தாம்பரம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் சூழ்ந்த மழைநீர்..! வாகன ஓட்டிகள் கடும் அவதி..!
25 Aug,2023
சென்னை அடுத்த தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு பெய்த கன மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அந்த வகையில் கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், அருள் நகரில் மழை நீர் தேங்கி கடல் போன்று காட்சியளிக்கிறது. முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழை நீரால் நடந்து செல்வபவர்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வோர், வாகனங்களில் செல்வோர் அவதியடைந்து வருகின்றனர்.
அருகில் உள்ள ஏரியில் சென்று சேர்வதற்கான வழித்தடம் ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்திருப்பதால் சாலையில் மழை நீர் சென்று ஏரியை சென்றடையும். அதனால் அதிக மழை பெய்தால் மழை நீர் தேங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல கிழக்கு தாம்பரத்திலிருந்து மேற்கு தாம்பரம் செல்வதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது தற்போது பெய்த கனமழையின் காரணமாக சுரங்கப்பாதை முழுவதும் மழை நீர் சேர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் வரை மாற்று பாதையில் செல்கின்றனர்.
இது குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனாவிடம் கேட்ட போது நேரில் ஆய்வு சென்று பார்த்து விட்டு காரணம் சொல்வதாக தெரிவித்தார்.