சினிமா செய்தித் துளிகள் ஆர்யா-அனுஷ்கா முத்தக் காட்சிக்கு தணிக்கை குழு எதிர்ப்பு

25 Nov,2015
 

            

 
விஜய்க்கு மனைவியாக நடிக்கும் சமந்தா!



 
விஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு, விஜய்-எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக சமந்தாவும் நடித்து வருகிறார்.இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு மனைவியாக எமிஜாக்சன் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தது. ஆனால், தற்போது, சமந்தாதான் விஜய்க்கு மனைவியாக நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. விஜய்க்கும் சமந்தாவுக்கும் திருமணமாகி குழந்தை பிறப்பதுபோல் ஒரு பாடலைக்கூட படமாக்கிவிட்டார்களாம். இவர்களின் குழந்தையாகத்தான் மீனாவின் மகள் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், பிரபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.வருகிற 26-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அன்றைய தேதியில் படத்தின் தலைப்பு என்ன என்பது தெரிந்துவிடும்.
விஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு, விஜய்-எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக சமந்தாவும் நடித்து வருகிறார்.இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு மனைவியாக எமிஜாக்சன் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தது. ஆனால், தற்போது, சமந்தாதான் விஜய்க்கு மனைவியாக நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. விஜய்க்கும் சமந்தாவுக்கும் திருமணமாகி குழந்தை பிறப்பதுபோல் ஒரு பாடலைக்கூட படமாக்கிவிட்டார்களாம். இவர்களின் குழந்தையாகத்தான் மீனாவின் மகள் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், பிரபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.வருகிற 26-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அன்றைய தேதியில் படத்தின் தலைப்பு என்ன என்பது தெரிந்துவிடும்.
    





 

ரசிகர்களை ஆட வைக்கும் சாவு குத்தாட்டம் போட்டாரா நடிகை ஐஸ்வர்யா... - 




 
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, திருடன் போலீஸ் போன்ற படங்களில் நடித்தவர், மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த ''காக்க முட்டை'' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக குப்பத்து அம்மாவாக நடித்து புகழ்பெற்றார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதில் விரைவில் வெளியாக இருக்கும் த்ரில்லர் படம் ''ஹலோ நான் பேய் பேசுறேன்''. சுந்தர்.சி தயாரிப்பில், பாஸ்கர் இயக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யாவுடன் வைபவ், ஓவியா உள்ளிட்டோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, திருடன் போலீஸ் போன்ற படங்களில் நடித்தவர், மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த ''காக்க முட்டை'' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக குப்பத்து அம்மாவாக நடித்து புகழ்பெற்றார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதில் விரைவில் வெளியாக இருக்கும் த்ரில்லர் படம் ''ஹலோ நான் பேய் பேசுறேன்''. சுந்தர்.சி தயாரிப்பில், பாஸ்கர் இயக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யாவுடன் வைபவ், ஓவியா உள்ளிட்டோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
    

இந்தப்படத்தில் ஐஸ்வர்யா தான் பேயாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெரும் ஒரு பாடலுக்கு சாவு குத்தாட்டம் போட்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா. சிவராஜ் குமார் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். காக்கா முட்டை படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தவர், இப்படி இந்தப்படத்தில் கெட்ட ஆட்டம் போட்டுள்ளாரே என்று அனைவரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர். மேலும் இந்தப்பாடல் ரசிகர்களை ஆட வைக்கும் என்று படக்குழு நம்புகிறது.
 

உடல் தோற்றத்தைவிட மனதுதான் உண்மையான அழகு! -அனுஷ்கா




 
தமிழ், தெலுங்கில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் அனுஷ்கா, தனது நடிப்பு அனுபவம் பற்றி கூறிய அவர்...‘‘எனக்கு பிடித்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறேன். ‘‘இஞ்சி இடுப்பழகி’’ படம் பெண்களுக்கு பிடிக்கும்.‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக முதலில் ‘போட்டோஷுட்’ எடுத்த போது பொருத்தமாக அமையவில்லை. மேக்கப்– ஆடை வடிவமைப்பால் சரி செய்யலாம் என்றனர். அதிக மேக்கப் ஆபத்தை விளைவிக்கலாம். உடல் எடையை அதிகாரித்தாலும் ஆபத்து வரும் என்றார்கள். என்றாலும், உடல் எடையை அதிகமாக்குவதுதான் சரி என்று முடிவு செய்தேன். 3 மாதங்களில் உடல் எடை 17 கிலோ கூடியது.
தமிழ், தெலுங்கில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் அனுஷ்கா, தனது நடிப்பு அனுபவம் பற்றி கூறிய அவர்...‘‘எனக்கு பிடித்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறேன். ‘‘இஞ்சி இடுப்பழகி’’ படம் பெண்களுக்கு பிடிக்கும்.‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக முதலில் ‘போட்டோஷுட்’ எடுத்த போது பொருத்தமாக அமையவில்லை. மேக்கப்– ஆடை வடிவமைப்பால் சரி செய்யலாம் என்றனர். அதிக மேக்கப் ஆபத்தை விளைவிக்கலாம். உடல் எடையை அதிகாரித்தாலும் ஆபத்து வரும் என்றார்கள். என்றாலும், உடல் எடையை அதிகமாக்குவதுதான் சரி என்று முடிவு செய்தேன். 3 மாதங்களில் உடல் எடை 17 கிலோ கூடியது.
    
,p> ஒல்லியோ, குண்டோ எதுவும் அழகுதான். உடல் தோற்றத்தைவிட மனதுதான் உண்மையான அழகு என்பதுதான் இந்த படத்தின் கதை. நான் இணைந்து நடித்தவர்களில் ரஜினியிடம் நிறைய கற்றுக் கொண்டேன். சூப்பர் ஸ்டாராக இருந்தும் அவரது எளிமை மிகவும் பிடித்தது. அவரது நடிப்பும், பொது வாழ்க்கையும் மிகவும் கவர்ந்தது. சூர்யா யூனிட்டில் எல்லோரையும் மதிப்பார். விக்ரம் ஆலோசனை வழங்குவார். ஆர்யா, பிரபாஸ் உள்பட எல்லோரும் எனது நண்பர்கள்.

நான் உயரமாக இருப்பதால் சில வேடங்கள் வரவில்லை. என்றாலும் அதைப்பற்றி கவலைப்பட்டது இல்லை. வெற்றிப் படங்களில் நடிக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். என்றாலும் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஜெயிக்க வைப்பது ரசிகர்கள் கையில். நான் சினிமாவுக்கு வருவேன் என்றே நினைக்க வில்லை. எல்லாம் கடவுள் விருப்பம்.திரை உலகில் போட்டி தேவை. அப்போது தான் சிறந்த நடிப்பை வழங்க முடியும். ‘நம்பர்–1’ போட்டியில் எனக்கு நம்பிக்கை இல்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தாலே போதும். எனக்கு வரிசையாக நல்ல படங்கள் அமைந்தது சந்தோஷமான விஷயம்.அடுத்து எனது நடிப்பில் பாகுபலி–2, சிங்கம்–3 படங்கள் வருகின்றன. பாகுபலி படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. இது உலக அளவில் கொண்டு செல்லும் படமாக இருக்கும்’’ என்றார்.
 


 அடுத்த வருட தீபாவளிக்கு விஜய் 60


  



'புலி' படத்திற்கு ஏற்பட்ட தோல்வியினால் தற்போது அட்லி இயக்கும் தாறு மாறு படத்தை வெற்றியடைய வைத்தே ஆக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறாராம் விஜய்.

 

அதனால், அவசரஅடியாக படத்தை எடுக்காமல் நிதானமாக எடுக்கும்படி அட்லீயிடம் சொல்லி இருக்கிறார் விஜய். எனவே தற்போது நடித்துவரும் தாறுமாறு படத்தின் வேலைகள் முடிய அடுத்த ஆண்டு பிப்ரவரி ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது. படத்தை 2016 ஏப்ரல் 14 அன்று வெளியிட உள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

துப்பாக்கி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறாராம் காஜல் அகர்வால். விஜய் 60 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார். இந்தப்படத்தின் மூலம் விஜய்யுடன் முதல்முறையாக இணைவிருக்கிறாராம் சந்தோஷ் நாராயணன். பிரவீன் கே.எல். எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். விஜயா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள 'விஜய் 60' படத்தின் துவக்கவிழா ஏப்ரல் மாதம் நடைபெறுமாம். அன்றைய தினமே படப்பிடிப்பையும் துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய் 60 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 




ஆர்யா-அனுஷ்கா முத்தக் காட்சிக்கு தணிக்கை குழு எதிர்ப்பு



 



ஆர்யா-அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ள படம் ‘இஞ்சி இடுப்பழகி’. ‘ருத்ரமாதேவி, பாகுபலி’ படங்களில் ராணி வேடம் ஏற்ற அனுஷ்கா இந்த படத்தில் குண்டு பெண்ணாக வருகிறார். இதற்காக நிறைய சாப்பிட்டு 17 கிலோ எடை கூடினார். அவரின் உடல் எடை கூடிய தோற்றத்திலான படங்கள் இணையதளங்களில் வெளியாகி படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில் எடைய குறைக்க கடும் உடற்பயிற்சிகள், பிசியோதெரபி மற்றும் யோகாவில் ஈடுபட்டுள்ளார். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் ஜீவா, நாகார்ஜுனா, பாபிசிம்ஹா, ஹன்சிகா, காஜல் அகர்வால், தமன்னா, ரேவதி அகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த படம் வெளியாகிறது.

ஆர்யாவும், அனுஷ்காவும் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் காட்சியும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இருவரையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், முத்தக் காட்சி ஆபாசமாக இருப்பதாக ‘யு’ சான்று அளிக்க மறுத்தனர். படக்குழுவினர் வற்புறுத்தியும் ஏற்கவில்லை. ‘யு’ சான்று கிடைக்காவிட்டால் அரசின் வரிவிலக்குக்கு தகுதியற்றதாகி விடும். இதனால் தணிக்கை குழு உறுப்பினர்களின் நிபந்தனைப்படி முத்தக்காட்சியின் நீளம் குறைக்கப்பட்டது. இதையடுத்து தணிக்கை குழு, படத்துக்கு ‘யு’ சான்று வழங்கியது. தெலுங்கில் முத்தக் காட்சியை நீக்க படக்குழுவினர் மறுத்துவிட்டனர். இதனால் தெலுங்கு பதிப்புக்கு தணிக்கை குழு ‘யுஏ’ சான்று அளித்துள்ளது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies