சினிமா செய்தித் துளிகள் மீண்டும் காதலில் கிசுகிசுவில் சிக்கிய எமிஜாக்சன்! 

26 Oct,2015
 

திரிஷாவை தொடரும் 40 லட்சம் ரசிகர்கள்



தமிழ், தெலுங்கு திரை உலகில் கடந்த 13 ஆண்டுகளாக நிலையான இடத்தை பிடித்து இருப்பவர் திரிஷா. 2002–ல் ‘மௌனம் பேசியதே’ படத்தில் அறிமுகமான திரிஷா இன்றும் இளமை மாறாமல் இருக்கிறார். இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

தற்போது திரிஷா 5 படங்களில் நடித்து வருகிறார். கமலுடன் நடித்து வெளிவர இருக்கும் ‘தூங்காவனம்’ திரிஷாவுக்கு 50–வது படம். இவருக்கு டுவிட்டர், பேஸ்புக்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல்வேறு தகவல்களை அவர்களுடன் திரிஷா பகிர்த்து கொள்கிறார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் சொல்கிறார். தன்னைப் பற்றிய விவரங்கையும் வெளியிடுகிறார்.

இதனால் திரிஷாவின் டுவிட்டர், பேஸ்புக்கில் அவரை தொடருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டுவிட்டரில் திரிஷாவை தொடரும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்து விட்டது. இதுபோல், பேஸ்புக்கில் இவரை தொடர்பவர்கள் எண்ணிக்கையும் 20 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

இந்த இரண்டு சமூக வலைத்தளங்களிலும் திரிஷாவை தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 40 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



லாரன்சுடன் ஜோடி சேரும் நிக்கி கல்ராணி?



சமீபத்தில் லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘காஞ்சனா 2’  படம் சூப்பர் ஹிட்டானது. அவர் இயக்கிய ‘முனி’, ‘காஞ்சனா’ ஆகிய வெற்றி படங்கள் வரிசையில் ‘காஞ்சனா 2’ படமும் அமைந்தது. பேய் படமாக வெளியான இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. பேயாக நடித்து வந்த லாரன்ஸ் தற்போது முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

ஜீவா நடிப்பில் வெளியான ‘சிங்கம் புலி’ படத்தை இயக்கிய சாய் ரமணி இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க லாரன்ஸ் ஒப்பந்தமாகியிருக்கிறார். போலீசாக நடிக்கும் லாரன்சுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நிக்கி கல்ராணி, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படத்தில் பேயாக நடித்தவர். தற்போது இவரது நடிப்பில் ‘கோ 2’ படம் வெளியாக இருக்கிறது.

லாரன்ஸ்- நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்க இருக்கும் படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக உருவாக்க இருக்கிறார்கள். இப்படம் பற்றிய முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கின்றனர்.



1 கோடியைக் கடந்த நாயகிகள்


ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், அனுஷ்கா ஆகிய மூன்று ஹீரோயின்களும் மற்ற ஹீரோயின்களை விட முன்னணியில் இருக்கிறார்கள்

. மற்றவர்களுக்கெல்லாம் லட்சங்கள் மட்டுமே கிடைத்திருக்க இவர்கள் மட்டும் கோடியைத் தாண்டியிருக்கிறார்கள்.

இது இவர்களின் சம்பளமல்ல, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இவர்களைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை. யாரை எவ்வளவு பேர் தொடர்கிறார்கள் என்பதை வைத்தே ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகள் யாரென்று தெரிந்து கொள்ளலாம். அந்த விதத்தில் காஜல் அகர்வால் முதலிடத்திலும், ஸ்ருதிஹாசன் இரண்டாமிடத்திலும், அனுஷ்கா மூன்றாமிடத்திலும் இருக்கிறார்கள்.

இன்று காலை திரட்டிய தகவலின் படி எந்த நாயகியை எவ்வளவு பேர் தொடர்கிறார்கள் என்ற விவரம் இதோ...

காஜல் அகர்வால் - 1,78,58,315

ஸ்ருதிஹாசன் - 1,41,14,172

அனுஷ்கா - 1,00,26,021

தமன்னா - 90,57,554

நஸ்ரியா - 70,67,196

சமந்தா - 60,25,055

அமலா பால் - 51,65,578

ஹன்சிகா - 46,33,072

பிரியா ஆனந்த் - 22,51,012

லட்சுமி மேனன் - 20,78,9820

 

ஆனால், இத்தனை நாயகிகளைக் காட்டிலும் தமிழ், ஹிந்தியில் பல பாடல்களைப் பாடியுள்ள பின்னணிப் பாடகியான ஸ்ரேயா கோஷலை 2,44,90,462 பேர் தொடர்வது ஆச்சரியமளிக்கிறது. திரைக்கு முன்னால் வரும் நாயகிகளை விட ஒரு பின்னணிப் பாடகியை 2 கோடிக்கும் மேற்பட்டோர் தொடர்வது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகவே உள்ளது.


பிரபாசின் தெலுங்கு படம் தமிழில் வெளியாகிறது


தெலுங்கு டப்பிங் படங்களுக்கு தமிழில் திடீர் மவுசு ஏற்பட்டிருக்கிறது. பாகுபலி, ருத்தரமாதேவி, செல்வந்தன், புரூஸ்லீ படங்கள் சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் பழைய தெலுங்கு படங்களை தமிழில் டப் செய்து வெளியிடுவது அதிகரித்துள்ளது.

 

ராகவாலாரன்ஸ் இயக்கத்தில் பிரபாஸ், தமன்னா, தீக்ஷா சேத், நடித்த ரெபல் படத்தை தமிழில் வீரபலி (பாகுபலியின் சாயலாம்) என்று பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். காஞ்சான ஹிட் மூலம் ராகவா லாரன்சும், பாகுபலி ஹிட் மூலம் பிரபாசும் இங்கு முன்னணியில் இருப்பதால் இருவரின் காமினேஷனில் 2012ம் ஆண்டு வெளிவந்த படத்தை டப் செய்து வெளியிடுகிறார்கள். செல்வந்தன் பிலிம் பேக்டரி தமிழில் வெளியிடுகிறது. ஏஆர்கே ராஜராஜா தமிழ் வசனங்களை எழுதியுள்ளார். படத்துக்கு ராகவா லாரன்சே இசை அமைத்துள்ளார்


மீண்டும் காதலில் கிசுகிசுவில் சிக்கிய எமிஜாக்சன்!


பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த பிறகு கெத்து, தங்கமகன், விஜய்யின் 59-வது

படம் என தமிழில் மூன்று படங்களில் நடித்துள்ளார் எமிஜாக்சன். இதில் தனுஷ், விஜய் படங்களில் சமந்தாவுடன் இணைந்து நடித்திருப்பவர், கெத்துவில் மட்டும் சிங்கிள் ஹீரோயினியாக நடித்துள்ளார். இதற்கிடையே விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கிற்கு பிறகு மீண்டும் இந்தியில் சிங் இஸ் பிலிங் என்ற படத்திலும் நடித்து முடித்து விட்டார் எமி. அப்படம் வெற்றி பெற்று எமியை பாலிவுட்டில் பரவலாக பேச வைத்துள்ளதாம். அதனால் அடுத்தபடியாக இந்தியில் புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

 

இந்த நேரத்தில் ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில் நடித்தபோது அப்பட நாயகன் ப்ரதீப் பப்பருடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய எமிஜாக்சன், அதன்பிறகு அவருடனான காதலை முறித்துக்கொண்டு, லண்டன் பாய் ப்ரண்டை காதலிப்பதாக கூறிவந்தார். ஆனால் இப்போது பாலிவுட் சினிமாவைச்சேர்ந்த ஒருவரை அவர் காதலிப்பதாக புதிய காதல் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதுபற்றி இன்னும் மீடியாக்களிடம் எமிஜாக்சன் எந்த கருத்தும் சொல்லவில்லை




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies