டிமென்ஷியா என்னும் அறிவுத்திறன் வீழ்ச்சி! ஏன் அறிவுத்திறன் வீழ்ச்சி நோய் ஏற்படுகிறது?

23 Feb,2015
 

 டிமென்ஷியா என்னும் அறிவுத்திறன் வீழ்ச்சி! ஏன் அறிவுத்திறன் வீழ்ச்சி நோய் ஏற்படுகிறது?

 
 நடுத்தரவயதை எட்டிய அனைவருக்குமே ஒரு பயம் மனதுக்குள் படபடத்துக் கொண்டிருக்கும். வயதாக வயதாக ஞாபக சக்தி

குறைந்துகொண்டே போகுமோ? கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தகவல்களைக் கூட மறந்து தொலைத்து விடுவோமோ? ஒருவேளை அதுதான்  அறிவுத் திறன் வீழ்ச்சியோ?

முதலில் பொதுவான ஞாபக மறதிக்கும், அறிவுத் திறன் வீழ்ச்சிக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஞாபக மறதி அதிகமாக ஏற்பட்டுள்ள ஒருவர்  அறிவுத் திறன் வீழ்ச்சியால்  பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை.

அதேசமயம், அறிவுத்திறன் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நிச்சயம் ஞாபக மறதி இருக்கும். ஒருவருக்கு அதிக அளவில் ஞாபக மறதி உண்டானால் அவர் அறிவு திறன் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

மூளை சோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.  அறிவுத்திறன் வீழ்ச்சியாக இருந்தால் மூளையில் உள்ள ரசாயனப் பொருள்கள் குறைந்து, திசுக்கள் அழிந்திருக்கும். ஞாபக மறதி என்றால் திசுக்கள் அழிவதில்லை. மூளையில் உள்நரம்பு செல்கள் மெதுவாகச் செயல்படுகின்றன. அவ்வளவு தான்.

அறிவுத் திறன் வீழ்ச்சி யால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நினைவாற்றல் இழப்பை உணராதவர்களாக இருப்பார்கள். அவர்கள் நடவடிக்கையில் சில மாறுதல்களும் ஏற்படலாம். அதுவரை சாந்த சொரூ பியாக இருந்தவர், திடீரென்று காச் மூச் என்று தகாத வார்த் தைகளால் யாரையாவது திட்டத்தொடங்கலாம். இப்படி செயல்பட்டால் அது  அறிவுத்திறன் வீழ்ச்சியாக இருக்க வாய்ப்பு உண்டு.

அறிவுத்திறன் வீழ்ச்சி நோய் ஏன் ஏற்படுகிறது?

வயதோடு தொடர்புடைய ஒரு சிக்கல்தான் அறிவுத்திறன் வீழ்ச்சி நோய். அதாவது அதிக ஆண்டுகள் ஒருவர் உயிரோடு இருந்தால் அவர் அறிவுத்திறன் வீழ்ச்சி நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுகொண்டவர்களில் 5 சதவீதத்தினரும், 80 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுகொண்டவர்களில் 20 சதவீதத்தினரும், 100 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயது கொண்டவர்களில் 50 சதவீதத்தினரும் அறிவுத்திறன் வீழ்ச்சி நோயின் ஏதோ ஒரு வடிவத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வாழ்க்கைமுறையின் காரணமாக உண்டாகக்கூடிய நோய்களான மாரடைப்பு, நீரிழிவு நோய், உடல்பருமன், அதிக ரத்த அழுத்தம் போன்றவற்றின் காரணமாகவும் அறிவுத்திறன் வீழ்ச்சி நோய் உருவாகும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. அறிவுத்திறன் வீழ்ச்சி நோயின் மிக சகஜமான, தொடக்ககால அறிகுறி என்பது நினைவாற்றல் குறைவதுதான்.

முக்கியமாக சமீபத்திய குறுகியகால நினைவுகளை மறந்துவிடுதல் பொதுவான மறதியை கொண்டவர்கள், தாங்கள் மறந்தது தொடர்பான பிற தகவல்களை நினைவு வைத்திருப்பார்கள்.

எதை செய்கிறோம் என்று யோசிக்காமலேயே தினமும் பல செயல்களை நாம் வெகு இயல்பாகச் செய்கிறோம். அறிவுத்திறன் வீழ்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற செயல்களில் கூட தடுமாற்றம் ஏற்படும். அறிவுத்திறன் வீழ்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு எந்த உடைக்கு பிறகு எதை அணியவேண்டும் என்பதிலோ, ஒரு உணவை எப்படி தயாரிப்பது என்பதிலோ கூட மறதி ஏற்படும்.

சரியான வார்த்தைகள் நினைவுக்கு வராமல் நாம் எல்லோருமே எப்போதாவது திண்டாடியிருப்போம். ஆனால் அறிவுத்திறன் வீழ்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் மிக எளிமையான வார்த்தைகளை கூட அடிக்கடி மறந்துவிடுவார்.

 

அதற்குப் பதிலாக பழக்கமில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது பேச்சையும் எழுத்தையும் பிறரால் அறிந்துகொள்ள முடியாதபடி செய்வார். இன்றைக்கு என்ன கிழமை என்பதையோ தான் எங்கே சென்றுகொண்டி ருக்கிறோம் என்பதையோ நாம் சில சமயம் மறந்துவிடுவது உண்டு.

ஆனால் தக்கு மிக பழக்கமான சூழலைக்கூட அறிவுத்திறன் வீழ்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் மறந்துவிடுவார். ஓர் உரையாடலில் பங்குகொள்வது, செலுத்து வேண்டிய கடன்களை உரிய நாள்களில் செலுத்துவது போன்றவற்றை நினைவுகொள்வதும், அறிவுத்திறன் வீழ்ச்சி நோயாளிகளுக்கு கடினமானதாகவே இருக்கும்.

அவ்வப் போது எதற்காகவாவது நாம் வருத்தப்படுவோம் அல்லது உம்மென்று இருப்போம். ஆனால் அறிவுத்திறன் வீழ்ச்சி நோய்க்காரர் தன் வழக்கத்துக்கு மாறாக மிக அதிகமான அளவில் அல்லது மிகவும் குறைவான அளவில் உணர்ச்சி வசப்படுவார். தான் இதற்குமுன் வழக்கமாக நடந்து கொள்ளும் விதத்திலிருந்து அறிவுத்திறன் வீழ்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர் மிகவும் மாறுபட்டு நடந்து கொள்ளக்கூடும்.

நினைவாற்றல் மிகக்குறையும் சந்தர்ப்பங்களில் சந்தேகம், கோபம், மனச்சோர்வு, கவலை, பதற்றம் போன்ற உணர்வு களால் பரிதவிப்பார்.  அறிவுத் திறன் வீழ்ச்சிக்கு மூளையில் சில ரசாயனங்கள் குறைந்துவிடுவதும் ஒரு காரணம் என்றபோது, அத்தகைய ரசாயனப் பொருள்களை மருந்து மாத்திரைகள் மூலம் அதிகப்படுத்தி பிரச்சினையை தீர்க்கலாம். அது தொடர்பாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். மூளையில் ஏன் இந்த ரசாயனப் பொருள்கள் குறைய வேண்டும். இதற்கு பல காரணங்கள் உண்டு.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies