தீக்காய தழும்பை போக்க!வாழை ஒரு உணவு!

01 Sep,2015
 

             


உடல் அழகை கெடுப்பதில், தழும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தகைய தழும்புகள் விபத்து, அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது, மிகவும் கடினமான ஒரு செயல். பெரும்பாலான பெண்கள் சமையல் வேலை செய்யும் போது, இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள். அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக்கொள்வது, போன்றவற்றால் தழும்புகளைப் பெறுகிறார்கள்.

 

இதனை போக்க எத்தனை கிரீம்கள் கடைகளில் விற்றாலும், அதைப் பயன்படுத்தினால், எந்த ஒரு பலனும் இருக்காது. தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம். சிட்ரஸ் பழங்கள், தீக்காயங்களை நீக்க ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சிறந்தது. எலுமிச்சை சாற்றை தினமும், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை
தீக்காயம் நன்கு காய்ந்த பின்னர் தடவ வேண்டும்.
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி, மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு, இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும். கற்றாழையில் உள்ள ஜெல்லானது, மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.
பாலில் உள்ள சத்துக்கள் குறித்து, சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது, பாக்கெட் பாக்கெட்டாக உள்ளது. எனவே தினமும் குளிக்கும் முன்பு, தழும்புகள் உள்ள இடத்தில் பாலை தடவி, மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.
ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது. அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை, நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால், ஆலிவ் ஆயிலில் உள்ள பொருள், தழும்புகளை மறைய வைக்கும்.
தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டியோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து
வந்தால், தழும்புகள் போய்விடும். டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ப்ளேவரில் விற்கப்படும், டீயை போட்ட பின்பு, அதன் இலைகளை, தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.


வாழைப்பழம் ஒரு முழு உணவு!


வாழைப்பழம், உலகின் பல பாகங்களில் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. இதை பரலோகத்தின் ஆப்பிள் என, ஐரோப்பிய புராணக் கதைகள் கூறுகின்றன. ஆப்பிள் பழத்தில் காணப்படுவது போன்று, வாழைப் பழத்திலும் வைட்டமின் "சி’ காணப்படுகிறது.
இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. காரச் சத்து அதிகமாக இருப்பதால், உண்பவர்களின் உடலிலுள்ள, காரச்சத்தை பத்திரப்படுத்தப் பயன்படுகிறது. ஏனைய பழங்களை விட, இதனுடைய உணவு தரும் சூட்டின் அளவு அதிகம். எனவே தானியத்திற்குப் பதிலாக, இதை உணவாகக் கொள்ளலாம். இதிலுள்ள சர்க்கரைச் சத்து குடல் கிருமிகளைக் குறைக்கும் சக்தி வாய்ந்தது. ஆகவே இதை கிருமி நாசினியாகப் பயன்படுத்தி குடல் நோய்களை அகற்றலாம்.

 

கனிந்த பழத்துடன் சிறிது புளியையும், உப்பையும் கலந்து பிசைந்து உட்கொண்டால், சீதபேதி தீரும். சிறு குழந்தைகளுக்கு சீதபேதி ஏற்பட்டால், பழத்தை நன்றாகப் பிசைந்து கூழாக்கிக் கொடுத்தால் நோய் தீரும். குன்மநோய், குண்டிக்காய் வீக்கம், கீல்வாதம், டைபாய்டு காய்ச்சல் முதலிய நோய்க் காலங்களில், வாழைப்பழத்தை அதிகமாகப் பயன்படுத்தி குணமடையலாம்.
குடற்புண் நோயாளிகளுக்கு இது நல்ல உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் உள்ள நோயாளிகளுக்கு, இப்பழம் ஒரு நல்ல மருந்தாகும். இளகிய மலம் உள்ளவருக்கும் இது நல்ல உணவாகும். வாழைப்பழத்தில் புரதச்சத்து அதிகமாக இல்லாததால், பாலுடன் கலந்து உண்பதால் அது முழு உணவாகிறது. காலையில் பாலும், பழமும் சாப்பிடுவது நல்ல பழக்கம். பாலையும், வாழைப்பழத்தையும் கலந்து உண்டு, ஒருவர் பல காலம் வாழலாம். உண்பதற்கு பழம் நன்கு கனிந்திருக்க வேண்டும்.
பழத்தின் தோல் மஞ்சள் நிறமாக இருந்தால் மாத்திரம் போதாது. நன்கு கனியாத பழங்கள் ஜீரண உறுப்புகளுக்கு கடினமாக இருப்பதோடு, அதிலுள்ள சர்க்கரைச் சத்தும் ஜீரணமடையப் பக்குவப்படாத நிலையில் இருக்கும். எனவே, நன்கு கனியாத பழங்களை உண்ணக்கூடாது. பழத்தின் தோலில் சில ரசாயனப் பொருள்கள் உள்ளன. தோலில் வெடிப்பு ஏற்படாத வரை, உள்ளிருக்கும் சதையை நன்கு பாதுகாக்கும் தன்மை மேற்சொன்ன ரசாயனப் பொருள்களுக்கு உண்டு; அதனால், கிருமிகள் அண்டாது.
பழத்தின் தோலை நீக்கி வெயிலில், உலர வைத்து தூள் செய்து பல காலம் பத்திரப்படுத்தலாம். அப்பழத்தூளை பாலில் கலந்து, உண்பதால் அது முழு உணவாகிறது; சுவையாகவும் இருக்கும். பழத்தூளினால் ரொட்டி செய்து, குடற்புண் நோய் உள்ளவர்களுக்கு மருந்தாகவும், உணவாகவும் கொடுக்கலாம்.
வாழைப்பழங்களில் செவ்வாழைப்பழம் மிகவும் சத்துமிக்கது. உடல் மெலிந்தவர்கள், நோயால் படுத்து உடல் மெலிந்தவர்கள், தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு படுத்தால் நல்ல பலன் கிடைக்கும்



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies