மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவம் என்பது குறித்த ஆராய்ச்சி மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்மையானது என்று பலரை நம்ப வைத்துள்ளது, மேலும் மனிதர்கள் தங்கள் இறுதி மூச்சை எடுத்த பிறகு நித்திய பயணத்தைத் தொடங்குகிறார்கள் என கூறுகிறது.
மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவம் (என்.டி.இ) என்ற கருத்து பல ஆண்டுகளாக மருத்துவ நிபுணர்களையும் ஆன்மீகவாதிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.
ஆக்ஸிஜன் சப்ளை இல்லாததால் மரணம் என்ற நிகழ்வை மனித மூளையின் உயிர்வாழும் தந்திரமாக மருத்துவ நிபுணர்கள் கருதினாலும், ஆன்மீகவாதிகள் மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவம் என்பது மறு வாழ்விற்கு மறுக்கமுடியாத சான்று என்று கடுமையாக வாதிடுகின்றனர்.
இப்போது, பீட்டர் என்ற நபர் பகிர்ந்து கொண்ட ஒரு மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவ சான்று நெட்டிசன்களிடையே பரபரப்பான விவாத புள்ளியாக மாறி உள்ளது.
இது குறித்த அனுபவம் மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவ ஆராய்ச்சி அறக்கட்டளை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
மார்ச் 16, 2010 அன்று, குளிக்கும்போது நீரில் மூழ்கியபோது பீட்டர் ஒரு மரண அனுபவத்தை எதிர்கொண்டார். பீட்டர் ஒளியை விட இருளை கண்டு உள்ளார்., மேலும் அவர் ஒரு இருண்ட அங்கி அணிந்திருந்த ஒரு பெண்ணைக் கண்டார்.
தான் பார்த்த பெண்ணுக்கு முகம் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவத்தின் போது அவர் உடலை விட்டு எதோ ஒன்று வெளியேறி தனக்கு வெளியே இருந்ததாக பீட்டர் கூறி உள்ளார்.
நான் குளித்துக் கொண்டிருந்தேன், நான் உருண்டு உருண்டு சென்றேன். இது எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை, இது நடக்கும் என்று எனக்குத் தெரியும். ஒளியை விட இருட்டாக இருப்பதை நான் நினைவில் வைத்திருக்கிறேன். இருண்ட அங்கி அணிந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்தது எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. இதை எவ்வாறு சிறப்பாக விவரிப்பது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்.
அங்கிக்கு எந்த நிறமும் இல்லை. அது இருட்டாக இருந்தது, ஆம். ஆனால் அது கருப்பு நிறமாக இருக்கவில்லை. ஒரு போர்வை போல உங்களைச் சுற்றி ஒரு கருந்துளை அல்லது வெற்றிடத்தை கற்பனை செய்து பாருங்கள். அது எப்படி இருந்தது என்று. அவளுக்கு வெளிர் பழுப்பு நிற முடி இருந்தது, சாக்லெட் அல்லது வேர்க்கடலை வெண்ணெய் போன்ற நிறம். அவளுடைய முகம் எனக்கு நினைவில் இல்லை, ஏனென்றால் அவளுக்கு முகம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு, ஈவா என்ற பெண்மணி பகிர்ந்து கொண்ட மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவம் மற்றொரு சான்று, மரணம் ஒரு விரும்பத்தகாத அனுபவம் அல்ல என்று கூறியது. தனது தகவலில் ஈவா மனிதர்களுக்கு மரணத்திற்குப் பிறகு உடல் வரம்புகள் இருக்காது என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.