகாப்பு, இணையம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், பிரதமர் மோதியும் ஒருவரையொருவர் பாராட்டுவது போல் தெரிகிறது.
 
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, இரான் ஹமாஸை வெளிப்படையாக ஆதரித்தது. அதேசமயம் பாலத்தீனத்தையோ, ஹமாஸையோ குறிப்பிடாமல் இந்தியா "தீவிரவாத தாக்குதல்" என்று கூறியது.
 
சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு கேட்கப்படும் கேள்வி என்னவென்றால், இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையில் சமநிலையில் இருக்க இந்தியா முயற்சிக்கிறதா?
 
 
 
மாறாக, காசா நெருக்கடி இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் திசையானது அனைத்து நாடுகளையும் பொறுமை இழக்கச் செய்கிறது என்பதை இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உரையாடல் காட்டுகிறது என்று அவர் கூறுகிறார்.
 
காஸா மீதான நெருக்கடி தற்போது அனைத்து நாடுகளையும் பொறுமை இழக்கச் செய்வதே இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையிலான இந்த உரையாடல்கள் காட்டுவதாக உமைர் அனஸ் கூறினார்.
 
"இந்த நேரத்தில், இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையில் சமநிலைப்படுத்துவது ஒரு பெரிய கேள்வி அல்ல. ஆனால் காஸாவில் நடக்கும் நெருக்கடி மிகப்பெரிய பிரச்னை. அந்தப் பிராந்தியத்தில் இந்தியா பற்றிய ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அது, இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்பது தான். அரேபிய ஊடகங்களைப் பாருங்கள், இந்தியா பாலத்தீனத்தின் மீதான தனது ஆதரவைவிட்டுவிட்டு, இஸ்ரேலை முழுமையாக ஆதரிப்பதாக அனைத்து இதழ்களிலும் எழுதுகிறார்கள். இதனால் அரபு நாடுகளில் இந்தியாவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இது தான் உண்மை," என்றார் அவர்.
 
இந்த பிம்பம், காஸா தொடர்பாக இந்திய பிரதமர் மோதியின் முந்தைய அறிக்கையை வைத்து உருவாக்கப்பட்டது எனக்கூறும், உமைர் அனஸ், “இதனால் அரபு நாடுகளில் இந்தியாவுக்கு நஷ்டம் ஏற்படலாம்” என்றார்.
 
ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் நெல்சன் மண்டேலா மையத்தில் கற்பிக்கும் உதவிப் பேராசிரியரான பிரேமானந்த் மிஸ்ராவும் இதை சமநிலைப்படுத்தும் செயலாகக் கருதவில்லை.
 
இரான் பக்கம் இருக்க வேண்டுமா அல்லது இஸ்ரேல் பக்கம் இருக்க வேண்டுமா என இந்தியா தேர்ந்தெடுக்கும் அளவுக்கு தற்போதைய சூழ்நிலை இல்லை என அவர் கூறினார்.
 
"இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடக்கும் மோதலில் இரான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை குறைத்து மதிப்பிட முடியாது,” என்றார்.
 
டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாததால் இரான் மீது அமெரிக்கா பல தடைகளை விதித்தது. இதனால், இந்தியா மற்றும் இரான் இடையேயான உறவும் பல சவால்களை எதிர்கொண்டது. 2019-ம் ஆண்டு இரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டிய நிலை கூட ஏற்பட்டது.
 
இரானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் ஒருபோதும் மோசமாக இருந்ததில்லை, ஆனால் இரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளால், அவர்களின் உறவுகள் ஏற்ற தாழ்வுகளை சந்தித்துள்ளது.
 
2021ஆம் ஆண்டு இரான் அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெஹ்ரான் சென்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள கசப்பை குறைக்கும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது. அதே ஆண்டில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரானுக்கு சென்று வந்தார்.
 
பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான அறிகுறியாக இது கருதப்பட்டது.
 
இந்தியாவுக்கான இரான் தூதர் இராஜ் எலாஹியும் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் , போர் நிறுத்தத்தை எட்டுவதில் இந்தியா ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க முடியும் என்று கூறினார்.
 
இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவிடம் இரான் ஏன் இவ்வளவு எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறது என்பதுதான் கேள்வி. இதற்கு இரானின் சொந்த நலன்களே மிகப் பெரிய காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
இதுகுறித்து உமைர் அனஸ் கூறுகையில், "இந்த பெரிய மோதலில் இரான் பங்கேற்க விரும்பவில்லை. ஆனால், இரான் மீதும் அதிக அழுத்தம் உள்ளது. லெபனானில் இருந்து ஹெஸ்பொலா மீதும் அழுத்தம் உள்ளது. காஸா மக்கள் கொல்லப்படுகிறார்கள், நீங்கள் எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்? என இரான் ஆதரவுக்குழுக்கள் கேட்கிறார்கள். இரானுக்கு ஆதரவான அனைத்து ஆயுதக் குழுக்களும் தொடர்ந்து இரானிடம் இந்த மோதலில் நுழைய எப்போது அனுமதிப்பீர்கள் என்று கேட்கிறார்கள்,” என்றார்.
 
அதேசமயம், உலக அரசியலில் இந்தியா ஒரு ஆதிக்க சக்தியாக இருக்காது என இரானுக்கு நிச்சயமாகத் தெரியும், ஆனால் அது இஸ்ரேல், பாலத்தீனம் மற்றும் அரபு நாடுகளுடன் நல்லுறவைக் கொண்டுள்ள, அமெரிக்காவுடன் நல்லுறவைக் கொண்ட ஒரு முக்கியமான சக்தி என்றும் பிரேமானந்த் மிஸ்ரா கூறுகிறார்.
 
உலக அரசியலில் இந்தியா ஒரு ஆதிக்க சக்தியாக இல்லை என இரானுக்குத் தெரிந்தாலும், இஸ்ரேல், பாலத்தீனம், அரபு நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறவைக் கொண்டுள்ளதால், இந்தியா ஒரு முக்கியமான சக்தியாக இருக்கிறது என பிரேமானந்த் மிஸ்ரா கருதுகிறார்.
 
அதே சமயம், கடந்த 40 ஆண்டுகளாக சன்னி அரேபியர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நல்லுறவைக் கொண்டிருக்கவில்லை என்பதும் இரானுக்குத் தெரியும், என்றார் பிரேமானந்த்.
 
 
கடந்த ஆண்டு யுக்ரேனை ரஷ்யா தாக்கியபோது, ​​இந்தப் போரை நிறுத்துவதில் இந்தியா மத்தியஸ்தராக செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
 
அந்த நேரத்திலும் இந்தியா எந்த அணியிலும் சேராமல் இருந்தது. தற்போது, அதே கேள்வி மீண்டும் ஒரு முறை தற்போது எழுகிறது. ஆனால், இம்முறை அது இஸ்ரேல், பாலத்தீனம் மற்றும் இரான் ஆகிய தரப்புகளுடன் நல்லுறவைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.
 
பிரதமர் இரண்டு விஷயங்களை மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக உமைர் அனஸ் கூறுகிறார்.
 
"முதலாவதாக, அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல் ஒரு பயங்கரவாத சம்பவம், இது நடந்திருக்கக்கூடாது. இந்தியாவின் வலுவான ராஜதந்திரத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் கூறுகிறார். மறுபுறம், பாலத்தீனத்தில் பாதிக்கப்படும் பொதுமக்கள் குறித்து இந்தியாவும் கவலைப்படுவதாகவும் பிரதமர் பேசுகிறார். இது இந்தியாவின் வலுவான ராஜதந்திரத்தின் அடையாளம்."
 
ஆனால், இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் இடையேயான சர்ச்சையைத் தீர்க்கும் அளவுக்கு, சர்வதேச அரங்கில் இந்தியா தன்னை ஒரு பெரிய சக்தியாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறதா என்றால், பெரும்பாலான நிபுணர்கள் இல்லை என்றே கூறுகின்றனர்.
 
இதற்கான காரணத்தை விளக்கிய பிரேமானந்த் மிஸ்ரா, "இஸ்ரேல், ஹமாஸ் இரண்டும் இந்தியா சொல்வதைக் கேட்டு, மோதலை முடிவுக்கு கொண்டு வருவது என்பது நடக்காது. தற்போது, ​​இந்த மோதலை நிறுத்தும் வல்லமை அமெரிக்காவைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. இரு தரப்பும் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமே இந்தியாவின் பங்காக இருக்க முடியும்,”என்றார் அவர்.
 
“மேலும், இந்தியாவால் சர்வதேச சட்டங்களை மேற்கோள் காட்ட முடியும். ஆனால், இஸ்ரேல், பாலத்தீனம் பிரச்னையை தீர்க்க முடியுமா என்று கேட்டால், தற்போது சர்வதேச அரங்கில் அதன் அந்தஸ்து பெரிதாக இல்லை,” என்றார்.
 
"இந்தியா ஒரு மறைமுக மத்தியஸ்தராக செயல்பட முடியும். இந்தியா அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவைக் கொண்டிருப்பதால் இரானும் இந்தியாவுடன் இந்த பிரச்னையில் பேச விரும்பலாம். உங்களுக்கு இரண்டு எதிரெதிர் நாடுகளுடன் நல்லுறவு இருந்தால், நீங்கள் நிச்சயமாக ஒரு மறைமுக மத்தியஸ்தராக செயல்பட முடியும்." என்றார் பிரேமானந்த்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies