சினிமா செய்தித் துளிகள் கருடா படத்தில் காஜல் அகர்வால்

26 Feb,2016
 



சிம்பு சாதாரண இளைஞனாக ஒரு சாந்தமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நாள்!




சிம்புவை சுற்றி என்றும் ஒரு வகையாக சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இவர் இதுவரை நடித்த படங்களில் வெற்றி படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.ஆனால், இன்றளவும் சிம்புவிற்காக கிரேஸ் குறையவே இல்லை, இதற்கு முக்கிய காரணம் இவரின் விண்ணை தாண்டி வருவாயா படமும் கூட.இப்படத்தில் இதுவரை ஆட்டம், பாட்டம், அடிதடி, என பார்த்து வந்த சிம்பு சாதாரண இளைஞனாக ஒரு சாந்தமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.அதிலும் இவருக்கும் த்ரிஷாவிற்குமான கெமிஸ்ட்ரி நிஜ காதலர்களை பொறாமை பட வைத்தது. அந்த அளவிற்கு இப்படத்தில் இவர்கள் காதல் காட்சிகள் அமைந்திருக்கும்.படத்தை பார்த்த பலரும் கார்த்திக், ஜெஸ்ஸியை கைப்பிடிப்பானா என்று காத்திருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினாலும், அந்த பாதிப்பு தான் இத்தனை வருடம் கடந்தாலும் அப்படத்தை பற்றி பேச தூண்டுகிறது.இப்படம் இதே நாள் 2010ம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது, இதை வழக்கம் போல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிம்புவை சுற்றி என்றும் ஒரு வகையாக சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இவர் இதுவரை நடித்த படங்களில் வெற்றி படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.ஆனால், இன்றளவும் சிம்புவிற்காக கிரேஸ் குறையவே இல்லை, இதற்கு முக்கிய காரணம் இவரின் விண்ணை தாண்டி வருவாயா படமும் கூட.இப்படத்தில் இதுவரை ஆட்டம், பாட்டம், அடிதடி, என பார்த்து வந்த சிம்பு சாதாரண இளைஞனாக ஒரு சாந்தமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.அதிலும் இவருக்கும் த்ரிஷாவிற்குமான கெமிஸ்ட்ரி நிஜ காதலர்களை பொறாமை பட வைத்தது. அந்த அளவிற்கு இப்படத்தில் இவர்கள் காதல் காட்சிகள் அமைந்திருக்கும்.படத்தை பார்த்த பலரும் கார்த்திக், ஜெஸ்ஸியை கைப்பிடிப்பானா என்று காத்திருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினாலும், அந்த பாதிப்பு தான் இத்தனை வருடம் கடந்தாலும் அப்படத்தை பற்றி பேச தூண்டுகிறது.இப்படம் இதே நாள் 2010ம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது, இதை வழக்கம் போல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 





நடிப்பில் ஆர்வம் இல்லை - ரேயான்


   

நடிகை ராதிகாவின் மகள் ரேயான். இவருக்கும் கிரிக்கெட் வீரர் மிதுனுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது, விரைவில் திருமணம் நடைபெற

இருக்கிறது. தற்போது ரேயான், தனது அம்மாவின் சொந்த தயாரிப்பான ராடன் பிலிம்ஸின் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ராடன் பிலிம்ஸ் சார்பில் குறும்பட விழா நடத்தப்பட உள்ளது.

 

இதுகுறித்து ரேயான் நம்மிடம் கூறியதாவது... நாங்கள் நடத்தும் குறும்பட விழாவுக்கு உலகம் முழுவதிலிருந்து சுமார் 200 குறும்படங்கள் எங்களுக்கு வந்தன. இதிலிருந்து நாங்கள் 6 படங்கள் தேர்வு செய்துள்ளோம். இந்த ஆறு படங்களில் இருந்து சிறந்த படத்தை தேர்வு செய்து பரிசளிக்க உள்ளோம். இதற்கான நிகழ்ச்சி மார்ச் 9 ம்தேதி, சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற இருக்கிறது. படங்களை தேர்வு செய்யும் நடுவர்களாக கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், ரத்னவேல் உள்ளிட்டோர் உள்ளனர், என்றவரிடம் நீங்கள் ஏன் நடிக்கவில்லை என்று கேட்டபோது, எனக்கு நடிப்பில் ஆர்வம் கிடையாது. யார் யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று என் அம்மா எனக்கு கற்று கொடுத்துள்ளார். என்னுடைய ஆசையெல்லாம், ராடன் நிறுவனத்தின் சீரியல்களை யூ-டியூப்பில் வௌியிட தனியாக யூடியூப் சேனல் துவங்க வேண்டும். திருமணத்திற்கு பிறகு சென்னை - பெங்களூர் என மாறி மாறி பறந்து கொண்டே இருப்பேன். மிதுன் ரொம்ப அமைதியானவர், அதிகம் பேச மாட்டார் என்று கூறினார்.








தோழா' தோள் கொடுக்குமா ?




  

தமிழ்த் திரையுலகத்தில் பல நல்ல படங்களைக் கொடுக்க பல உதவி இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு

அதிர்ஷ்ட தேவதை இன்னும் கண்களைத் திறக்க மறுக்கிறது. பல பெரிய நிறுவனங்கள் பெரிய நட்சத்திரங்களை மட்டுமே வைத்து படம் தயாரிக்க நினைக்கிறார்களே, தவிர நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறார்கள். தனுஷ் போன்ற ஒரு சிலர் மட்டும்தான் புதிய கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்களும் புதிய இயக்குனர்களை அதிகம் ஊக்கப்படுத்துவதில்லை.

தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய நிறுவனமாக இருக்கும் பிவிபி சினிமாஸ் நிறுவனம் தொடர்ந்து பல பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்து வருகிறது. ஆனால், அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வந்த தமிழ்ப் படங்களான 'நான் ஈ' படம் தவிர மற்ற படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. சமீபத்தில் அவர்களது தயாரிப்பில் வெளிவந்த 'பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி' ஆகிய இரண்டு படங்களும் அதற்கு முன் அவர்கள் தயாரித்த 'இரண்டாம் உலகம்' படமும் தோல்விப் படங்களாகவே அமைந்தன.

தற்போது நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடித்துள்ள 'தோழா' படத்தை இந்நிறுவனம் அடுத்த மாதம் வெளியிடுகிறது. நாளை இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது. 'தோழா' படமாவது இந்நிறுவனத்திற்கு தோள் கொடுக்குமா என கோலிவுட்டில் கேள்வி எழுந்துள்ளது

 

 அம்மாவாக நடிப்பது தப்பில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்


  

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், ரம்மி

போன்ற படங்களில் நடித்தவர், காக்க முட்டை படத்தில் குப்பத்து பெண்ணாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வித்தியாசமான ரோலில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். தற்போது இவர் மீண்டும் அம்மாவாக நடித்துள்ள ஆறாது சினம் படம் நாளை(பிப்.26ம் தேதி) வெளியாக உள்ளது.

தொடர்ந்து அம்மா ரோலில் நடிப்பது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் நம்மிடம் கூறியதாவது... அம்மா ரோல் ஒன்றும் தப்பில்லை. இந்த ரோலில் நடித்தால் அதன்பின்னர் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காது என்பார்கள். ஆனால் அப்படி கிடையாது. தற்போது நான் 6 படங்களில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் வௌிவந்த 'மெமரீஸ்' படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொன்னபோது மிகவும் பிடித்து போனது. அதனால் நடிக்க சம்மதித்தேன். மீண்டும் காக்கா முட்டை மணிகண்டன், பண்ணையாரும் பத்மினியும் அருண் ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறியுள்ளார்.




கருடா படத்தில் காஜல் அகர்வால்



  
.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் இருமுகன். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு

செய்துவரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷபு தமீன்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்தை அடுத்து திரு இயக்கும் கருடா படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விக்ரம். மே மாதம் வரை இருமுகன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

அதற்குப் பிறகு வெளிநாடு சென்று ஒரு மாதம் ஒய்வு எடுக்க திட்டமிட்டுள்ள விக்ரம், அதனைத் தொடர்ந்து கருடா படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். எஸ்.எஸ்.எஃப் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. கருடா படத்தின் படப்பிடிப்பை 60 நாட்களில் முடிக்க வேண்டும் என்று இயக்குநர் திருவிடம் திட்டவட்டமாக கூறி இருக்கிறார் விக்ரம். கருடா படத்தின் சுமார் 50% காட்சிகள் டெல்லி மற்றும் லடாக் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மீதிக் காட்சிகளை அதாவது 50 சதவிகித காட்சிகளை ஓமன் நாட்டில் படமாக்க இருக்கிறார்கள். கருடா படத்தில் விக்ரமுக்கு நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருக்கிறார்

 



Share this:

India

India

Malaysia

Srilanka

Srilanka

Vietnam

Srilanka

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies