சினிமா செய்தித் துளிகள் எனக்கு கணவராக வருபவர் பெண்களை கவுரவிப்பவராக இருக்க வேண்டும்

24 Nov,2015
 

எக்ஸ்போர்ட்டில் வேலை செய்த கீர்த்தி சுரேஷ்!



தான் ஒரு யதார்த்தமான நடிகையாக சினிமாவில் நிலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அதனால் எந்த டைரக்டரிடம் கதை கேட்டாலும் எனக்கு பந்தா பகட்டான வேடமெல்லாம் வேண்டாம். எளிமையான, யதார்த்தமான பெண்ணாக நடிக்கக்கூடிய வேடமாக கொடுங்கள். அதில்தான் நிறைய பர்பாமென்ஸ் பண்ண முடியும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், இது என்ன மாயம் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள ரஜினி முருகன் படத்தில் மதுரை பெண்ணாக அந்த ஏரியா பெண்களைப்போன்றே நடை உடை பாவணைகளை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். இதற்காக அந்த ஏரியாவுக்கு படப்பிடிப்புக்காக சென்றபோது அங்கு படப்பிடிப்பை காணவந்த இளம் பெண்களின் நடவடிக்கைகளை கவனித்து அதை தனது நடிப்பில் பிரதிபலித்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.

அதைத் தொடர்ந்து அவர் பாபி சிம்ஹாவுடன் நடித்துள்ள பாம்பு சட்டை படத்தில் துணி தைக்கும் எக்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் ஏழை பெண்ணாக கநடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த கதாபாத்திரத்திற்காக தனது உடம்பில் ஏழ்மையை காட்ட பழைய துணிகளாக அணிந்து நடித்த அவர், நடிப்பிலும் எக்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் பெண்களைப்போன்றே இயல்பாக நடித்துள்ளாராம். அதனால் ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த இரண்டு படங்களும் தன்னை தமிழ் சினிமாவில் பேச வைக்கும் படங்களாக அமையும் என்று தான் எதிர்பார்ப்பதாக சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.


விக்ரம் - நயன்தாரா, சமரசம் செய்தது யார் ?




தமிழ்த் திரையுலகில் பிரிவதும் இணைவதும் வழக்கமா நடக்கும் ஒன்றுதான். நடக்கவே நடக்காத விஷயங்களாக கருதப்பட்ட விஷயங்கள்

காலப் போக்கில் நடந்துள்ளன. அதற்குப் பெரிய உதாரணமாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், அஜித் இருவரையும் சொல்லலாம். ஒரு காலத்தில் அவர் தயாரிப்பில் நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்திருந்த அஜித் தற்போது அவருடைய தயாரிப்பில் மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். 'துருவ நட்சத்திரம்' படப்பிரச்சனையில் பிரிந்த கௌதம் மேனன் - சூர்யா கூட சீக்கிரம் இணைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ்த் திரையுலகில் ரமணனின் வானிலை அறிக்கை போல எதுவும் நடக்கலாம்.

அப்படி ஒரு வானிலை மாற்றம் தற்போது விக்ரம், நயன்தாரா ஆகியோரிடையே ஏற்பட்டுள்ளது. 'கள்வனின் காதலி' படத்தில் நயன்தாரா நடித்த போது, விக்ரமுடன் நயன்தாராவை ஜோடியாக நடிக்கக் கேட்டதாகவும், ஆனால், 'கள்வனின் காதலி' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நயன்தாரா நடிக்கக் கூடாது என விக்ரம் கண்டிஷன் போட்டதாகவும் கோலிவுட்டில் நீண்ட காலமாக செய்தி உலவி வருகிறது. நயன்தாரா நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1999ல் வெளிவந்த 'சேது' படத்தின் திருப்பு முனை மூலம் விக்ரமும் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இந்த 10 ஆண்டுகளில் இருவருமே ஜோடி சேர்ந்து நடிக்காமலே இருந்தார்கள். விஜய் சேதுபதியுடனும் ஜோடி சேர்ந்த நயன்தாரா விக்ரமுடன் ஜோடி சேரவில்லை என்றால் எப்படி ?.

'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கரின் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் அடுத்த படத்திற்கு நயன்தாராவை ஜோடியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். நயன்தாராவின் மனதைக் கனிய வைத்த அந்த புண்ணியவான் யார் என்று கோலிவுட்டில் கடந்த சில நாட்களாகப் பரபரப்பாகப் பேச்சு எழுந்து வருகிறது. அந்த 'வி' யாக இருப்பாரோ?





மணிரத்னம் படத்தில் தன்ஷிகா!




ஓ காதல் கண்மணி படத்தின் ஹிட்டுக்குப்பிறகு ஒரு மெகா பட்ஜெட் படத்தை இயக்க திட்டமிட்டார் மணிரத்னம். அந்த

படத்திற்காக தெலுங்கு நடிகர்களான நாகார்ஜூனா, மகேஷ்பாபு மற்றும் கார்த்தி என ஒரு பெரிய கூட்டணியை அமைத்தார். ஆனால், கதையெல்லாம் ஓகேயான பிறகு சம்பள பேச்சுவார்த்தை நடந்தபோது தெலுங்கு நடிகர்கள் பேக் அடித்து விட்டனர். இதனால் பின்னர் அவர்களுக்கு பதிலாக அதே படத்தில் மீண்டும் துல்கர்சல்மானை இணைத்து அடுத்தகட்ட முயற்சிகளை தொடங்கினார் மணிரத்னம்.

ஆனால் பின்னர், துல்கர்சல்மானை நீக்கிவிட்டு கார்த்தி, நானி என்று புதிய கூட்டணியை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நித்யாமேனன், கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்த நிலையில், இப்போது நித்யாமேனன் மற்றும் இன்னொரு நாயகியாக தற்போது ரஜினியின் கபாலி படத்தில் அவரது மகளாக நடித்து வரும் தன்ஷிகா கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தில் தன்ஷிகா யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிற விவரம் தெரியவில்லை.

மேலும், மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்து வந்தது. ஆனால் இப்போது நான் ரஜினி படத்தில் நடிப்பதினால்தான் அது சாத்தியமாகியிருக்கிறது என்று சொல்லி கபாலி யூனிட் நண்பர்களிடம் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார் தன்ஷிகா.

 



 
எனக்கு கணவராக வருபவர் பெண்களை கவுரவிப்பவராக இருக்க வேண்டும்




 
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. தற்போது தெலுங்கு, இந்திப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஸ்ரேயா அளித்த பேட்டி வருமாறு:- ‘‘அழகு என்பது மனது சம்பந்தமானது. மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால் தன்னம்பிக்கை வளரும். அந்த தன்னம்பிக்கை ஒருவரை அழகாக காட்டும். எனக்கு நல்ல எண்ணங்களும், தன்னம்பிக்கையும் நிறைய இருக்கிறது. என் கவர்ச்சி தோற்றத்துக்கு உணவும் உடற்பயிற்சியும் காரணம். தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறேன். உடற்பயிற்சியை நடிகைகள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. எல்லோரும் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்.காலை உணவாக புரோட்டாவும் வெள்ளை கருவில் ஆம்லேட்டும் சாப்பிடுகிறேன். ஆரஞ்சு பழச்சாறும் அருந்துவேன். மதியம் பருப்பு, காய்கறி குழம்பு, ரொட்டி சாப்பிடுவேன். இரவில் ‘கிரில்டு சிக்கன்,’ மீன் சாப்பிடுவேன். ஐஸ்கிரீம், இனிப்பு வகைகளை தொட மாட்டேன். எனக்கு சினிமாவில் யாரும் போட்டி இல்லை. ஒவ்வொரு நடிகைக்கும் தனித்தனித் திறமை இருக்கிறது. அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு வாய்ப்புகள் தேடிவரும்.
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. தற்போது தெலுங்கு, இந்திப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஸ்ரேயா அளித்த பேட்டி வருமாறு:- ‘‘அழகு என்பது மனது சம்பந்தமானது. மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால் தன்னம்பிக்கை வளரும். அந்த தன்னம்பிக்கை ஒருவரை அழகாக காட்டும். எனக்கு நல்ல எண்ணங்களும், தன்னம்பிக்கையும் நிறைய இருக்கிறது. என் கவர்ச்சி தோற்றத்துக்கு உணவும் உடற்பயிற்சியும் காரணம். தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறேன். உடற்பயிற்சியை நடிகைகள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. எல்லோரும் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்.காலை உணவாக புரோட்டாவும் வெள்ளை கருவில் ஆம்லேட்டும் சாப்பிடுகிறேன். ஆரஞ்சு பழச்சாறும் அருந்துவேன். மதியம் பருப்பு, காய்கறி குழம்பு, ரொட்டி சாப்பிடுவேன். இரவில் ‘கிரில்டு சிக்கன்,’ மீன் சாப்பிடுவேன். ஐஸ்கிரீம், இனிப்பு வகைகளை தொட மாட்டேன். எனக்கு சினிமாவில் யாரும் போட்டி இல்லை. ஒவ்வொரு நடிகைக்கும் தனித்தனித் திறமை இருக்கிறது. அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு வாய்ப்புகள் தேடிவரும்.
    

ஒரு நடிகைக்கு படங்கள் குறைந்து இன்னொரு நடிகைக்கு நிறைய படங்கள் வந்தால் நான்தான் உயர்ந்த நடிகை என்று நினைக்கக்கூடாது. அதுபோல் படங்கள் குறையும் நடிகை தன்னை தாழ்வாகவும் நினைக்கக்கூடாது. அவரவர் கதாபாத்திரத்துக்கு ஏற்ற கதைகள் நிச்சயம் கிடைக்கும். என்னை மிகவும் சந்தோஷப்படுத்துவது ஓய்வில்லாத வேலை. எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். வேலை இல்லாமல் இருந்தால் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடும். பார்வை இல்லாதவர்கள் ஒவ்வொரு நாளும் எப்படி சிரமப்படுவார்கள் என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கும். இதற்காகவே நான் மும்பையில் நடத்தும் அழகு நிலையத்தில் பார்வையற்றவர்களை வேலைக்கு வைத்துள்ளேன்.எனக்கு கதக் நடனமும், ராஜஸ்தானிய கிராமிய நடனமும் தெரியும்.

முழுக்க நடனத்தை மையமாக வைத்து தயாராகும் படம் ஒன்றில் நடன கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசையாக இருக்கிறது. சினிமாவில் எனக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது இல்லை. எல்லா துறைகளிலுமே நல்லதும் கெட்டதும் இருக்கிறது. நம்ம வேலையை மட்டும் பார்த்துவிட்டுப்போனால் எந்த பிரச்சினையும் இல்லை. பெண் சுதந்திரம் பற்றி பேசப்படுகிறது. என்னை கேட்டால் ஆணுக்கும் சுதந்திரம் வேண்டும் பெண்ணுக்கும் சுதந்திரம் வேண்டும். ஆண் இல்லாமல் பெண் இல்லை. பெண் இல்லாமல் ஆண் இல்லை. இருவரும் சேர்ந்தால்தான் எதுவும் சாத்தியமாகும். எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் என்பது எனக்கு ஏற்கனவே தலையில் எழுதப்பட்ட விஷயம். நேரம் வரும்போது எனக்கான அந்த ஆள் என் எதிரில் வந்து நிற்பார். அப்போது அவர் மீது காதல் வரும். திருமணமும் செய்துகொள்வேன். எனக்கு கணவராக வருபவர் பெண்களை கவுரவிப்பவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராகவும் இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
 




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies