சினிமா செய்தித் துளிகள் சிவகார்த்திகேயனுடன் நடிக்காதது ஏன்?

04 Oct,2015
 

சூர்யாவின் பசங்க 2 படத்தின் ஆடியோ ரிலீஸ் திகதி அறிவிப்பு
சூர்யா நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள படம் ‘பசங்க-2’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் தலைப்பு முன்னதாக ‘ஹைக்கூ’ என்று வைக்கப்பட்டது. பின்னர், படத்தின் வரிவிலக்கிற்காக தற்போது ‘பசங்க-2’ என மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தில் சூர்யாவுடன் அமலாபால் இணைந்து நடித்துள்ளார். முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தியே இப்படத்தை எடுத்திருப்பதால் இருவரும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்திலேயே நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் டீசரும், புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை வரும் அக்டோபர் 17-ந் திகதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு ஆரோல் கொரல்லி இசையமைத்துள்ளார். இவர் மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். ‘பசங்க-2’ படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தை சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்துள்ளார். பாண்டிராஜும் ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.




ஹீரோவுடன் லட்சுமிராய் கிக் செல்ஃபி
குத்தாட்டம் ஆடணுமா அது மட்டும் நடக்காது என முறைப்பாக சொல்லிக்கொண்டிருந்தாலும் கையில் பெட்டியுடன் வரும் தயாரிப்பாளர்களுக்கு சில ஹீரோயின்கள் கும்பிடுபோட்டு ஓ.கே. சொல்வது வழக்கமாகிவிட்டது.  இனி குத்தாட்டம் ஆட மாட்டேன் என கூறிவந்த லட்சுமி ராய் ‘பலுப்பு’ தெலுங்கு படத்தில் ரவி தேஜாவுடன் குத்தாட்டம் ஆடினார். ‘சவுகார் பேட்டை’ பட ரிலீஸுக்காக காத்திருந்தாலும் தனது கவனத்தை பாலிவுட் பக்கம்  திருப்பி இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அகிரா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதுடன் மற்றொரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இதற்கிடையில் டுவிட்டர் பக்கத்தில் பவன் கல்யாணுடன் நெருக்கமாக நின்று செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அவருடன் நடித்து வரும் ஒரு படத்தில் குத்தாட்டத்துக்கு தாவணியை பறக்கவிட்டுவிட்டு ஜாக்கெட், பாவாடை மட்டுமே அணிந்தபடி கிக் போஸ் தந்திருப்பதுடன், ‘வாக்குகொடுத்தபடி பவனுடன் செல்ஃபி எடுத்துவிட்டேன், நம்புங்கள்’ என மெசேஜ்் போட்டிருக்கிறார்



 சிவகார்த்திகேயனுடன் நடிக்காதது ஏன்? ஸ்ருதி ஹாசன் பதில்
ஸ்ருதி ஹாசன் கூறியது: டுவிட்டரில் 30 லட்சம் ரசிகர்கள் என்னை ஃபாலோ செய்வது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு நடிகையாக இல்லாமல் சக மனிஷியாகவே என்னை டுவிட்டரில் உணரமுடியும். என் குரல்தான் என் அடையாளம். உலக சினிமாவில் கூட மர்லின் பிராண்டோவின் குரல் அவரது டிரேட் மார்க் வாய்ஸ். வழக்கமான இந்திய குரல் போல் என் குரல் கிடையாது என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அது இயக்குனர்களுக்கு பிடித்திருக்கிறது. அதற்காக பெருமைப்படுகிறேன். அதேசமயம் எந்தவொரு முன்னணி நடிகைக்கும் குரல் ஒரு அடையாளமாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

படங்களை கணிப்பதில் எனது கணக்கு தவறாகிவிடுகிறது. இந்்தியில் வெல்கம் பேக் படத்தை பெரிதாக எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன். தற்போது படங்கள் பற்றி கணிப்பதை நிறுத்திக்கொண்டேன். சிறுவயதிலிருந்தே சாதிப்பதற்காக கடுமையாக உழைப்பேன். படிப்பு, இசை கற்றது அப்படித்தான். அதுதான் என்னை நடிகையாக நிலைநிறுத்துகிறது. தற்போது வேதாளம் படத்திற்கான டப்பிங் பேசி வருகிறேன். சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறீர்களா என்கிறார்கள். 5 படங்களில் நடித்து வருகிறேன். கால்ஷீட் இல்லாததால் நடிக்கவில்லை. இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.


 ஸ்ருதி நீங்க ரொம்ப அழகு + ஆவேசம்.. பாராட்டித் தள்ளிய தமன்னா
சென்னை: புலி படத்தில் நடிகை சுருதி ஹாசனின் நடிப்பு நன்றாக இருந்ததாக மற்றொரு நடிகையான தமன்னா, சுருதி ஹாசனை ட்விட்டரில் பாராட்டியிருக்கிறார்.


விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் சுதீப் ஆகியோரின் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் புலி. இயக்குநர் சிம்புதேவன் இயக்கிய இந்தப் படத்தில் விஜயின் மனைவியாக சுருதிஹாசன் நடித்திருந்தார்.



 ஐஸ்வர்யா ராய் எடுக்கும் புதிய அவதாரம்
ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு ஐஸ்பா என்ற படம் மூலம் மீண்டும் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.

இப்படத்தின் டிரைலர், பாடல்கள் என வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கஹானியான் பாடலில் இவர் செய்யும் உடற் பயிற்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது இப்படத்தின் பந்தெயா என்ற பாடல் மூலம் பாடகியாக அவதாரம் எடுக்க இருக்கிறார் ஐஸ்வர்யா ராய். ஏற்கெனவே இந்தப் பாடல் ஜுபின் நவுதியால் பாட ஆண் குரலில் வந்துவிட்டது.

படத்தின் புரொமோஷனுக்கான ஐஸ்வர்யா ராயும் பாட இருக்கிறாராம்.



நான் லேடி சூப்பர் ஸ்டாரா? அனுஷ்கா பேட்டி
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா நேற்று சென்னை வந்தார். அவர் நடித்துள்ள ருத்ரமாதேவி படம் வருகிற 9ந் தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் அனுஷ்கா நிஜமான தங்க நகைகள் அணிந்து நடித்தார். இதனை சென்னையில் உள்ள என்.ஏ.சி ஜூவல்லரி நிறுவனம் வடிவமைத்து கொடுத்துள்ளது. அதனை பொதுமக்களும் வாங்கும் வகையில் விற்பனைக்கும் கொண்டு வருகிறது. இந்த நகைகளை அனுஷ்கா அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி:

* ருத்ரமாதேவியாக நடித்திருக்கிறீர்கள். உங்களுக்கு ருத்தரமாதேவி பற்றித் தெரியுமா?

நிஜமாகவே சொல்கிறேன் படத்தில் நடிக்கும் முன் தெரியாது. பெயர் மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் ஒரு வீரமான ராணி என்கிற அளவில்தான் தெரியும். ருத்ரமாதேவியில் நடிப்பது என்று முடிவானதும். இயக்குனர் குணசேகரன் சார் நிறைய புத்தகங்கள் கொண்டு வந்து தந்தா£ர் அவற்றை படித்து அவரை பற்றி முழுமையான தெரிந்து கொண்டு நடித்தேன். 13ம் நூற்றாண்டிலேயே பெண்கள் எந்த அளவுக்கு அடிமைகளாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். ருத்ரமாதேவி எந்த அளவிற்கு போராட்டங்களை சந்தித்திருக்கிறார் என்பதை படித்து மெய்சிலிர்த்து போனேன்.

* அடுத்து யாராக நடிப்பீர்கள்?

சினிமாவை பற்றி உங்களுக்கு தெரியுமே ஒரு கேரக்டர் பாப்புலராகிவிட்டால் அதுபோன்ற கேரக்டர்களே தொடர்ந்து வரும். எனக்கும் நிறைய சரித்திர கதைகள் வந்தது. வந்து கொண்டும் இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். படத்தை அவர்களால் எடுத்து முடிக்க முடியுமா என்றும் பார்க்க வேண்டும். முன்பு எனக்கு சரிதிரம் படிப்பதில் பெரிய ஈடுபாடு இல்லை. இப்போது நிறைய படிக்கிறேன். எனக்கான கேரக்டர்கள் அமையும்போது நடிப்பேன்.

* ருத்ரமாதேவியில் ஒரிஜினல் தங்க நகை அணிந்து நடித்திருக்கிறீர்களாமே?

ஒரு ஆச்சர்யம் பாருங்க. எனக்கு பெருசா நகை போட்டுக்க பிடிக்காது. காதுல ஒரு கம்மல், கழுத்துல சின்னதா ஒரு செயின் இதுதான் நான் அணியும் நகைகள் ஆனால் ருத்ரமாதேவியாக நடிக்கும்போது சுமார் 3 கிலோ தங்க நகைகள் அணிந்து நடித்தேன். மொத்தம் 15 கிலோ தங்கத்தில் நகைகள் செய்ததாகவும், அவை 5 கோடி மதிப்புள்ளது என்று என்.ஏ.சி நிறுவனத்தார் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. ஒரிஜினல் தங்க நகை அணிந்து நடித்தது அழகாக இருந்தாலும் சண்டை காட்சிகளில் நடிக்கம்போது மிகவும் சிரமப்பட்டேன். எனக்கும் காயம் ஏற்பட்டு விடக்கூடாது. எதிரே சண்டை போடுகிறவருக்கும் காயம் ஏற்பட்டு விடக்கூடாது. நகையும் சேதமடைந்து விடக்கூடாது இந்த மூன்றையும் கவனித்து சண்டை போட வேண்டியது இருந்து.

* யானை, குதிரையெல்லாம் பிரண்டாகி விட்டதாமே?

ருத்ரமாதேவி சரித்திர படம் என்பதால் குதிரையேற்றம், யானை சவாரி, அவைகள் மீது அமர்ந்து கொண்டே சண்டை என நிறைய விஷயங்கள் இருந்தது. வாள் சண்டையை முறைப்படி கற்றுக் கொண்டேன். வாள் சண்டையின் அசைவுகளுக்கும் யோகாவுக்கும் தொடர்பு இருப்பதால் எளிதாக கற்றுக் கொள்ள முடிந்தது. லட்சுமி என்ற யானையுடன் பழகி அதனை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டேன். யானையை விட குதிரையோடு பழகுவதுதான் சிரமமாக இருந்து. பலமுறை கீழே தள்ளிவிட்டிருக்கிறது. யானை தள்ளி விட்டால் என்னாகும் யோசிச்சு பாருங்க. ஆனால் தள்ளி விடாது அது தெய்வ அம்சம் பொருந்தியது.

* பாகுபாலி 2ம் பாகம், சிங்கம் 3 பாகம் என அடுத்துடுத்து நடிப்பது பற்றி...?

நான் நடித்த இந்த படங்கள் அடுத்தடுத்த பாகத்துக்கும் தகுதியாகியிருப்பது சந்தோஷமான விஷயம்தானே. வெற்றி பெற்றவர்களுடன் மீண்டும் மீண்டும் இணைந்து பணியாற்றும்போது சந்தோஷமாக இருக்கிறது.

* இஞ்சி இடுப்பழகிக்கு திடீரென குண்டாகிவிட்டீர்களே?

கதை அப்படி. எனக்கு பிடித்த படங்களில் இஞ்சி இடுப்பழகியும் ஒண்ணு. பாகுபலி, ருத்ரமேதேவி அளவுக்கு இஞ்சி இடுப்பழகிக்கு சிரமப்படவில்லை. நான் யோகா மாஸ்டர் என்பதால் உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதும் ஒன்றும் பெரிய விஷயவில்லை. என்னை பொருத்தவரை மனதை கட்டுப்படுத்த தெரிந்தால் உடம்பையும் கட்டுப்படுத்த முடியும். சிம்பிள் லாஜிக் இது.

* ஆர்யாவுடன் திருமணம் என்கிறார்களே?

பேட்டி நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது. நான் யாரோட சேர்ந்து நடிச்சாலும் அவரை காதலிக்கிறதா நீங்களே எழுதிக்கிறீங்க. அப்புறம் கல்யாணம் பண்ணிக்க போறீங்களான்னு நீங்களே கேட்குறீங்க. இந்த லிஸ்ட்டுல இப்போ ஆர்யா சேர்ந்திருக்கார். நல்ல வேளை ராணாவை மட்டும் நான் பிரதர்னு கூப்பிடுறதால தப்பிச்சார். கண்டிப்பாக நானும் திருமணம் செய்து கொள்வேன். கையில் இருக்கும் படங்களையும், இப்போது பேசிக்கொண்டிருக்கும் படங்களை முடிக்கவுமே மூணு வருஷத்துக்கு மேலாகும். அதற்கு பிறகு கல்யாணம் பற்றி யோசிக்கலாம்.

* உங்களை தென்னகத்து லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்களே?

இதெல்லாம் பெரிய வார்த்தைங்க. அதுக்கு தகுதியானவங்க நிறைய பேர் இருக்காங்க. எப்போதும் என்னை அனுஷ்கான்னு பெயர் சொல்லியோ, அல்லது ஸ்வீட்டின்னு என் ஒரிஜினல் பெயரிலேயோ அழைக்கப்படுவதைத்தான் விரும்புறேன்.

ஆள் ஆறடி உயரமாக இருந்தாலும், அழகின் உயரத்தில் இருந்தாலும் அடக்கமாகவே இருப்பதுதான் அனுஷ்கா ஸ்பெஷல்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies