சினிமா செய்தித் துளிகள் கவர்ச்சி குறித்து ஸ்ருதிஹாசனின் கருத்து

16 Nov,2015
 


தமிழில் பிசியான எமி ஜாக்சன்









மதராச பட்டினம்’ மூலம் தமிழ் படத்தில் அறிமுகமானவர் எமிஜாக்சன். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் எமிஜாக்சனுக்கு முக்கிய இடம் கிடைத்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் இந்தியில் வெளியான படம் ‘சிங் இஸ் பிளிங்’. பிரபுதேவா இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை. என்றாலும், இந்தியில் தான் அவர் தீவிர கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது தமிழ் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தனுசுடன் ‘தங்க மகன், உதயநிதியுடன் ‘கெத்து’ ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டார். அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அட்லி இதை இயக்குகிறார்.

இதுதவிர ஜீவா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்களிலும் நடிக்க இருக்கிறார். இவை தவிர ரஜினியின் எந்திரன்–2 படத்திலும் எமிஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

2016 டிசம்பர் வரை தமிழ் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து இருக்கிறார். எனவே, எமிஜாக்சன் இனி முழுக்க முழுக்க சென்னை வாசி ஆகி விடுவார் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.






பாரிஸுக்காக மட்டுமல்ல உலகத்துக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்: நடிகை த்ரிஷா





சமூக வலைதளங்கள் முழுவதிலும், பாரிஸ் நகர குண்டு வெடிப்பின் போது பலியானோருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் எனப் பலரும் முழங்கிக் கொண்டிருக்க, நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், வேறொரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

”பாரிசின் கால்பந்து மைதானத்திலும், இசை அரங்கத்திலும் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலையும், துப்பாக்கி சூட்டையும் கண்டு துயரம் அடையும் நமக்கு, இந்தத் தாக்குதலுக்கு இரு தினங்கள் முன்னர் பெய்ருட்டில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி தெரியாமல்போனது வருத்தத்திற்குரியது. ஏனெனில், அதில்தான் வெள்ளையர் ஒருவரும் உயிரிழக்கவில்லையே..!

பாரிசின் தாக்குதலுக்கு ‘அகதிகள் பிரச்சனையே காரணம்’ என குற்றம் கூறுவதை நிறுத்துவோம். ஏனெனில், அவர்களும் இதேபோன்ற குண்டு வெடிப்புகளுக்கும், துப்பாக்கிச் சூடுகளுக்கும் பயந்தே, தமது சொந்த ஊரை விட்டு தலைதெறிக்க ஓடி வருகின்றனர்.

தோளில் ஒரு பையுடன், நீண்ட நடைப்பயணம் மேற்கொள்ளும் அவர்களுக்கு செல்லும் பாதையைப் பற்றியோ, அந்த இடத்துக்குள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவோமா? என்பது பற்றியோகூட தெரிவதில்லை.

ஆகவே, உடைந்துபோன கட்டிடங்களுக்காக மட்டும் பிரார்த்தனை செய்யாதீர்! எல்லா மூலைகளிலும் உடைந்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!

மேலும், வீடிழந்து, நாடிழந்து, உற்றார் உறவினரை இழந்து தங்குவதற்கு நிழற்கூரைகூட இல்லாது தவிக்கும் அகதிகளுக்காவும் பிரார்த்தனை செய்யுங்கள்” என உருக்கமான வேண்டுகோளை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டிருந்தார்.


 பிரபாசுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயம்: அனுஷ்காவுடனான காதல் முறிந்ததாக பரபரப்பு





நடிகை அனுஷ்காவும் தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாக செய்திகள் பரவின. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் வெளியான ‘பாகுபலி’ படத்தில் இவர்கள் இணைந்து நடித்து இருந்தனர்.

இதன் இரண்டாம் பாகத்திலும் ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இருவருக்கும் இடையே படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. அடிக்கடி ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறினர். அனுஷ்காவும், பிரபாசுடன் இணைந்து நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிவந்தார்.

அனுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது. எனவே அவருடைய பெற்றோர் விரைவில் திருமணத்தை முடித்து விட அவசரம் காட்டுகின்றனர் என்றும் பிரபாசை மணக்க அவர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டனர் என்றும் தெலுங்கு பட உலகில் பேச்சு அடிபட்டது. பாகுபலி இரண்டாம் பாகம் படம் வெளியானதும் இவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது இவர்கள் காதல் திடீர் என முறிந்து விட்டதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. அனுஷ்காவை மணப்பது பிரபாஸ் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்றும், அவருக்கு சொந்தத்தில் வேறு பெண்ணை பார்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பிரபாசும் பெற்றோரை எதிர்க்க விரும்பாமல் அவர்கள் பார்த்த பெண்ணை மணக்க சம்மதித்து விட்டார் என்கின்றனர்.

இது அனுஷ்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மன அமைதிக்காக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வெளிநாடு சென்று விட்டார். அனுஷ்கா தரப்பில் அவரது மானேஜர் இந்த காதல் கிசுகிசுக்களை மறுத்துள்ளார். அவர் கூறும்போது, ‘அனுஷ்கா பற்றி அடிக்கடி வதந்திகள் வருகின்றன. ஏற்கனவே தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும் செய்தி வந்தது.

இப்போது பிரபாசுடன் இணைத்து பேசுகின்றனர். இதில் உண்மை இல்லை. அனுஷ்கா யாரையும் காதலிக்கவில்லை. தாய்லாந்தில் உடல் எடையை குறைக்கபோகிறார் என்று சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை. இங்கேயே அதற்கான பயிற்சிகளில் ஈடுபடுகிறார்.’ என்றார்.






சினிமாவில் நல்லது கெட்டது இரண்டும் இருக்கிறது-நித்யா மேனன்






தமிழில் ‘ஓ காதல் கண்மணி, வெப்பம், நூற்றி எண்பது, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, மாலினி 22 பாளையங்கோட்டை, காஞ்சனா 2-ம் பாகம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர், நித்யாமேனன். தற்போது சூர்யாவுடன் ‘24’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். மலையாளம், தெலுங்கு பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சினிமா வாழ்க்கை பற்றி நித்யா மேனன் அளித்த பேட்டி வருமாறு:- ‘‘சினிமாவில் நல்லது கெட்டது இரண்டும் இருக்கிறது. நடிகைக்கு பிரபலம் என்ற அந்தஸ்து இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. தனியாக எங்களால் வெளியே போக முடியவில்லை. கூட்டம் கூடிவிடுகிறது. திருட்டுத்தனமாக படமும் எடுக்கிறார்கள். மற்ற யாரையேனும் அவர்களின் அனுமதி இல்லாமல் படம் எடுத்தால் சும்மா விடுவார்களா? ஆனால் எங்களை அனுமதி கேட்காமலேயே படம் பிடிக்கிறார்கள்.

தமிழில் ‘ஓ காதல் கண்மணி, வெப்பம், நூற்றி எண்பது, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, மாலினி 22 பாளையங்கோட்டை, காஞ்சனா 2-ம் பாகம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர், நித்யாமேனன். தற்போது சூர்யாவுடன் ‘24’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். மலையாளம், தெலுங்கு பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சினிமா வாழ்க்கை பற்றி நித்யா மேனன் அளித்த பேட்டி வருமாறு:- ‘‘சினிமாவில் நல்லது கெட்டது இரண்டும் இருக்கிறது. நடிகைக்கு பிரபலம் என்ற அந்தஸ்து இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. தனியாக எங்களால் வெளியே போக முடியவில்லை. கூட்டம் கூடிவிடுகிறது. திருட்டுத்தனமாக படமும் எடுக்கிறார்கள். மற்ற யாரையேனும் அவர்களின் அனுமதி இல்லாமல் படம் எடுத்தால் சும்மா விடுவார்களா? ஆனால் எங்களை அனுமதி கேட்காமலேயே படம் பிடிக்கிறார்கள்.
 

அது சுத்தமாக பிடிக்கவில்லை. நாங்கள் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர். அதற்கு சம்மதிக்காவிட்டால் மோசமான பெண் என்று முத்திரை குத்துகின்றனர். எனக்கு திமிர் கிடையாது. ஆனால் மற்றவர்களிடம் கடுமையாக இருப்பேன். படப்பிடிப்புகளுக்கு என்னுடன் எனது தாயோ, தந்தையோ வருவது இல்லை. மானேஜர் கூட இருக்க மாட்டார். என்னை நான்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். முரண்பாடாக யாரேனும் நடந்தால் திட்டுவேன். அதை திமிர் என்று சொல்கிறார்கள். நல்ல விஷயங்களைப்பேச யாருக்கும் பயப்பட தேவை இல்லை. இதுவரை நான் நடித்த படங்களின் டைரக்டர்களும், நடிகர்களும் என்னை கஷ்டப்படுத்தியது இல்லை. ஆண்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை. நான் குண்டாகவும் குள்ளமாகவும் இருப்பதாக சொல்கிறார்கள். நடிப்புக்காக சாப்பாட்டை தியாகம் செய்வது பைத்தியக்காரத்தனம். குண்டு, உயரம் கடவுள் கொடுத்தது. அதை விமர்சிக்க கூடாது. வாழ்க்கையை சரியாக வாழ்வதில் தான் அழகு இருக்கிறது. நான் பதினெட்டு வயதில் காதலில் விழுந்தேன். ஒரு கட்டத்தில் இவரோடு என் வாழ்க்கை சந்தோசமாக இருக்காது என்று மனதுக்கு பட்டது. உடனே அவரை விட்டுப்பிரிந்துவிட்டேன். எனது வாழ்க்கை இப்போது இருப்பதை விட இன்னும் சந்தோஷமாக இருக்கும் என்று ஒருவரை சந்திக்கும்போது எப்போது எனக்கு தோன்றுகிறதோ அவரை திருமணம் செய்துகொள்வேன். இதுவரை அப்படிப்பட்டவரை சந்திக்கவில்லை. பொருத்தமில்லாத ஒருவரை மணந்து கஷ்டப்படுவதை விட, திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது மேலானது.
 
 



கவர்ச்சி குறித்து ஸ்ருதிஹாசனின் கருத்து

   

ஸ்ருதிஹாசன் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானது இந்தி சினிமாவில்தான். சல்மான்கான் நடித்த லக் படத்தில் நீச்சல்

உடையணிந்து நடித்து பாலிவுட் நடிகைகளுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார். முதல் படத்திலேயே அதிரடி பிரவேசம் செய்த ஸ்ருதிஹாசன், அடுத்தடுத்து நடித்த படங்களிலும் படத்துக்குப்படம் தனது கவர்ச்சி எல்லை அதிகப்படுத்தி சில தெலுங்கு படங்களில் ஆபாச எல்லைக்கும் சென்றார். இதனால் அவர் நடித்த படங்களை சென்சார்போர்டின் கத்தரிகள் மனம் போல் வெட்டித்தள்ளின. ஆனால் அப்படி கத்தரிக்கப்பட்டு வெளியான படங்களில் ஸ்ருதிஹாசன் ஆபாசமாக நடித்திருப்பதாககூட ஆந்திர மகளிர் அமைப்புகள் போர்க்கொடி பிடித்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தன.

அதனால் அதன்பிறகு தனது கவர்ச்சியை ஓரளவு குறைத்துக்கொண்ட ஸ்ருதிஹாசன், தமிழ்ப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில், பூஜை, புலி படங்களுக்குப்பிறகு வேதாளம் படத்தில் நடித்த ஸ்ருதி, அடுத்து சூர்யாவுடன் சிங்கம்-3 படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், கவர்ச்சியாக நடிப்பது குறித்து ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சிலர் கவர்ச்சியாக நடிப்பதைவிட குடும்பப்பாங்கான வேடங்களில நடிப்பதுதான் கடினம் என்று நினைக்கிறார்கள். ஆனால் என்னைக்கேட்டால் கவர்ச்சியாக நடிப்பதுதான் கடினம் என்பேன். கவர்ச்சி உடைதரித்து மரத்தை சுற்றி டூயட் பாடுவதிலும் பல கஷ்டங்கள் உள்ளன. அதனால் நான், கிளாமர், ஹோம்லி என இரண்டுவிதமான கேரக்டர்களையும் ஒரேமாதிரி மனநிலையுடன்தான் பார்க்கிறேன். ஒரேமாதிரி மனநிலையுடன்தான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்





Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies