சினிமா செய்தித் துளிகள் நடுரோட்டில் தவித்த என்னை சென்னை மக்கள் காப்பாற்றினார்கள்: ஹன்சிகா

27 Nov,2015
 

பேய் கதைகள் தேடும் ப்ரியாஆனந்த்!


  



வாமனன், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, வை ராஜா வை என பல படங்களில் நடித்தவர் ப்ரியா ஆனந்த். இப்போது அவரது கைவசம் கூட்டத்தில் ஒருவன் என்ற படம் மட்டுமே உள்ளது. இப்படத்தில் தெகிடி அசோக் செல்வனுக்கு ஜோடியாக

நடிக்கிறார் ப்ரியாஆனந்த். மேலும், இதுவரை நடித்த படங்களில் நடிப்புக்காக பேசப்படாத அவர், அரிமா நம்பி படத்தில் ஒரு பார் சீனில் சரக்கு அடிப்பது போன்று நடித்து சர்ச்சைக்குள் சிக்கினார். மற்றபடி பெரிய அளவிலான பரபரப்பு வளையத்திற்குள் அவர் வரவில்லை.

அதோடு, அவர் பெரிதும் எதிர்பார்த்த இரும்புக்குதிரை, வை ராஜா வை போன்ற படங்கள் தோல்வியடைந்ததால் அடுத்தபடியாக ப்ரியாஆனந்துக்கு வரயிருந்த படவாய்ப்புகள் வேறு நடிகைகள் பக்கம் திரும்பி விட்டன. அதனால் தற்போது கூட்டத்தில் ஒருவன் படத்தில் மட்டுமே நடித்து வரும் ப்ரியாஆனந்த், அடுத்து மூன்று ஹீரோயினிகளில் ஒருவராக நடிக்கவும் தயாராகி விட்டார். குறிப்பாக, தற்போது கோடம்பாக்கத்தில் பேய் சீசன் நடிப்பதால், பேய் கதைகளில் நடிப்பதில் தனது ஆர்வத்தை திருப்பியிருக்கிறார். அதனால் யாராவது பேய் படங்கள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால் அவர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் கேட்டு வருகிறார் ப்ரியாஆனந்த்.

 




 நயன்தாரா சம்பளம் 3 கோடியா?


  

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல தென்னிந்தியத் திரையுலகிலும் வேறு எந்த ஒரு ஹீரோயினுக்கும் வழங்கப்படாத சம்பளம், நயன்தாராவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்ரமுடன் எந்தக் காலத்திலும் நடிக்க மாட்டேன் என்று

சொன்ன நயன்தாரா, விக்ரமுடன் ஜோடி சேர்ந்தது எப்படி என்று கடந்த வாரம் கோலிவுட்டே ஆச்சரியமாகப் பார்த்தது. அந்த ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ள பலரும் முனைப்பு காட்டினர்.

தற்போதுதான் அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. நயன்தாராவைப் பொறுத்தவரையில் எப்போதுமே தன்னுடைய சம்பளத்தில் தெளிவாக இருப்பார். வேண்டாம் என்று சொன்னால் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்பதால் சம்பளத்தை அதிகப்படியாகக் கேட்பாராம். அப்படிக் கேட்டால் அவர்களாகவே போய்விடுவார்கள் என்பதுதான் அதற்குக் காரணம். அப்படியும் சிலர் அந்த அதிக சம்பளத்திற்கு சம்மதித்தால் நடித்துவிடுவாராம். ஏற்கெனவே, இப்படியாக சில படங்களில் நடித்திருக்கிறார் என்கிறார்கள்.

விக்ரம் படத்திற்காகவும் அப்படித்தான் மறுப்பதற்காக சம்பளத்தை அதிகமாகக் கேட்கிறார். ஆனால், நயன்தாராவே ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த சம்பளத்தை அவருக்குக் கொடுக்க சம்மதித்திருக்கிறார்கள். அவ்வளவு சம்பளமா என ஆச்சரியப்பட்டு நயன்தாரா யோசிப்பதற்குள் அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள் என்கிறது கோலிவுட்டின் கிசுகிசு வட்டாரம். நயன்தாராவுக்கான சம்பளம் மட்டுமே 3 கோடியாம். எத்தனை ஹீரோயின்கள் அடுத்து சம்பளத்தை உயர்த்தப் போகிறார்களோ...?






என்னை கவர்ச்சியாக படம் எடுத்து மிரட்டினார்கள்: அன்சிபா ஹாசன்



கதாநாயகிகள், டைரக்டர்கள் மோதல் அவ்வப்போது தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. ‘மிருகம் படப்பிடிப்பில் டைரக்டர் சாமி தனது கன்னத்தில் அறைந்ததாக நடிகை பத்மபிரியா அழுது பிரச்சினையை கிளப்பி அவர் மீது நடவடிக்கை எடுக்க வைத்தார்.

‘நய்யாண்டி’ படத்தில் தனுசுடன் நடித்தபோது டைரக்டர் தனது இடுப்பை ஆபாசமாக படம் எடுத்து விட்டதாக நடிகை நஸ்ரியா சர்ச்சையை கிளப்பி ஆவேசப்பட்டார். இதனால் அந்த காட்சியை நீக்கிவிட்டு படத்தை திரைக்கு கொண்டு வந்தனர். நடிகை பிரியங்கா ‘கோடை மழை’ படத்தில் தன்னுடன் நடித்த களஞ்சியம் தன்னை அடித்து விட்டதாக புகார் கூறினார்.

நடிகை அஞ்சலி ‘ஊர்சுற்றிப்புராணம் படப்பிடிப்பில் டைரக்டருடன் தகராறு செய்து, அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது என்று மறுத்து விட்டார். நடிகை மீனாட்சி கடந்த வாரம் சென்னையில் நடந்த ‘நேர்முகம்’ படப்பிடிப்பில் உதவி இயக்குனர் தன்னிடம் தவறாக பேசியதாக முறைத்து அவரை கன்னத்தில் அறைந்தார். இதனால் படக்குழுவினர் அவரை சிறை பிடித்து தாக்க முயற்சித்தனர். பிறகு மீனாட்சி மன்னிப்பு கேட்டதன் மூலம் பிரச்சினை ஓய்ந்தது.

அதுபோல் நடிகை அன்சிபா ஹாசனும் தன்னை கவர்ச்சியாக படம் எடுத்து படக்குழுவினர் மிரட்டியதாக தற்போது புகார் கூறியுள்ளார். இவர் தமிழில் ‘நாகராஜ சோழன் எம்.எல்.ஏ,’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். ‘பரஞ்சோதி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளிய ‘திரிஷ்யம்’ படத்தில் மோகன்லால்-மீனாவின் மகளாக நடித்தார்.

அன்சிபா ஹாசன் கூறும்போது, ‘‘நான் தமிழ் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். இதற்காக வாய்ப்பு தேடினேன். சில படங்களில் நடிக்கவும் செய்தேன். ஒரு படத்தில் நடித்தபோது எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. அந்த படத்துக்காக என்னை கவர்ச்சியாக படம் எடுத்தனர். குட்டை பாவாடையை அணிய வைத்து புகைப்படம் எடுத்தார்கள்.

அந்த காட்சிகள் படத்துக்கு தேவை இல்லை. ஆனாலும் வற்புறுத்தி படம் பிடித்தார்கள். இதுபற்றி கேட்டபோது என்னை அவர்கள் மிரட்டினார்கள்.’’ என்றார். இந்த புகார் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





பட உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா பேட்டி



 



‘‘பட உலகில் ஆண் ஆதிக்கம் நிறைந்து இருப்பது தவறு அல்ல. சண்டை காட்சிகளில் கதாநாயகர்கள் கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள்’’ என்று நடிகை அனுஷ்கா கூறினார். நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-

‘‘பெண்களில் பலர் வெளி அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்காக உடற்பயிற்சி, யோகாவே கதி என கிடந்து உடலை வருத்துகிறார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. மனதை அழகாக வைத்து இருப்பதைத்தான் பெரிதாக நம்புகிறேன். வெளி அழகைப்பற்றி பெண்கள் கவலைப்படக்கூடாது. மனம் அழகாக இருந்தால் முகத்தில் அழகு வரும். அகத்தின் அழகே அழகு.

என் உயரத்துக்கு ஒல்லி உடம்பு சரிப்பட்டு வராது. விரும்பியதை சாப்பிட்டு கொஞ்சம் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை நான் சாப்பாட்டுப் பிரியை. ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவேன். இறால், சிக்கன் உணவுகள் ரொம்ப பிடிக்கும். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக குண்டு வேடம் வேண்டும் என்றனர், இதற்காக சாக்லெட், அரிசி உணவு, பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்றவற்றை நிறைய சாப்பிட்டேன்.

இப்போது ‘பாகுபலி-2, சிங்கம்-3’ படங்களுக்காக சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கிறேன். நடிகையாகாமல் இருந்து இருந்தால் விரும்பிய எல்லாவற்றையும் சாப்பிட்டு சந்தோஷப்பட்டு இருப்பேன். திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது என்று சிலர் குறைபடுகிறார்கள். அப்படி இருப்பதில் தவறு இல்லை. கதாநாயகிகளை விட கதாநாயகர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள்.

சண்டை காட்சிகளில் அவர்கள் படும் கஷ்டங்களை ‘பாகுபலி’ படத்தில் நான் நடித்து உணர்ந்து இருக்கிறேன். ரசிகர் மன்றங்களும் அவர்களுக்குத்தான் இருக்கிறது. எனவே சினிமாவில் ஆணாதிக்கம் நிறைந்து இருப்பதில் தவறு இல்லை. என்னைப்பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. முதலில் அவற்றை பார்த்து வருத்தப்பட்டேன். இப்போது அப்படி இல்லை. பக்குவப்பட்டு விட்டேன். திருமணம் பற்றி சிந்திக்கவில்லை அது நடக்கும்போது நடக்கும்.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.



நடுரோட்டில் தவித்த என்னை சென்னை மக்கள் காப்பாற்றினார்கள்: ஹன்சிகா





சென்னையில் மழை கொட்டித் தீர்த்த 24–ந்தேதி நள்ளிரவு ஹன்சிகா நடுரோட்டில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறி இருப்பது....

கடந்த 24–ந்தேதி இரவு 8 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினேன். அப்போது கொட்டித் தீர்த்த மழையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இரவு 8.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து காரில் ஓட்டலுக்கு புறப்பட்டேன். கார் மெதுவாக நகர்ந்தது.

இதனால் காரில் இருந்தபடியே எனக்குப் பிடித்த டி.வி. தொடர்களை செல்போனில் பார்த்தேன். இரவு 11.30 ஆன போதும் எனது கார் விமான நிலைய ரோட்டிலேயே நின்றது. அந்த அளவு போக்குவரத்து நெருக்கடி.

எனக்கு பிடித்தமான சினிமாவை பார்க்கத் தொடங்கினேன். கார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட செல்லவில்லை. நேரம் நள்ளிரவை கடந்து விட்டது. காரிலேயே இருந்ததால் கால்கள் வலிக்கத் தொடங்கின. இனியும் காத்திருக்க விரும்பாத நான், காரில் இருந்து இறங்கி அருகில் உள்ள ஓட்டலை தேடி மழையில் நனைத்தபடியே ரோட்டில் நடந்து சென்றேன்.

என் உடல் சேரும் சகதியுமாக ஆகி விட்டது. அதை கண்டு கொள்ளாமல் ஓட்டலை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். மழையால் சாலைகள் பாதிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கிய நிலையிலும், சென்னை மக்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டனர்.

சிலர் என்னை பெயர் சொல்லி அழைத்தார்கள். என் நிலைமையை புரிந்து கொண்டு நான் ஓட்டலுக்கு செல்ல எனக்கு வழிகாட்டி உதவி செய்தனர். அந்த நள்ளிரவிலும் நான் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தேன். இரவு 1 மணிக்கு ஓட்டலுக்கு சென்று படுக்கையில் படுத்தேன்.

சென்னை எனது வீடு என்பது இதன் மூலம் உறுதியாகி விட்டது. என்னை தங்களில் ஒருத்தியாக நினைத்து மக்கள் என்மீது காட்டிய அன்பையும், பாசத்தையும் பார்த்து நெகிழ்ந்து விட்டேன். நகரமே வெள்ளத்தில் தவித்தாலும் பிறருக்கு உதவி செய்யும் மனதை அறிந்தேன்.

எனக்கு சென்னை மக்கள் இருக்கிறார்கள். என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற நேரங்களில் நானும் அவர்களுக்காக இருக்கிறேன். தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அன்பும், பிரார்த்தனையும் என்று கூறியுள்ளார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies