சினிமா செய்தித் துளிகள் நயன்தாரா வேடத்தில் அனேகன் நாயகி

05 Oct,2015
 

ஹாலிவுட் தரத்துக்கு இணையான படம்: புலி படத்துக்கு ரஜினி பாராட்டுமழை!


 
புலி படத்தில் விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது. விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும் என்று நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார்.விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கியுள்ள புலி படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, பிரபு, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. புலி படத்தைப் பார்த்த ரஜினி காந்த் இவ்வாறு பாராட்டியுள்ளார்.
புலி படத்தில் விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது. விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும் என்று நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார்.விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கியுள்ள புலி படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, பிரபு, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. புலி படத்தைப் பார்த்த ரஜினி காந்த் இவ்வாறு பாராட்டியுள்ளார்.
    

‘புலி படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்கள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தன. படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது. விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும். நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்த படம் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லிங்காக இருந்தது. குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம். குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி. ஹேட்ஸ் ஆப் டூ த புலி டீம்’ என்று பாராட்டியுள்ளார்.
 




வதந்தியில் சிக்கிய சமந்தா!


சமீபத்தில் மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அசினைப்பற்றிய செய்திகள் வெளியாகின. இந்த

நிலையில், தற்போது சமந்தாவும் ஒரு சென்னை தொழிலதிபரை காதலித்து வருவதாகவும், அடுத்த ஆண்டு அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுபற்றி சமந்தாவுக்கு தெரிய வந்தபோது அதிர்ச்சியாகி விட்டாராம். அஞ்சான், கத்தி படங்களுக்கு பிறகுதான் கோடம்பாக்கத்தில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். அதற்குள் இப்படியொரு செய்தியா?என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியவர், நான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், சித்தார்த்துடன் நான் நட்பு வளர்த்து வந்தபோது, அதை காதல் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது எங்களுக்குள் எதுவும் இல்லை என்பது தெளிவாகி விட்டது. இதுமாதிரி சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு எத்தனையோ காதல், கல்யாண கிசுகிசுக்களை நான் சந்தித்து விட்டேன். ஆனால் எந்த கிசுகிசுவும் என்னை பாதித்ததில்லை. பாதிக்கவும் செய்யாது. காரணம் அவை எல்லாம் பொய்யான செய்திகள். அதனால் இந்த தொழிலதிபர் காதல் மேட்டரையும் நான் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை எனறு கேசுவலாக பதில் கூறியுள்ளார் சமந்தா



சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், கீர்த்தி சுரேஷ்!


சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜா தனது '24 AM STUDIOS' என்ற நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தில்

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஆபிஸ் பூஜைபோட்டதோடு சரி. அதன் பிறகு அப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை. பால்கி இயக்கும் ஹிந்திப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அந்தப் படத்தை முடித்துவிட்டு வந்த பிறகே அதாவது நவம்பர் மாதம்தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் துவங்கும் என்பதே லேட்டஸ்ட் தகவல். அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் 2-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்திற்கு சவுண்ட் டிசைனிங் பொறுப்பை ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஏற்றிருக்கிறார்.

புலி படத்துக்கு கலை இயக்குநராக பணியாற்றிய முத்துராஜ் இப்படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். இயக்குநர் அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இப்போது கதாநாயகி முடிவாகி விட்டது. பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் ஸ்ருதிஹாசனை கமிட் பண்ணி உள்ளனர்.

 

இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகியும் உண்டு. 'ரஜினி முருகன்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ள கீர்த்தின் சுரேஷ்தான் இப்படத்தின் இன்னொரு கதாநாயகி! அஜித் பாணியில் படத்துக்கு தற்போது பெயரிடப்படாமலே படத்தைத் தொடங்க உள்ளனர்


நயன்தாரா வேடத்தில் அனேகன் நாயகி


கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நாயகியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். அந்த படத்திற்கு பிறகு

தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்று நினைத்தனர். ஆனால் அமைராவின் நடிப்பு பெரிதாக கோலிவுட் டைரக்டர்களை கவரவில்லை. அதனால் ஒரே படத்தோடு மும்பைக்கு திரும்பிவிட்ட அவர் இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்தநிலையில், தெலுங்கில் அனேகுடு என்ற பெயரில் வெளியான அனேகன் படமும் அங்கே பெரிதாக வசூலிக்கவில்லை. அதனால் அமைராவின் தெலுங்கு சினிமா முயற்சியும் பலனளிக்கவில்லை. இருப்பினும், தெலுங்கு படங்களில் நடிக்க தொடர்ந்து முயற்சித்து வந்த அமைரா தஸ்தூர், இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகும் தனி ஒருவன் படத்தில் நயன்தாரா நடித்த வேடத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

தமிழில் ஜெயம்ரவி நடித்த வேடத்தில் தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமைரா தஸ்தூர் நடிக்கும் இந்த படத்தை தமிழில் அப்படத்தை இயக்கிய மோகன்ராஜாவே இயக்குவார் என்று முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது ராம்சரணின் பேவரிட் இயக்குனர்களில் ஒருவரான சுரேந்தர் ரெட்டி இயக்குவதாக கூறப்படுகிறது




 நயன்தாராவை இழுக்க அரசியல் கட்சிகள் முயற்சி?


நடிகை நயன்தாராவை தங்கள் கட்சியில் இணைப்பதற்கான முயற்சியில், அரசியல் கட்சிகள் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சந்திரமுகி,

சிவாஜி, இது கதிர்வேலன் காதல், தனி ஒருவன், மாயா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நயன்தாரா. பிரபல நடிகர்கள் சிம்பு, பிரபு தேவா ஆகியோருடன் காதல்வசப்பட்டவர். இருந்தாலும், தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து, இன்று வரையில், முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.

அவர் கடைசியாக நடித்த, மாயா திரைப்படமும் வெற்றிகரமாக ஓட, தமிழ் சினிமா ரசிகர்களிடம், அவர் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது.கடந்த வாரம், சேலத்தில் நடந்த ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு சென்றார் நடிகை நயன்தாரா. அங்கு அவரை சந்திக்க, 5,000 பேர் எதிர்பாராதவிதமாக திரண்டதால், போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. போலீசார், லேசான தடியடி நடத்தியதில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நயன்தாராவுக்கு இப்படி தன்னிச்சையாக திரண்ட கூட்டத்தை கண்ட அரசியல் கட்சியினர், அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நயன்தாராவை, தங்கள் கட்சியில் இணைத்து, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தலாமா என்ற ஆலோசனையில் ஆழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.தி.மு.க., மற்றும் பா.ஜ., வட்டாரங்களில் தான், இந்த ஆலோசனை தீவிரமாக நடப்பதாகவும் சொல்கின்றனர்.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்களில் கூறப்படுவதாவது:தமிழகத்தில், முதல்வர் ஜெயலலிதா அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். அவரை எதிர்கொள்ள வேண்டும் என்றால், பிரபலமான நடிகை ஒருவர் தேவை. அப்படியொரு எண்ணத்துடன் தான், சில ஆண்டுகளுக்கு முன், நடிகை குஷ்புவை கட்சி யில் இணைத்தனர். அவரும், கட்சிக்காக நிறைய பணியாற்றினார். ஆனால், அவரது வெளிப்படையான பேச்சு, கட்சி யில் இருக்கும் சில தலைவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து, அவர் கட்சி யில் வெகு காலம் நீடிக்க முடியவில்லை. ஆனால், கட்சிக்காக அவர் ஆற்றிய பணி சிறப்பானது.அவர் இடத்தை நிரப்ப, ஒரு நடிகை அவசியம் தேவை. சமீபத்தில், சேலம் சென்றிருந்த நயன்தாராவுக்கு கூடிய கூட்டத்தை பார்க்கும்போது, அவரை கட்சிக்கு அழைத்து வந்தால், கட்சிக்கு பலம் சேர்க்கும். அதற்கான முயற்சியை சிலர் எடுத்துவருகின்றனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

விருப்பமில்லை:

 

இது குறித்து, நடிகை நயன்தாராவின் நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது: சேலத்தில் இப்படியொரு கூட்டம் கூடும் என, நயன்தாராவே எதிர்பார்க்கவில்லை. சினிமாவில், இன்னும் பல ஆண்டுகள் நடிக்க விருப்பம் கொண்டிருப்பதால், அரசியலுக்குள் இப்போது நுழைய விருப்பமில்லை.கூட்டத்தை பார்த்தால், அரசியல் கட்சியினர் ஆசைப்படத் தானே செய்வர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.







Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies