மாரடைப்பு வருவதை எப்படி கண்டுபிடிப்பது? 6 அறிகுறிகள் இருக்கிறதா பாருங்கள்!
08 Sep,2023
சமீப காலமாக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் கவலைக்குறிய விஷயம் என்னவென்றால் இளம் வயதில் இருப்போரும் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கின்றனர். அதனால், மாரடைப்பு வருவதற்கு முன்னர் அதற்கு முன்பு தென்படும் அறிகுறிகளை வைத்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். அவை என்னென்ன அறிகுறிகள் தெரியுமா..?
1.அதீத சோர்வு:
காரணமே இன்றி உடல் அதிக அளவில் சோர்வடைந்தால் அது மாரடைப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதிக உழைப்பு அல்லது மனக்குழப்பத்தினாலும் சோர்வு ஏற்படும். ஆனால், மாரடைப்பிற்கு முன்னர் ஏற்படும் சோர்வுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இதுபோல சோர்வு ஏற்படும் போதெல்லாம் குளிப்படு அல்லது தூங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அதீத சோர்வை போக்கினால் மாரடைப்பையும் தடுக்கலாம் என்பது அவர்களது கருத்தாக உள்ளது.
2.அடி வயிற்றில் வலி:
வயிற்றி பகுதியில் திடீர் வீக்கம் ஏற்படுதல், அடி வயிற்றில் வலிப்பது, வயிற்று குமட்டல் போன்றவையும் மாரடைப்பு ஏற்படுவதற்கு அறிகுறிகளாக இருக்கலாம் என சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக சில மணி நேரங்களுக்கு மேல் இது போன்ற வயிற்று வலி நீடித்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
3.மூச்சு திணறல் ஏற்படுவது:
சீராக மூச்சு விடுவதற்கும் சுவாசிப்பதற்கும் ஒருவர் சிரமப்பட்டால் அவருக்கு மாரடைப்பு அவர் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஒரு பிரபல் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிகுறி, பாலின பாகுபாடு இல்லாது ஆண்-பெண் என பலருக்கும் இருக்குமாம். இது போன்ற அறிகுறிகள், மாரடைப்பு ஏற்படுவதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே தோன்றுமாம். தலைசுற்றல் அறிகுறியும் இதனுடன் சேர்ந்து தோன்றுமாம்.
4.தூக்கமின்மை:
இரவில் தூங்குவதற்கு சிரமப்படுவது, தூக்கத்தில் இருந்து திடீரென்று விழித்து கொள்வது, விடிவதற்கு முன்பு எழுந்து விடுவது பின்பு தூங்க முடியாமல் சிரமப்படுவது போன்றவை மாரடைப்பிற்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இதற்கு இன்சோம்னியா என்று பெயர். பலர் மனநலம் தொடர்பான பிரச்சனைகளினால் தூக்கம் வராமல் சிரமப்படுவர். இதனாலும் மாரடைப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தூக்கமின்மையால் அவதிப்படுவோர் இதை குணப்படுத்த மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
5.அதிகமாக வியர்பது:
மன சோர்வு (Depression), பதட்டம் (anxiety) போன்றவை ஒருவருக்கு வியர்வை அதிகமாக வெளியேற காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணமாகவும் இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
6.இதய துடிப்பில் கவனம்:
ஒரு மனிதருக்கு இதயம் சீராக துடிப்பதில் ஏதேனும் கோளாறு இருந்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சரியான உடற்பயிற்சி இல்லாமை, பயம், கவலை, பதட்டம் முதலியவை இதய துடிப்பு வர காரணமாக அமைவதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதய துடிப்பு சீராக இல்லாமல் இருப்போர் அதனுடன் சேர்த்து மயக்கம், சோர்வு ஆகியவையும் உணர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.