கொரோனா வந்தவர்களுக்கு நுரையீரலில் வைரஸ் நிலைத்திருக்குமாம்!
12 Dec,2023
.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலில் அந்த வைரஸ் வெகு நாட்களுக்கு நீடித்திருக்கும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
பாஸ்டர் ஆய்வு நிறுவனமும், பிரெஞ்சு பொது ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, நுரையீரல் செல்கள் குறித்து ஆய்வு ஒன்றை சமீபத்தில் மேற்கொண்டன. இதன் முடிவுகள், 'நேச்சர் இம்யூனாலஜி' என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிரவைக்கும் முடிவுகள் தெரியவந்துள்ளன.
சில வைரஸ்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்திய பின்னும், கண்டறிய முடியாத வகையில் உடலில் நிலைத்திருக்கும். எச்.ஐ.வி வைரஸ்கள் இதுபோல நோய் எதிர்ப்பு செல்களில் நிலைத்திருந்து, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உயிர் பெறும் தன்மை உடையது. அதுபோலவே, 'சார்ஸ் கோவிட் 2' எனப்படும் கொரோனா வைரஸ்கள், நுரையீரலில் மேற்பரப்பில் தங்கிவிடக்கூடிய சாத்தியம் உள்ளது.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 18 மாதங்கள் வரை, இந்த வைரஸ் நுரையீரலில் நிலைத்திருக்கும். இது பரிசோதனைகளின் கூட தெரியவராது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.