சினிமா செய்தித் துளிகள் ரவுடி பெண்ணாக நயன்தாரா!

20 Nov,2015
 

             


பிறந்தநாளையொட்டி போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றார் நயன்தாரா

 



நடிகை நயன்தாரா, கேரளாவை சேர்ந்தவர். 1984-ம் ஆண்டில் நவம்பர் மாதம் 18-ந் தேதி பிறந்தார். அவருடைய சொந்த பெயர், டயானா மரியம் குரியன். சினிமாவுக்காக, நயன்தாரா என்று பெயரை மாற்றிக் கொண்டார். மலையாள படங்களில் நடித்து வந்த அவர், 2005-ம் வருடம் சரத்குமார் கதாநாயகனாக நடித்து, ஹரி டைரக்டு செய்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களில், அவர் நடித்து வருகிறார். அவரை ரசிகர்கள், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள். நயன்தாராவுக்கு 30 வயது நிறைவடைந்து நேற்று 31 வயது பிறந்தது. தனது பிறந்தநாளையொட்டி அவர், போப் ஆண்டவரை சந்தித்து ஆசி பெற விரும்பினார். இதற்காக, கடந்த 13-ந் தேதி அவர் ரோம் நகருக்கு விமானம் மூலம் சென்றார்.

கடந்த 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போப் ஆண்டவர் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில், பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது அவரிடம் நயன்தாராவும் ஆசி பெற்றார். ‘‘போப் ஆண்டவரிடம் ஆசி பெற வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அந்த ஆசை என்னுடைய 31-வது வயதில் நிறைவேறியது’’ என்று நயன்தாரா கூறினார். போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றபின், அவர் வெனீஸ் நகருக்கு சென்றார். வருகிற 26-ந் தேதி அவர் இந்தியா திரும்புகிறார்.


எனது திருமணம் ஆடம்பரமாக நடக்காது: தமன்னா


 

தமன்னாவுக்கு ‘பாகுபலி’ படம் பெயர் வாங்கி கொடுத்தது. அதன் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்தி படமொன்றில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடை உடை ஸ்டைல் மற்றும் கவர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார். தனக்கு பிடித்த விஷயங்கள் பற்றி தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

சினிமாவில் நான் உயர்ந்தது அதிர்ஷ்டம். எளிமையாக இருக்கவே எனக்கு பிடிக்கும். ஆடைகளையும் அப்படியே தேர்வு செய்கிறேன். சினிமாவில் உடுத்தும் ஆடைகளை, டைரக்டர்களும் ஆடை அலங்கார நிபுணர்களும் முடிவு செய்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் நடிகைபோல் ஆடைகள் உடுத்த மாட்டேன். எளிமையாகவும் அதே நேரம் ஸ்டைலாகவும் இருக்கும் ஆடைகளை அணிவேன்.

சமூக வலைத்தளங்களில் பார்த்தே அதுமாதிரியான ஆடைகளை தேர்வு செய்கிறேன். இந்திய மணப்பெண்கள் இப்போதைய புது யுகத்தில் எந்த மாதிரி தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று என்னை கேட்டால், அவர்கள் உடுத்தும் ஆடைகளிலேயே தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்த்துவதாக இருக்கவேண்டும். ஸ்டைலாகவும் இருக்க வேண்டும். உலகில் எனக்கு பிடித்த மணப்பெண் யார்? என்று கேட்டால் இளவரசி டயானா என்பேன்.

அவருடைய திருமணம் அதிசயிக்கத்தக்கதாக இருந்தது. அவர் நடை உடை பாவனைகள் அசத்தலாக இருந்தன. சரித்திரத்தில் வரும் மணமகள் போலவே அவர் இருந்தார். எனது மனம் கவர்ந்த மணப்பெண் அவர்தான். எனது திருமணம் ஆடம்பரமாக நடக்காது. அப்படி நடக்கும் திருமணங்கள் எனக்கு பிடிக்காது. என் திருமணம் எளிமையாக நடக்கும்.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே திருமணத்துக்கு அழைப்பேன். அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் திருமண சடங்குகள் இருக்கும். எனது அப்பாவும் அம்மாவும் பதிவு திருமணம் செய்து கொண்டவர்கள். நான் சடங்கு சம்பிரதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஏதோ ஒருநாளில் நடக்கப்போகும் என் திருமணம் சடங்கு சம்பிரதாயப்படியே நடக்கும்’’.

இவ்வாறு தமன்னா கூறினார்.





பணத்துக்காக சினிமாவுக்கு வரவில்லை: இனியா


 



சிம்ரன், இனியா, நிகிஷா பட்டேல், கணேஷ், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ள படம், ‘கரையோரம்’. இந்த படத்தை எல்.ஆனந்த், ஜெ.ராமலிங்கையா ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். ஜெ.கே.எஸ். டைரக்டு செய்து இருக்கிறார்.

சுஜித் ஷெட்டி இசையமைத்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை, ஸ்டூடியோ 9 சுரேஷ் வெளியிட்டார். விழா முடிவடைந்த பின், இனியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு இனியா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கதாநாயகியாக நடித்து வந்த நீங்கள் ஒரு படத்தில் கவர்ச்சி நடனம் ஆடினீர்கள். இன்னொரு படத்தில் வில்லியாக நடித்தீர்கள். இந்த அளவுக்கு இறங்கி வந்தது ஏன்?

பதில்:- கதாநாயகியாகத்தான் படங்களில் வரவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் ஒரு நடிகை. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிப்பேன். நட்புக்காக, ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஆடினேன். வில்லி வேடம் எனக்கு பிடித்து இருந்ததால், நடித்தேன். கதாநாயகியாக நடித்தால்தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது.

கேள்வி:- சக கதாநாயகிகளில் சிலர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்களே... நம்மால் அப்படி வாங்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உங்களுக்கு இருக்கிறதா?

பதில்:- நான் பணத்துக்காக சினிமாவுக்கு வரவில்லை. திறமையாக நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே வந்தேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், இப்போது என் கைவசம் பத்து படங்கள் இருந்திருக்கும். நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருப்பேன். அப்படி நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை.

கேள்வி:- நீங்கள் நினைத்த இலக்கை அடைந்து விட்டீர்களா?

பதில்:- இன்னும் அடையவில்லை. தமிழ் பட உலகில் எனக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. மலையாள பட உலகிலும் பிரபலமாகி வருகிறேன். தெலுங்கு, கன்னட பட உலகில் இப்போதுதான் அறிமுகமாகி இருக்கிறேன்.

கேள்வி:- எந்த கதாநாயகனுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

பதில்:- ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் ஆகியோருடன் இணைந்து நடிக்க வேண்டும். இந்தியில், ஷாகித் கபூருடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு இனியா கூறினார்.



தொகுப்பாளினியை மணக்கும் கயல் சந்திரன்





பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த ‘கயல்’ படத்தில் நடித்தவர் சந்திரன். இப்படத்தை தொடர்ந்து பிரபுசாலமன் தயாரிக்கும் ‘பைசல்’ என்ற படத்திலும், பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் ‘கிரகணம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும், தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியான அஞ்சனாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

அஞ்சனா, பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். தற்போது கோலிவுட்டில் நடக்கும் சில விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், ஒரு விருது வழங்கும் விழாவில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை பார்த்ததும் சந்திரனுக்கு பிடித்துப்போனதாம். முதலில் அஞ்சனாவுக்கு நண்பராக அறிமுகமாகியிருக்கிறார். பின்னர், இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர்.

இவர்கள் காதலிப்பதை சந்திரனே உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் வருகிற நவம்பர் 29-ந் தேதி நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த வருடம் மார்ச் மாதம் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




 ரவுடி பெண்ணாக நயன்தாரா!



தற்போதைய கோலிவுட்டில் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வரும் ஹீரோக்கள் நயன்தாரா, லட்சுமிமேனன் போன்ற

ராசியான நடிகைகளுடன் நடிப்பதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுடன் நடித்தால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால், அவர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுத்து புக் பண்ண தயாரிப்பாளர்களை வற்புறுத்துகிறார்கள்.

அந்த வகையில், நான் சிகப்பு மனிதன், தவிர லட்சுமிமேனன் நடித்த எல்லா படங்களுமே ஹிட் என்பதால் அவருக்கு கோலிவுட்டில் பிரகாசமான எதிர்காலம் உருவாகியிருக்கிறது. அதேபோல், நயன்தாரா ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார். தனி ஒருவன், மாயா, நானும் ரவுடிதான் படங்களில் தொடர் வெற்றி அவரது மார்க்கெட் கடுமையாக உயர்த்தி விட்டுள்ளது.

அதன்காரணமாக, அடுத்தபடியாக தெலுங்கில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று நினைத்த நயன்தாரா அந்த திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு விட்டார். மாறாக, தமிழில் மாறுபட்ட கதைகளில் நடிப்பதில் கவனத்தை திருப்பியிருக்கிறார்.

இந்த நிலையில், ஈ படத்திற்கு பிறகு ஜீவாவுடன் நயன்தாரா நடித்து வரும் திருநாள் படத்தில் அவருக்கு பள்ளி ஆசிரியை வேடம். ஆனால் கிராமத்து தேவதையாக பாவாடை தாவணி கெட்டப்பில் படம் முழுக்க வளைய வருகிறாராம். நயன்தாராவின் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில், கலர்புல்லான லொகேசன்களில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கிறார்களாம். அதோடு இந்த படத்தில் ரவுடியான ஜீவாவை திருத்தும் காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம் நயன்தாரா. அந்த வகையில், பிளேடு போடும் ரவுடியான ஜீவாவை கும்பகோணத்து மக்கள் பிளேடு என்றுதான் அழைப்பார்களாம். நயன்தாராவை காதலிக்கும் அவர், ஒரு காட்சியில் அவருக்கு உதட்டு முத்தம் கொடுக்க முயற்சிப்பார்.

 

அப்போது, தனது வாய்க்குள் இருந்து ஒரு பிளேடை எடுத்து உதட்டில் வைப்பார் நயன்தாரா. அதைப்பார்த்து பிளேடுக்கே பிளேடா என்று ஷாக்காகி நிற்பாராம் ஜீவா. இந்த காட்சியில் ஒரு ரவுடி பெண் போன்றே பர்பாமென்ஸ் கொடுத்த நயன்தாராவை டோட்டல் யூனிட்டே கைதட்டி உற்சாகப்படுத்தினார்களாம். திருநாளில் டிரைலரில் இந்தக்காட்சி இடம்பெற்றுள்ளது.






Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies