சினிமா செய்தித் துளிகள் நடிகையின் கடைசி நாளில் நடந்த விபரீதம்

08 Nov,2015
 

கரையேற முடியாமல் தவிக்கும் சிம்பு

காதலில் விழுந்த சிம்பு, கரையேற முடியாமல் தவிப்பு என்று தலைப்பு செய்தியே போடுகிற அளவுக்கு இருக்கிறாராம் இப்போது. வேறொன்றுமில்லை...

நயன்தாராவின் பிரேக் அப்பை எளிதில் ஜீரணித்துக் கொண்டவரால், ஹன்சிகாவின் பிரேக் அப்பை மட்டும் ஜீரணிக்கவே முடியவில்லையாம். தொடர்ந்து தன் தரப்பு நியாயங்களை அவருக்கு மெயிலில் அனுப்பிக் கொண்டேயிருக்க, மயில் செவி சாய்த்தால்தானே? இதே சினிமாவில் தலைநிமிர்ந்து ஒரு ஹிட் கொடுக்கணும். அப்ப என்னை திரும்பி பார்க்க வைக்கணும் என்று தனக்கு தானே சூளுரைத்துக் கொள்ளவும் செய்கிறாராம். திமிங்கலம் கரையேறுவது எப்போ?  திருவிழா சூடத்தை ஊதி அணைக்கறது எப்போ?



கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ஸ ஒரு முன்னோட்டம்!

‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’ படங்களை தொடர்ந்து இந்த வருடத்தில் தன் மூன்றாவது படத்தை கொடுக்கவிருக்கிறார் கமல். நாளை மறுநாள் தீபாவளி தினத்தில் இவர் நடித்துள்ள ‘தூங்காவனம்’ படம் உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படத்தில் கமலுடன் த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத், கிஷோர், யூகி சேது, மதுஷாலினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படத்தின் ஹைலைட்ஸ் மற்றும் முன்னோட்டம்ஸ

படப்பிடிப்புக்குச் செல்லும் முன்னரே அனைவருக்கு நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டதாம். எனவே படப்பிடிப்பை இரண்டே மாதங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் முடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் காரின் நம்பர் ப்ளேட் முதல் போலீஸ் உடை என அனைத்தையுமே மாற்றி தெலுங்கு படத்திற்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். த்ரிஷாவுக்கு கமலை விட இது முக்கிமான படமாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் த்ரிஷாவுக்கு இது 50வது படம். மேலும் இப்படத்தில் த்ரிஷா ஏற்றுள்ள போலீஸ் கேரக்டர் மிகவும் துணிச்சலான கேரக்டராம். த்ரிஷாவுடன் கமல்ஹாசன், கிஷோர் என இவர்கள் மூவரும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் மற்றும் சம்பத் போதை மருந்து கடத்தும் வில்லன்களாக நடித்துள்ளனர். சில நேரங்களில் கமலே ஒப்பனைக் கலைஞராகவும் பணியாற்றியிருக்கிறார். த்ரிஷாவுக்கு இவர்தான் பல காட்சிகளுக்கு ஒப்பனை செய்திருக்கிறார். மதுஷாலினி கேரக்டருக்கு முதலில் ப்ரியா ஆன்ந்தை கேட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்தான் மதுஷாலினிக்கு சிபாரிசு செய்தாராம். கமல் இப்படத்தின் தன் ஒரிஜினல் தோற்றத்திலே நடித்துள்ளார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவரது ஸ்டைல் தனி சிறப்புடன் காணப்படுகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறார்கள். படப்பிடிப்பை நடத்தும்போதே அதற்கான எடிட்டிங்கையும் அங்கேயே நடத்தி வருகிறார்கள். எடிட்டிங் பணிகளுக்கு என்று தனியாக எந்த ஒரு நாளையும் படக்குழு செலவிடவில்லையாம். படத்தில் ஒரே ஒரு பாடல்தான் இடம் பெற்றுள்ளது. அப்பாடலை கவிஞர் வைரமுத்து எழுத, கமல்ஹாசனே பாடியிருக்கிறார். சென்னை அருகேயுள்ள ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் பெரிய பார் செட் ஒன்று போடப்பட்டு அதனுள் பிரத்யேக காட்சிகளை படமாக்கியுள்ளனர். படத்தில் பார் காட்சிகள் அதிகமாக இருப்பதால் சென்சார் அதிகாரிகள் ‘U/A’ சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். ‘ஸ்லீப்லஸ் நைட்’ என்ற ப்ரெஞ்ச் படத்தின் தழுவல் இப்படம் என்பதால் அப்படத்தில் பணியாற்றிய சண்டைக் கலைஞர்கள் இப்படத்திலும் பணியாற்றி இருக்கிறார்களாம். படத்தின் ஒலிவடிவமைப்பை லாஸ்-ஏஞ்சல்ஸ் நகரில் செய்திருக்கிறார்கள். கமலுக்கு பல விதமான மொழிகள் தெரிந்தாலும் முதன்முறையாக இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு அவரே குரல் கொடுத்துள்ளார். ஆனால் இதற்கு முந்தைய கமல் படங்களுக்கு தெலுங்கில் பேசியவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான். தெலுங்கில் நாகார்ஜுன், அமலா தம்பதிகளின் மகன் அகிலின் படம் நவம்பர் 10ஆம் தேதி வெளியாவதால், ‘தூங்காவனம்’ தெலுங்கு பதிப்பு நவம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது



மது.. போதை..மரணம்... நடிகையின் கடைசி நாளில் நடந்த விபரீதம்
பிரபல இந்தி நடிகை ஜியாகான் தற்கொலை செய்துகொண்டார். அவரை ஏமாற்றி, தற்கொலைக்கு தூண்டியதாக காதலரான நடிகர் சூரஜ் பஞ்சோலி அதிரடியாக கைது செய்யப்பட்டார். சூரஜ் 21 நாட்களை சிறையில் கழித்துவிட்டு, ஜாமீனில் விடுதலையானார்.

ஜியாகானுடன் தனக்கு ஏற்பட்ட உறவு பற்றியும், தற்கொலை செய்த கடைசி நாளில் நடந்தது பற்றியும் விவரிக்கிறார்.

உறவு: ஜியாகானை நான் நபீஷா என்று செல்லமாக அழைப்பேன். 11 ஆண்டுகளாக எங்களுக்குள் நெருக்கம் இருந்தது. நான் அவளை முதன்முதலில் சந்தித்தபோது விரக்தியின் விளிம்பில் நின்றிருந்தாள். தன்னுடைய கடந்த காலமும், பணிச்சுமையும் அவளுக்கு மிகுந்த மன அழுத்தத்தை கொடுப்பதாக கூறினாள். அதிலிருந்து வெளிவர, ஒரு நல்ல நண்பனாக நான் அவளுக்கு உதவினேன். 

தன்னுடைய 14 வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள். அந்த சம்பவம் அவளை வெகுவாக பாதித்திருந்தது. தற்கொலை செய்து கொள்ள பலமுறை முயன்றிருக்கிறாள். லண்டனில் மனநல ஆலோசனை பெற்றாள். ஆனாலும் அந்த பலாத்கார பாதிப்பு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து அவளை தொல்லைபடுத்தியது. நண்பனாக இருந்த நான் பின்பு அவள் காதலன் ஆனேன். 

காதல் கடிதம்: இருவரும் நடிப்பில் பரபரப்பாக இருந்தாலும் நேரம் கிடைக்கும்போது சந்தித்துக்கொள்வோம். அவளிடமிருந்து காதல் கடிதங்கள் வரும். அவள் என்னை எவ்வளவு நேசித்தாள் என்பதற்கு அவையே அத்தாட்சி.

அதில் ஒரு கடிதத்தில்..  

‘‘சூரஜ் நீ என் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திவிட்டாய். வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை இப்போது நான் உணர்கிறேன். இது தெரியாமல் பலமுறை நான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அதை இப்போது நினைத்தாலும் முட்டாள்தனமாக தெரிகிறது. என் மணிக்கட்டை அறுத்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த நேரத்தில் எனக்குள்ளே ஒரு பயம் ஏற்பட்டு விட்டது. எங்கே நான் செத்து விடுவேனோ என்று பயந்து துடித்தேன். ‘வாழ்க்கையில் நடந்த கசப்புகள் அனைத்தும் கெட்டக்கனவு. அதை நினைத்து நிஜ வாழ்க்கையை இருட்டாக்கிக் கொள்ளக்கூடாது’ என்ற உன் வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். சத்தியமாக இனி இது போன்ற தற்கொலை முயற்சிகளில் ஈடுபட மாட்டேன்’’ என்று எழுதியிருந்தாள். 

ஜியா எழுதியதாக சொல்லப்பட்ட, ‘தற்கொலை கடிதத்தில்’ இருந்தது அவளுடைய கையெழுத்து அல்ல என்பதை இந்த கடிதத்தை வைத்து தான் உறுதி செய்தார்கள்.

பிரிவு: எங்கள் இருவரின் காதலை ஜியாவின் தாய்  விரும்பவில்லை. நான் நல்ல நண்பனாகவும், ஆறுதலாகவும் மட்டுமே இருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் ஜியா என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு இன்னும் மூன்றாண்டுகள் காத்திருக்கும்படி சொன்னேன். 

‘நான் நடித்து புகழ் பெறவேண்டும். சம்பாதித்து சொந்த காலில் நிற்க வேண்டும். சொந்தமாக வீடு வாங்க வேண்டும். இதற்கெல்லாம் சிறிது காலம் பிடிக்கும். காத்திருக்க தயாரா?’ என்று கேட்டேன். 

‘இல்லை நீ என்னை ஏமாற்ற முயற்சி செய்கிறாய்’ என்று அழுதாள். திருமணம் செய்துகொண்டு நல்ல குடும்பத்து மருமகளாக வாழவேண்டும் என்று விரும்பினாள். 

‘நியாயமான ஆசைதான். ஆனால் அதற்கு இப்போது நான் தயாரில்லை. நீ யாரை வேண்டுமான£லும் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை தொடங்கு. நான் விலகிக் கொள்கிறேன்’ என்றேன்.

மீண்டும் அழைப்பு: நான் அவளை பிரிந்து மூன்று நாட்களாகிய நிலையில், அன்று இரவு ஜியாவிடமிருந்து போன் வந்தது. ‘நான் உன்னை சந்திக்க விரும்புகிறேன்’ என்றாள். ‘அதற்கு அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். இனி அழைக்காதே’ என்று கூறி தொடர்பை துண்டித்து விட்டேன். அதன் பின்புதான் அவள் தற்கொலை நடந்தது. அந்த செய்தியை கேள்விப்பட்டு நான்  மனமுடைந்துபோனேன்.

நான் அவளை தற்கொலைக்கு தூண்டியதாக அவளுடைய அம்மா புகார் கொடுத்தார். நான் திருமணத்தை தள்ளிப்போட்டதும், போன் இணைப்பை துண்டித்ததும், எப்படி தற்கொலைக்கு தூண்டுவதாகும்? நான் அவளை ஏமாற்றிவிட்டு வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டேனா? 

மலர்க்கொத்து மர்மம்: நான் அவளுக்கு மலர்க்கொத்து அனுப்பியது உண்மைதான். அது அவளிடம் இருந்து விலகியதை கொண்டாட அனுப்பிய பூச்செண்டு அல்ல. தனக்கு தெலுங்கில் ஒரு புதிய படம் ஒப்பந்தமாகி இருப்பதாகவும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு சிறிது காலம் லண்டன் செல்ல இருப்பதாகவும் கூறினாள். சரி அங்கேயாவது அமைதியாக இருக்கட்டுமே என்று நினைத்துதான் அழகான லில்லி மலர்களை ‘ஆல் த பெஸ்ட்’ என்ற வாசகத்துடன் அனுப்பிவைத்தேன். அதற்கு அவள் நன்றி தெரிவித்த மெசேஜ் கூட என்னிடம் உள்ளது. கண்ணை மூடிக்கொண்டு சம்பந்தமில்லாத பழியை என் மீது சுமத்துகிறார்கள்.

சிறையில்: ஜியா இறந்தவுடன் அவளுடைய அம்மா ஆவேசமாக போய் நான்தான் கொலை செய்து விட்டதாக புகார் கொடுத்துவிட்டார். எப்படியாவது என்னை சிறையில் தள்ளி பழியை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கம். காவல்    நிலையத்தில் விசாரணைக்காக ஐந்து நாட்கள் வைக்கப்பட்டேன். அவள் இறந்த செய்தியோடு காவல்துறையின் கொடுமையும் சேர்ந்து மனதளவிலும் உடலளவிலும் எனக்கு வேதனையை தந்தது. ஒருவேளை அவள் அழைத்தபோது பேசியிருந்தால் இந்த சோகம் நிகழ்ந்திருக்காதோ என்று தோன்று   கிறது. ஒருவேளை தான் சாகப்போகும் தீர்மானத்தை என்னிடம் சொல்லத்தான் பேசினாளோ என்னாமோ? எதுவாக இருந்தாலும் இந்த தற்கொலை அர்த்தமற்றது. 

அவள் எழுதியதாக கூறி ஒரு கடிதத்தை காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்கள். அது அவளுடைய கையெழுத்தே அல்ல என்பதை நிரூபித்துவிட்டேன்.  

போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில்  அவள் அதிகப்படியாக மது அருந்தியிருப்பதாக தகவல் வந்தது. நான் காரணமின்றி 21 நாட்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டேன். கேட்டால் வெளியில் சென்று தடங்களை அழித்துவிடுவேன் என்றனர். திட்டம் போட்டு கொலை செய்த கொலையாளியைப்போல நடத்தினார்கள். அவளாகவே செய்து கொண்ட கொலைக்கு என்ன தடயம் இருக்க போகிறது. யாரையோ பழிவாங்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்கள்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவைகளுக்கு மத்தியில் சிரமப்பட்டு ஜாமீனில் வெளிவந்தேன். வழக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை. தினமும் காவல்நிலையம் சென்று கையெழுத்திடுகிறேன். சல்மான்கான் படத்திலும் நடிக்கிறேன்!

சூரஜ் சோகமாக சொல்கிறார்! 

நியாயம் யார் பக்கம் இருந்தாலும் தற்கொலை எப்படி நியாயமாகும்?!



தமிழில் சவுகார் பேட்டை, தெலுங்கில் சிவகங்கா

பாகன் படத்திற்கு பிறகு ஸ்ரீகாந்த் தயாரித்து நடித்த படம் நம்பியார். இந்த படத்தில் சந்தானமும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அவரது மார்க்கெட் மீதிருந்த நம்பிக்கையில் ஐந்து கோடிக்கு மேல் செலவு செய்து அந்த படத்தை தயாரித்தார் ஸ்ரீகாந்த். ஆனால், படம் எதிர்பார்த்தபடி விற்பனையாகவில்லை. அதனால் அதையடுத்து செளகார்பேட்டை என்ற பேய் படத்தில் நடிக்கத் தொடங்கினார் ஸ்ரீகாந்த்.

வடிவுடையான் இயக்கத்தில் ராய்லட்சுமி நாயகியாக நடித்துள்ள அந்த படத்தில் பேய், மந்திரவாதி என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். அப்படம் பரபரப்பாக தயாராகிக்கொண்டிருப்பதால், ஸ்ரீகாந்தின் மார்க்கெட்டும் பரபரப்படைந்திருக்கிறது. அதன்காரணமாக அவர் நடிப்பில் உருவாகி ஏற்கனவே கிடப்பில் கிடந்த ஓம் சாந்தி ஓம் படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தீபாவளிக்குப் பிறகு டிசம்பரில் சவுகார் பேட்டை படத்தை வெளியிடும் வேலைகள் நடக்கிறது. இந்த படத்தை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் வெளியிடுகிறார்கள். மேலும், தற்போது சவுகார் பேட்டை தெலுங்கு பதிப்பிற்கு சிவகங்கா என்று பெயர் வைத்துள்ளனர். அதைடுத்து தெலுங்கு டீசரும் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆக, இந்த படத்தை பெரிதாக எதிர்பார்க்கும் ஸ்ரீகாந்த், இதையடுத்து தான் தயாரித்து நடித்துள்ள நம்பியார் படத்தையும் தூசு தட்ட தயாராகிக்கொண்டிருக்கிறார்.




அனுஷ்காவை கவர்ந்த ஹீரோ
ஹீரோக்களை விட தனக்கான கதாபாத்திரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அனுஷ்கா, சமீபகாலமாக தன்னுடன் நடிக்கும் நடிகர்களும் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால் யாராவது பர்பாமென்ஸ் ஹீரோக்களை சந்தித்தால், நாம் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்போம் என்று கேட்டுக்கொள்கிறாராம். அந்த வகையில், ராணி ருத்ரமாதேவியில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் நடிப்பை அனுஷ்காவை ரொம்பவே கவர்ந்து விட்டதாம். அந்த படத்தை பட யூனிட்டுடன் அமர்ந்து கண்டுகளித்தபோது, அல்லு அர்ஜூன் நடித்த காட்சிகளைப்பார்த்து விட்டு கைதட்டி ரசித்தாராம் அனுஷ்கா.

அதையடுத்து, ஒருமுறை அல்லு அர்ஜூனை சந்தித்தபோது, ஒரு படத்தில் உங்களுடன் ஜோடி சேர வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம் அனுஷ்கா. ஆனால் இந்த சேதி வெளியில் கசிந்தபோதுதான், ஒரு டைரக்டர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாட அனுஷ்காவை அழைத்திருக்கிறார். அதற்கு மறுத்து விட்ட அனுஷ்கா, அவருடன் ஜோடி சேர வேண்டுமென்றால் உடனே கால்சீட் தருகிறேன். ஆனால் குத்துப்பாட்டுக்கு ஆடும் ஐடியா எதுவுமில்லை என்று கூறிவிட்டாராம். அதன்பிறகுதான் இப்போது அந்த குத்துப்பாட்டில் நடனமாட அஞ்சலியை புக் பண்ணியிருக்கிறார்களாம்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies