சினிமா செய்தித் துளிகள் ஸ்ருதிஹாசனின் அழகை புகழ்ந்த தமன்னா

06 Oct,2015
 

பிரபல நடிகைகளுடன் ஜோடி சேர ஆசைப்படுகிறேனா? ஜி.வி. பிரகாஷ் பதில்!


 
என் படத்துக்கான கதாநாயகிகளை நான் தேர்வு செய்வதில்லை என்று பேட்டியளித்துள்ளார் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்.டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா என முதல் இரண்டு படங்களிலும் ஹிட் கொடுத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். அவருடைய அடுத்தப் படங்களுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைகளை அணுகியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதுபற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
என் படத்துக்கான கதாநாயகிகளை நான் தேர்வு செய்வதில்லை என்று பேட்டியளித்துள்ளார் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்.டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா என முதல் இரண்டு படங்களிலும் ஹிட் கொடுத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். அவருடைய அடுத்தப் படங்களுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைகளை அணுகியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதுபற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
    

கதாநாயகிகளைத் தேர்ந்தெடுப்பது தயாரிப்பாளரின் வேலை. ஏனெனில் அவர்கள்தான் சம்பளம் அளிக்கிறார்கள். என் தயாரிப்பாளர்கள், படத்துக்கு முன்னணி கதாநாயகிகள் வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களால் என் படத்தின் மார்க்கெட் அதிகமாகவேண்டும் என்பதற்காக அல்ல. அதேசமயம், என்னால்தான் இரண்டு படங்களும் நன்கு வசூல் செய்தன, அது தொடரவேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். முன்னணி கதாநாயகிகள் நடிக்க வந்தால் நல்லதுதான். இல்லாவிட்டாலும் அதுவும் ஓகேதான் என்றார்.
 




 மீண்டும் கதாநாயகி ஆனார் சிம்ரன்


ஒருகாலத்தில் கனவுக்கன்னியாக இருநத சிம்ரன் திருமணத்துக்குப் பிறகு குணசித்திர நடிகையாகிப்போனார். சின்னத்திரையில்

நிகழ்ச்சிகளை வழங்கிய சிம்ரன், நானி நடித்த 'ஆஹா கல்யாணம்' படத்தின் மூலம் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கினார். அப்படத்துக்குப் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் முக்கிய வேடத்தில் முகம் காட்டினார். இதுதவிர ஜெகதீஷ்குமார் இயக்கத்தில் 'கரையோரம்' என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்து வருகிறார் சிம்ரன்.

இதற்கிடையே தனது கணவர் தீபக்கின் தயாரிப்பில் உருவாகும் புதிய படமொன்றில் கதாநாயகியாக நடிக்கிறார் சிம்ரன். விளம்பரப் படங்களை இயக்கி வந்த கௌரி சங்கர் இப்படத்தின் மூலம் சினிமா இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். 'மர்தாணி' என்ற ஹிந்திப் படத்தில் நடிகை ராணி முகர்ஜி ஏற்றிருந்த அதிரடி போலீஸ் அதிகாரி போன்ற வேடத்தில்தான் இந்த புதிய படத்தில் நடிக்கிறாராம் சிம்ரன். வெறும் ஆக்ஷன் படமாக மட்டுமில்லாமல், சில சயின்ஸ் ஃபிக்ஷன் காட்சிகளும் படத்தில் இருக்கிறதாம்.

 

இப்படத்தில் நடிப்பதற்காக பவர்ஃபுல் வில்லன் ஒருவரை தேடி வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.


 மீண்டும் விஜய்யுடன் இணைகிறார் நயன்தாரா!



தெலுங்கில் நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் படத்திற்கு பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு பிரபுதேவாவை திருமணம் செய்ய

தயாராகிக்கொண்டிருந்த நயன்தாரா, பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் திருமணம் நடக்கயிருந்த கடைசி நேரத்தில் அவரை விட்டு விலகி மீண்டும் சினிமாவில் பிரவேசித்தார். எதிர்நீச்சல் படத்தில் தனுசுடன் ஒரு பாடலில் நடனமாடியவர், ராஜாராணி படத்தில் ஆர்யாவுடன் அஜீத்தின் ஆரம்பம் படத்தில் கமிட்டானார். இப்படியாக மறுபடியும் மார்க்கெட்டைப் பிடித்த நயன்தாராவுக்கு அனாமிகா, நண்பேன்டா, மாஸ் உள்ளிட்ட படங்கள் சரிவைக் கொடுத்தபோதும், சமீபத்தில் வெளியான தனிஒருவன், மாயா என்ற இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதனால் மறுபடியும் நயன்தாராவின் மார்க்கெட் சூடுபிடித்துள்ளது.


ஸ்ருதிஹாசனின் அழகை புகழ்ந்த தமன்னா



திரைப்படங்களில் நடிக்கும் நாயகிகள் ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். ஒரே காலகட்டத்தில் நடிக்கும் நடிகைகள் ஒருவர் மற்றவரை புகழ்வது இல்லை. அதுவும் ஒருவர் அழகைப் பற்றி மற்றவர்கள் வாயை திறக்க மாட்டார்கள்.

ஆனால் அப்படி ஒரு அதிசயம் இப்போது நடந்து இருக்கிறது. ‘புலி’ படத்தில் விஜய் ஜோடியாக சுருதிஹாசன் நடித்து இருக்கிறார். அவரை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து இருக்கிறார். அதில், ‘‘நான் புலி படம் பார்த்தேன். அதில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள சுருதிஹாசன், ‘‘மிகவும் அன்பான தமன்னாவுக்கு மிகவும் நல்ல மனது உங்களுக்கு எனது நன்றி’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

தமன்னா இப்போது ‘பாகுபலி–2’, கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் ‘தோழா’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். சுருதிஹாசன் இப்போது அஜித்துடன் ‘வேதாளம்’, சூர்யாவின் ‘சிங்கம்–3’ உள்பட



குழந்தைகள்தான் எனக்கு மகிழ்ச்சி: ஹன்சிகா




தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் ஹன்சிகா. அவருக்கு மிகவும் பிடித்தமானது என்ன? மகிழ்ச்சி அளிப்பது எது என்பது குறித்து சொல்கிறார்..

திரை உலகில் காலடி வைத்த பிறகு அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு பொருத்தமான வேடம் கிடைத்தால் ‘ஈகோ’ பார்க்காமல் நடிப்பேன். ‘அரண்மனை–2’ படத்தில் திரிஷாவுடன் நடிப்பது புதிய அனுபவம். அவர் மிகவும் அன்புடன் பழகுகிறார். சுந்தர்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் வித்தியாசமானது. ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்.

தமிழ் ரசிகர்கள் மனதில் நான் இடம் பிடித்து இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. விதவிதமான வேடங்களில் நடித்து இன்னும் நல்ல பெயர் வாங்க வேண்டும். ரசிகர்களிடம் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும். நல்ல வேடங்களில் நடித்து அதை ரசிகர்கள் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது.

என்றாலும் நான் தத்து எடுத்து வளர்க்கும் 31 குழந்தைகளை பார்க்கும்போது தான் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. மன நிறைவு கிடைக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். இதற்காகவே அடிக்கடி மும்பை சென்று வருகிறேன். குழந்தைகளுடன் இருப்பது எனக்கு தனி இன்பம் என்று கூறுகிறார். 




நடிகை அசின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்


 



‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், அசின். தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ‘கஜினி’ படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதன் மூலம் இந்தி பட உலகுக்கு போனார்.

அந்த ஒரு படத்திலேயே இந்தியில் பிரபலமானார். சல்மான்கான், அஜய்தேவ்கான், அக்ஷய்குமார், அபிஷேக்பச்சன், என பிரபல கதாநாயகர்களுடன் நடித்தார். இந்த நிலையில் அசினுக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளது. மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணக்கிறார். இது காதல் திருமணம் ஆகும்.

திருமணம் முடிவானதை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக அசின் நிறுத்தி வைத்துள்ளார். அவர் கடைசியாக நடித்த ‘ஆல் இஸ் வெல்’ என்ற இந்தி படம்2 மாதங்களுக்கு முன்பு வெளியானது. அசின் திருமண ஏற்பாடுகள் இப்போது தீவிரமாக நடக்கிறது. திருமண தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனாலும், டிசம்பர் மாதம் திருமணம் நடக்கலாம் என்று அசினுக்கு நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அசின், திருமணத்துக்கான நகைகள் மற்றும் உடைகளை தேர்வு செய்ய தயாராகி விட்டார். இதற்காக அவர் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு தேவையானதை வாங்கிவிட்டு பிரான்ஸ், மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்கிறார். அங்கேயும் திருமணத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின் நாடு திரும்புகிறார்.

 

அதோடு, இனிமேல் விஜய்யுடனெல்லாம் நயன்தாரா ஜோடி சேர வாய்ப்பே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அட்லி இயக்கும் படத்தை அடுத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 60வது படத்தில் விஜய்யுடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா. ஏற்கனவே விஜய் நடித்த சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டுக் கேட்க வாரியா என்ற பாடலில் விஜய்யுடன் குத்தாட்டமாடிய நயன்தாரா, பின்னர் பிரபுதேவா இயக்கத்தில், விஜய் நடித்த வில்லு படத்தில் ஜோடியாகவும் நடித்தார். ஆனால் அதன்பிறகு அவர்கள் இணையவில்லை. இந்தநிலையில், தற்போது மீண்டும் விஜய்யுடன் இணையப்போகிறார். அதோடு இந்த படத்தின் டைட்டீல் கார்டில் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் சூட்டவும் முடிவெடுத்துள்ளாராம் டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா.





Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies