பயம் வேண்டாம்ஸ பாதுகாப்பு போதும்!

27 Jun,2014
 

 பயம் வேண்டாம்ஸ பாதுகாப்பு போதும்!

கல்லூரியில் படிக்கும்போது, வயிற்றில் சிவப்பு நிறத் திட்டுக்கள் போன்று தோல் பிரச்னை ஏற்பட்டது சுகுமாருக்கு. வெளியே காண்பிக்க வெட்கப்பட்டு, அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். விளைவுஸ படித்து முடித்து, நல்ல வேலைக்கு சேர்ந்த நிலையில், வயது கூடக்கூட அந்த சிவப்புத் திட்டும் வளர்ந்து கொண்டே சென்றது. வயிற்றின் 50 சதவிகிதத்தை அந்த சிவப்புப் புள்ளிகள் ஆக்கிரமித்திருந்ததுடன், அந்த இடத் தில் அரிக்கவும் ஆரம்பித்தது. கண்ட கண்ட க்ரீம்களை வாங்கித் தடவிக் கொண்டிருந்தாரே தவிர, மருத்துவரிடம் செல்லவில்லை. ஒருமுறை சட்டை, பனியனைக் கழற்றியபோது அவரு டைய அம்மா பார்த்து டாக்டரிடம் அழைத்துச் செல்லும் வரை, சுகுமாருக்கு சொரியாசிஸ் பாதிப்பு பற்றித் தெரிந்திருக்கவே இல்லை.

தற்போது அதிகப்படியான இடங் களில் இந்த ‘சொரியாசிஸ்’ என்ற பெயர் பெரிதுபடுத்தப்பட்டு, ஒருவித பயத்தை ஏற்படுத்தி வருவதுடன், சமுதாயத்தில் ஒரு கொடூர வியாதியாகவே பார்க்கப் படுகிறது. சொரியாசிஸின் உண்மையான பாதிப்புகள் என்ன ?


 

”சொரியாசிஸ் என்பதை ‘செதில் படி’ என்று தமிழில் அழைப்பர். ஏறக்குறைய மீனின் செதில்களை போன்று மனிதனின் உடலில் ஏற்படக்கூடிய இந்த பாதிப்பானது பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.. சொரியாசிஸ் பாதிப்பு என்பது ஏதோ பூதாகரமான பிரச்னையோ, தொற்று வியாதியோ அல்ல. தகாத உறவு வைத்துக்கொள்பவர்களுக்கும் இந்த பாதிப்பு வரலாம் என்பதும் கட்டுக் கதை. இன்னும் சொல்லப்போனால், சொரியாசிஸ் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்பதே இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.

 

காரணங்கள்

பரம்பரை மரபணுக்கள் மூலமாகவும், மது அருந்துவதாலும், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. வேறு சில நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளாலும் சொரியாசிஸ் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, மனநலப் பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும் ‘லித்தியம்’ போன்ற மாத்திரைகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளினாலும் உடம்பில் சொரியாசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது.

அறிகுறிகள்

பொதுவாக, இதன் அறிகுறி என்னவெனில், மீனின் செதில்களைப் போன்று தோல் உரியும். தலை, முழங்கை, முழங்கால் போன்ற உடல் பாகங்களில் அரிப்பு ஏற்படும். மேலும், உடல் பாகங்களில் கொப்புளங்களைப் போன்று தோன்றும் சொரியாசிஸ் பாதிப்புக்கு ‘பஸ்டுலர் சொரியாசிஸ்’ (pustular) என்று பெயர். கை, கால் நகங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கு ‘நெயில் சொரியாசிஸ்’ (Nail) என்றும் எலும்பு, மூட்டு எலும்பு பகுதியில் ஏற்படக் கூடிய பாதிப்புக்கு ‘சொரியாடிக் ஆர்த்தோபதி’ என்றும், உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகளில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கு பாமோ ப்ளான்டர் (Palmo-plantor) என்றும் பெயர். பஸ்டுலர் சொரியாசிஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் உயிரிழக்கும் அபாயமும் உண்டு.. எலும்பு மூட்டுப் பகுதியில் சொரியாசிஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அதற்கான சிறப்பு மருத்துவரை அணுக வேண்டும்.

சிகிச்சைகள்:

சொரியாசிஸ் பாதிப்பின் தீவிரத்தைப் பொருத்தே சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதிப்பு குறைவாக இருந்தால் ‘சாலிசிலிக் ஆசிட்’ போன்ற வெறும் தடவக்கூடிய மருந்துகளை வைத்தே சரிசெய்துவிடலாம். பாதிப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகள் ஆகியவை பயன்படுத்தப்படும். குறிப்பாக ‘மீத்தோ ட்ரக்லைட்’ எனப்படும் நவீன ஒளி சிகிச்சை அளிக்கப்படும். இயற்கையாக உடலில் படக்கூடிய சூரிய ஒளியிலும் சொரியாசிஸைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. மேலும் அதிகப்படியான சொரியாசிஸ் பாதிப்பு இருக்குமேயானால் மருத்துவமனையில், உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு:

சொரியாசிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு, உணவைப் பொருத்தவரையில் அதிகக் கட்டுப்பாடுகள் தேவை இல்லை. சிக்கன், மட்டன் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளும், கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளும் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

மது அருந்துதல் மற்றும் புகைப் பழக்கமும் சொரியாசிஸ் பாதிப்பை அதிகப்படுத்தும் என்று சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, சொரியாசிஸ் பாதிப்பு உள்ளவர்கள் மது மற்றும் புகைப் பழக்கத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். சொரியாசிஸ் பாதிப்பு, குளிர்காலங்களில் தான் அதிகமாக ஏற்படும். வெயில் காலங்களில் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும்” என்ற டாக்டர் ராமசாமி, சொரியாசிஸ் யாருக்கெல்லாம் வரும் என்பதையும் சொன்னார்.

”வயதைப் பொருத்தவரையில் (6 முதல் 10) வயது வரையிலான குழந்தைகளுக்கு சொரியாசிஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதுஸ குழந்தைகளுக்கு வந்தாலும் முழுமையாகக் குணப்படுத்திவிடலாம். நடுத்தர வயதான (40 முதல் 50) வரையிலானவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை உடனடியாகக் குணப்படுத்திவிட முடியாது என்றாலும் பாதிப்பைக் கட்டுப்படுத்தி அன்றாட வாழ்க்கையைச் சிரமம் இல்லாமல் வாழ வழி செய்யலாம். 60 வயதுக்கு மேல் இருக்கும் நபர்களுக்கு புதியதாக சொரியாசிஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லை. எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது பெண்களுக்கு குறைவாகவும், ஆண்களுக்கு அதிகமாகவும் சொரியாசிஸ் ஏற்படுகிறது.

நவீன மருத்துவத்தில், இந்த நோயைக் குணப்படுத்தக்கூடிய வகையில் எந்தவிதப் பக்கவிளைவுகளும் அற்ற மருந்து, மாத்திரைகள் வந்துவிட்டன. எனவே பயம் வேண்டாம். நோயை எதிர்த்து நிற்கும் மனத்துணிவு இருந்தாலே போதும்!” 

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies