எனக்கு எய்ட்ஸ் நோயா....? வதந்திகளை வேதனையுடன் பகிர்ந்த 80’ஸ் நடிகர் மோகன்!
07 Jun,2024
80-களில் வெள்ளி விழா நாயகன் என்று கொண்டப்பட்டவர் நடிகர் மோகன். இவர் நடித்த படங்கள் அனைத்துமே அடுத்தடுத்து வெள்ளி விழா கொண்டாடியதால் இவருக்கு தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகன் என்ற பெயர் கிடைத்தது. மோகன் நடிப்பில் வெளியான பெருமபாலான படங்கள் அனைத்துமே அடுத்தடுத்து ஹிட் கொடுத்த பாடங்கள். தயாரிப்பாளர்கள், ஐயக்குனர்கள் என மோகனை தங்கள் அப்படத்தில் நடிக்கவைக்க காத்திருந்தார்கள் , 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் டாப் நாயகனாக வலம் வந்தார் மோகன்.
மௌன ராகம், இதயக்கோயில், பயணங்கள் முடிவதில்லை, 100 வது நாள், உதயகீதம், மெல்ல திறந்தது கதவு என இவர் நடித்த பல பொங்கல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட் அடித்தது. மோகனுக்கு எக்கச்சக்கமான பெண் ரசிகைகள் குவிந்தனர். 80 களில் ஹிட் நாயகனாக நடித்து வந்த மோகன் திடீரென்று சினிமாவில் இருந்து காணாமல் போனார். இதனை வெற்றி படங்கள் கொடுத்த பிரபல நடிகர் சினிமாவை விட்டு விலகியதது பலருக்கும் பல விதமான கேள்விகளை எழுப்பியது.
பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகர் மோகன் , தற்போது மீண்டும் தனது செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார். ஹீரா என்ற த்ரில்லர் படத்தில் லீட் ரோலில் நடித்து முடித்துள்ளார் மோகன், இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் விஜய்க்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மோகன். இவரின் கதாபாத்திரம் எப்படி இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஹீரா படம் வெளியாகவுள்ள நிலை படத்தின் ப்ரோமோஷன்களில் நடிகர் மோகன் பங்கேற்று வருகிறார். அப்படி நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற மோகன் தான் சினிமாவில் இருந்து விலகியிருந்த காலகட்டத்தில் பல வதந்திகள் பரவியதாக கூறினார், அவர் கூறுகையில், " நான் சினிமாவில் இருந்து விலகி இருந்த காலகட்டத்தில் பல்வேறு வதந்திகள் என்னை பற்றி வந்ததது. எனக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது அதனால் தான் நான் சினிமாவில் இருந்து விலகி சென்றுவிட்டதாக பல வதந்திகள் பரவியது.
அந்த வதந்தி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகுந்த வேதனையை கொடுத்தது. என்னை மிகவும் பாதித்தது. என்னிடம் வந்து பேட்டி எடுப்பவர்கள் எய்ட்ஸ் இல்லை என்று சொல்ல சொல்லி கேட்பார்கள். நீங்க இஷ்டத்துக்கு என்ன வென எழுதுவீங்க, அது இல்லைனு நா விளக்கம் கொடுக்கனுமா என்று தான் ஒரு முறை கோபப்பட்டதாகவும் கூறினார்.