சினிமா செய்தித் துளிகள் கெத்து படப்பிடிப்புக்கு பலத்த செக்யூரிட்டி!

26 Nov,2015
 

பத்துக்கும் மேற்பட்ட ஆண் நண்பர்கள் என்னை காதலித்துள்ளனர்!  ஓவியா


 
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளை, கதாநாயகர்களுடன் இணைத்து பல்வேறு காதல் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தற்போது வளர்ந்து வரும் கதாநாயகியான ஓவியாவிடம், அவருக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் குறித்து கேள்வி கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு, நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, என்னுடன் படித்த பத்துக்கும் மேற்பட்ட ஆண் நண்பர்கள் என்னிடம் தங்கள் காதலை சொல்லியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளை, கதாநாயகர்களுடன் இணைத்து பல்வேறு காதல் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தற்போது வளர்ந்து வரும் கதாநாயகியான ஓவியாவிடம், அவருக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் குறித்து கேள்வி கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு, நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, என்னுடன் படித்த பத்துக்கும் மேற்பட்ட ஆண் நண்பர்கள் என்னிடம் தங்கள் காதலை சொல்லியுள்ளனர்.
    

நான் அதைப்பற்றியெல்லாம் பொருட்படுத்தவில்லை. இதுவரை யாரையும் காதலிக்கும் எண்ணமும் எனக்கு தோன்றியதில்லை என்றார். மேலும் அவர் கூறும்போது, தற்போது ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘144’ படத்தில் நடித்து வருகிறேன். இரண்டு படங்களிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிளாமர் வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். அதேநேரத்தில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
 


  

 
தமிழ் மொழி பேச மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்!   நந்திதா 


 
அட்டகத்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்திதா. இப்படத்தை தொடர்ந்து ‘எதிர் நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இவரது நடிப்பில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘அஞ்சல’, ‘உப்பு கருவாடு’, ‘உள்குத்து’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.இவர் அளித்த பேட்டி வருமாறு, ‘என்னுடைய நடிப்பில் ‘உப்பு கருவாடு’ இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் குழந்தைத்தனமான பெண்ணாகவும், துணிச்சலான பெண்ணாகவும் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ராதா மோகன் இயக்கத்தில் நடிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த படத்தின் கதாபாத்திரம் என்னுடைய பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. எனக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரங்கள் அமைகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் இயக்குனர்கள் என்னை தேர்வு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது.
அட்டகத்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்திதா. இப்படத்தை தொடர்ந்து ‘எதிர் நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இவரது நடிப்பில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘அஞ்சல’, ‘உப்பு கருவாடு’, ‘உள்குத்து’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.இவர் அளித்த பேட்டி வருமாறு, ‘என்னுடைய நடிப்பில் ‘உப்பு கருவாடு’ இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் குழந்தைத்தனமான பெண்ணாகவும், துணிச்சலான பெண்ணாகவும் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ராதா மோகன் இயக்கத்தில் நடிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த படத்தின் கதாபாத்திரம் என்னுடைய பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. எனக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரங்கள் அமைகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் இயக்குனர்கள் என்னை தேர்வு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது.
    

படங்களில் டப்பிங் பேச ஆசைப்படுகிறேன். ஆனால், இதுவரை என்னை டப்பிங் பேச யாரும் அழைக்கவில்லை. தமிழ் மொழி பேச மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ஓரிரு வார்த்தைகள் எனக்கு பேச வராது. இதனால் ‘அஞ்சல’ படப்பிடிப்பின் போது, விமல் என்னை கலாய்த்தார்.‘அஞ்சல’ படத்தில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். இவர் ஒரு பேட்டியில் நான் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட்டாகிறது என்று கூறினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. பல சிறந்த படங்களை இயக்கிய ஆர்.வி.உதயகுமாருடன் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது.விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. சின்ன வேடத்தில்தான் நடித்திருந்தாலும் எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.‘உப்பு கருவாடு’ படம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும்’ என்றார்.
 


அமெரிக்க காதலரை மணக்கும் பிரீத்தி ஜிந்தா




   பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா. இவர் பஞ்சாப் கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். இவருடைய காதலர்கள் பற்றிய பல்வேறு செய்திகள் வெளிவந்தன.

ஆனால் இப்போது பிரீத்தி ஜிந்தா அமெரிக்காவில் உள்ள தனது 30 வயது காதலரை மணக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது பெயர் ஜீனிகுட் எனப், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாழும் இவர் நிதி ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார்.

சில வருடங்களுக்கு அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற பிரீத்தி ஜிந்தா அங்கு ஜீனிகுட் எனப்பை சந்தித்தார். அப்போது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் காதலிக்க தொடங்கினார்கள். இப்போது அவரை பிரீத்தி ஜிந்தா திருமணம் செய்து கொள்ளப்போகிறார்.

ஜனவரியில் பிரீத்தி ஜிந்தா – ஜீனி குட் திருமணம் நடைபெற இருக்கிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.



32 பேர் இணைந்து உருவாக்கிய நடிகையின் திருமண ஆடை!



  
.
இந்த ஆண்டு அமெரிக்காவில் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்ற ஹாட் பர்ஸ்யூட் பட நாயகி மற்றும் பிரபல டிவி

தொகுப்பாளினி சோபியா வெர்கராவின் திருமணம் கடந்த நவம்பர் 22ம் தேதி ஜோவுடன் நடைபெற்றது. திருமண விழாவில் அவர் அணிந்திருந்த ஆடை அனைவரின் கண்களையும் பறித்தது.

ஏனென்றால், 32 தேர்ந்த தையல் வல்லுனர்கள், 1657 மணி நேரங்கள் மெனக்கெட்டு அந்த ஆடையை வடிவமைத்துள்ளனர். ஜுகைர் முராத் என்ற ஆடை வடிவமைப்பாளர் தலைமையில் பிரத்யேகமான திருமண ஆடையை வடிவமைக்க கூறியுள்ளார். அதன் பேரில், மிகவும் கவர்ச்சிகரமான அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் அந்த ஆடையை வடிவமைத்துள்ளார் ஜுகைர்.

சோபியா, ஜோ திருமணம் அவர்களின் 400 நண்பர்கள் மற்றும் முக்கிய உறவினர்கள் முன்னிலையில் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்றது.

   


கெத்து படப்பிடிப்புக்கு பலத்த செக்யூரிட்டி!



ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலின் காதல், நண்பேன்டா படங்களைத் தொடர்ந்து உதயநிதி நடித்து வரும் படம் கெத்து. அவருடன்

எமிஜாக்சன், சத்யராஜ், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை திருக்குமரன் இயக்கி வருகிறார். உதயநிதியின் பேவரிட் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் கடந்த மாதத்தோடு படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

அதையடுத்து இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சென்னையிலுள்ள செந்தில் ஸ்டுடியோவில் கெத்து படத்தின் பேட்ஜ் ஒர்க் வேலைகள் நடந்து வருகிறது. உதயநிதி, எமிஜாக்சன் இருவரும் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு படப்பிடிப்பு தளத்தை உதயநிதியின் ரசிகர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த மூன்று நாட்களாக அந்த ஸ்டுடியோ வளாகத்திற்குள் உதயநிதியுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று ஏராளமான ரசிகர்கள் படையெடுத்ததால், அங்கு அதிகப்படியான கூட்டம் கூடி விட்டது. இதனால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, வெளிநபர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதோடு, அந்த ஸ்டுடியோவின் வெளி கேட் மூடப்பட்டு பல செக்யூரிட்டிகள் அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies