சினிமா செய்தித் துளிகள் தூங்காவனத்திற்காக காத்திருக்கும் மதுஷாலினி!

01 Oct,2015
 

   


    
கடவுள் என்னை கதாநாயகியாக நல்ல இடத்தில் வைத்து இருக்கிறார்: - சிலிர்க்கும் சமந்தா 




 
விக்ரம் ஜோடியாக சமந்தா நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள படம் அடுத்தமாதம் வெளியாகவிருக்கிறது. இப்போது சூர்யாவுடன் 24 என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக விஜய் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் மகேஷ்பாபு நடிப்பில் தயாராகிவரும் பிரமோற்சவம் படத்திலும் இவரே நாயகி. திரையுலகில் பிஸியாக இருக்கும் சமந்தா, சமுகசேவைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “ கடவுளின் ஆசீர்வாதம் எனக்கு நிறைய இருக்கிறது. அவரால் தான் அவரால்தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன்.
விக்ரம் ஜோடியாக சமந்தா நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள படம் அடுத்தமாதம் வெளியாகவிருக்கிறது. இப்போது சூர்யாவுடன் 24 என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக விஜய் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் மகேஷ்பாபு நடிப்பில் தயாராகிவரும் பிரமோற்சவம் படத்திலும் இவரே நாயகி. திரையுலகில் பிஸியாக இருக்கும் சமந்தா, சமுகசேவைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “ கடவுளின் ஆசீர்வாதம் எனக்கு நிறைய இருக்கிறது. அவரால் தான் அவரால்தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன்.
    

கடவுள் என்னை கதாநாயகியாக நல்ல இடத்தில் வைத்து இருக்கிறார். அதிகமான ரசிகர்களையும் எனக்கு சொந்தமாக்கி இருக்கிறார். நல்ல படங்கள் அமைகின்றன. ரசிகர்கள் மத்தியில் எனது படங்களுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது.நான் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழான சாதாரண குடும்பத்தில் இருந்துதான் வந்தேன். சிறு வயதில் ரொம்ப கஷ்டப்பட்டோம். இவ்வளவு பணம் சேரும் என்று கனவில்கூட அப்போது நினைத்துப் பார்க்கவில்லை.

சமூகசேவைகளில் எனக்கு சிறு வயதில் இருந்தே ஆர்வம் உண்டு. பண வசதி இல்லாத காலத்திலேயே என் அம்மா மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார். இப்போது என்னிடம் பணம் இருப்பதால் நானும் சமூகசேவை செய்கிறேன் என்கிறார் சமந்தா.
 




ஸ்ருதியிடம் சம்மதம் கேட்ட கமல்: 


 
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருக்கிறார் கமல் மகள் ஸ்ருதிஹாசன். விஜய் ஜோடியாக இவர் நடித்திருக்கும் ‘புலி’ படம் அக்டோபர் 1–ந்தேதி வெளியாகிறது. அஜித் ஜோடியாக நடிக்கும் ‘வேதாளம்’ படம் தீபாவளிக்கு வருகிறது. இவை மட்டுமின்றி இரண்டு இந்திப் படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். ‘‘உலகிலேயே சிறந்த மனிதர் என் அப்பாதான். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். குழந்தைகளை சுயமாகச் செயல்படவிட்டு அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பெற்றோர் கவனிக்க வேண்டும். அவர்களைத் தடுத்தால் எதிர்காலத்தில் சொந்தக் காலில் நிற்க முடியாமல் போய்விடும்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருக்கிறார் கமல் மகள் ஸ்ருதிஹாசன். விஜய் ஜோடியாக இவர் நடித்திருக்கும் ‘புலி’ படம் அக்டோபர் 1–ந்தேதி வெளியாகிறது. அஜித் ஜோடியாக நடிக்கும் ‘வேதாளம்’ படம் தீபாவளிக்கு வருகிறது. இவை மட்டுமின்றி இரண்டு இந்திப் படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். ‘‘உலகிலேயே சிறந்த மனிதர் என் அப்பாதான். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். குழந்தைகளை சுயமாகச் செயல்படவிட்டு அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பெற்றோர் கவனிக்க வேண்டும். அவர்களைத் தடுத்தால் எதிர்காலத்தில் சொந்தக் காலில் நிற்க முடியாமல் போய்விடும்.
    

என் அப்பா எங்களை சிறு வயதில் சுதந்திரமாகச் செயல்பட விட்டார். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது சிந்தனையாக இருந்தது. அப்படி அவர் வளர்த்ததால்தான் எது சரி, எது தப்பு? என்று என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. என் அப்பா மீது எனக்கு அபாரமான அன்பு இருக்கிறது. என் சிறு வயதில் ஒரு நாள் அவர் என்னிடம் வந்து பெரிய படம் ஒன்று எடுக்கிறேன்.

அதற்கு நிறைய பணம் வேண்டும். இதனால் நாம் குடியிருக்கும் பெரிய வீட்டில் இருந்து சிறிய வீட்டுக்குப் போக வேண்டியது இருக்கும். சம்மதம்தானா? என்று கேட்டார். நான் அவரிடம் நீங்கள் என்னோடு இருந்தால் போதும் அப்பா என்று கூறினேன். என் தந்தை நேர்மையானவர். சிறு வயதில் என் அப்பாமீது அன்பு மட்டும்தான் இருந்தது. இப்போது அவர்மீது மரியாதையும் வருகிறது’’ என்று கூறியிருக்கிறார் ஸ்ருதி.



 புலி திரைப்படம் நாளை ..! உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.  


 
இப்படத்தை காண ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் பாகுபலி போல் இருக்குமா? என்று சிம்புதேவனிடம் சமீபத்தில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ‘இதற்கும் பாகுபலிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, இவை வேறு ஒரு கதைக்களம். மேலும், பாகுபலிக்கு முன்பே புலி படம் வரவேண்டியது, ஒரு கன்னியும் மூணு களவானியும் படத்திற்கு முன்னரே புலி படக் கதையை ரெடி செய்துவிட்டேன், ஆனால், விஜய்யின் தேதிகள் கிடைக்க கொஞ்சம் தாமதமானது, இல்லையெனில் பாகுபலிக்கு முன்பே இப்படம் வந்திருக்கும்’ என கூறியுள்ளார்.
இப்படத்தை காண ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் பாகுபலி போல் இருக்குமா? என்று சிம்புதேவனிடம் சமீபத்தில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ‘இதற்கும் பாகுபலிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, இவை வேறு ஒரு கதைக்களம். மேலும், பாகுபலிக்கு முன்பே புலி படம் வரவேண்டியது, ஒரு கன்னியும் மூணு களவானியும் படத்திற்கு முன்னரே புலி படக் கதையை ரெடி செய்துவிட்டேன், ஆனால், விஜய்யின் தேதிகள் கிடைக்க கொஞ்சம் தாமதமானது, இல்லையெனில் பாகுபலிக்கு முன்பே இப்படம் வந்திருக்கும்’ என கூறியுள்ளார்.
    
 

விஜயின் புலி படக்கதை!


 
வேதாளக் கோட்டைக்கு ராணியாக இருக்கிறார் ஸ்ரீதேவி. இவருடைய அரசவையில், தளபதியாக இருக்கும் சுதீப், அந்நாட்டு மக்களை எல்லாம் அடிமைப்படுத்தி, கொடூரமாக நடத்தி வருகிறார். வேதாளக் கோட்டையில் வசிக்கும் அனைவரும் ஒருவித மூலிகையை சாப்பிட்டு, உயிர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மூலிகையை சாப்பிட்டால் மனிதனை விட பல மடங்கு சக்தி அவர்களுக்கு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், ராட்சத பல் வளருவது, குறிப்பிட்ட தூரம் வரை பறக்கும் சக்தி என அனைத்தும் இருக்கும். இவர்கள் தங்களை வேதாளங்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.
வேதாளக் கோட்டைக்கு ராணியாக இருக்கிறார் ஸ்ரீதேவி. இவருடைய அரசவையில், தளபதியாக இருக்கும் சுதீப், அந்நாட்டு மக்களை எல்லாம் அடிமைப்படுத்தி, கொடூரமாக நடத்தி வருகிறார். வேதாளக் கோட்டையில் வசிக்கும் அனைவரும் ஒருவித மூலிகையை சாப்பிட்டு, உயிர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மூலிகையை சாப்பிட்டால் மனிதனை விட பல மடங்கு சக்தி அவர்களுக்கு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், ராட்சத பல் வளருவது, குறிப்பிட்ட தூரம் வரை பறக்கும் சக்தி என அனைத்தும் இருக்கும். இவர்கள் தங்களை வேதாளங்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.
    

இந்நிலையில், கிராமத்தில் வசிக்கும் பிரபு, நாட்டு மக்களை அடிமைத்தனத்தில் விடுவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, தன்னுடைய ஆட்களை அழைத்துக் கொண்டு, சுதீப் குறித்து ராணியிடம் முறையிட செல்கிறார். அப்போது, ராணியின் கெட்டப்பில் இருக்கும் சுதீப்பிடம் எல்லாவற்றையும் கூறிவிடுகிறார். இதனால், சுதீப் அனைவரையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு, பிரபுவின் கையையும் வெட்டி விடுகிறார். அன்றுமுதல், வேதாளங்களுடன் நேரடியாக மோதல் போக்கில் ஈடுபடாமல், அவர்களை எதிர்க்க சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் பிரபு. இந்நிலையில், ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்படும் ஒரு குழந்தையை எடுத்து, வளர்த்து வருகிறார் பிரபு. அந்த குழந்தைதான் விஜய். வளர்ந்து பெரியவனாகும் விஜய், அந்த கிராமத்தில் தம்பி ராமையா, சத்யன் ஆகியோருடன் சேர்ந்து கூத்தும் கும்மாளமுமாக இருந்து வருகிறார். அத்துடன், சிறுவயதில் இருந்து பழகும் ஸ்ருதிஹாசன் மீது காதலும் கொள்கிறார்.

இந்நிலையில், ஸ்ருதிஹாசன் வெளியூருக்கு படிக்க செல்லவே, வேதாளங்களான சுதீப்பின் படை வீரர்கள் வரி வசூல் செய்ய இவர்களது கிராமத்திற்கு வருகிறார்கள். அவர்களிடம் பிரச்சினை செய்யாமல், அனைவரும் அடிபணிந்து வரி கொடுக்கின்றனர். இந்த விஷயம் ஸ்ருதிக்கு தெரியவந்ததும், அனைவர் மீதும் வெறுப்பு கொள்கிறார். எனவே, அவளை சமாதானப்படுத்துவதற்காக, பிரபு தனது கூட்டாளிகளை வேதாளங்களின் படை வீரர்கள் போல் தயார் செய்து, அவர்களை விஜய் அடித்து துவம்சம் செய்வதுபோல் நாடகம் நடத்துகிறார். இது எதுவுமே தெரியாத ஸ்ருதி, விஜய் மீது காதலில் விழ, இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

இந்நிலையில், விஜய்யின் ஆட்கள் வேதாளங்கள் போல் வேஷம் போட்டு நாடகம் நடத்துவதை அறியும் சுதீப்பின் படை வீரர்கள் ஊருக்குள் புகுந்து, விஜய் கிராமத்து மக்களை அடித்து துவம்சம் செய்து விட்டு, பிரபுவையும் கொன்று விடுகின்றனர். இறுதியில், ஸ்ருதிஹாசனையும் கடத்தி சென்று விடுகின்றனர். அவளை மீட்கவும், மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுக்கவும், விஜய் வேதாள கோட்டையை நோக்கி புறப்பட தயாராகிறார். அப்போது, அந்த ஊர் வைத்தியரான ஜோ மல்லூரி, தான் கண்டுபிடித்து வைத்திருக்கும் மூலிகையை உண்டால், 8 நிமிடங்கள் வரை வேதாளமாக இருக்க முடியும். அந்த சக்தியை வைத்து அவர்களை எதிர்க்கலாம் என்று கூறி விஜய்யை வழியனுப்பி வைக்கிறார்.விஜய் வேதாளக் கோட்டையை நோக்கி செல்லும் வழியில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கிறார். அந்த பிரச்சினைகளையெல்லாம் தாண்டி, வேதாளக் கோட்டையை அடைந்து ஸ்ருதியை மீட்டாரா? விஜய்யின் பின்புலம் என்ன? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.
 


      

தூங்காவனத்திற்காக காத்திருக்கும் மதுஷாலினி!




தெலுங்கு நடிகையான மதுஷாலினிக்கு தமிழ் சினிமாவிலும் அழுத்தமாக காலூன்ற வேண்டும் என்பதுதான் நீண்டநாள் ஆசை. அதனால் தான் தெலுங்கில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தமிழ்ப்படங்களில் நடிக்க கல்லெறிந்தவருக்கு பழனியப்பா கல்லூரி, பதினாறு ஆகிய

படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து பாலாவின் அவன் இவன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். பாலா படம் என்பதால் அதன்பிறகு கோடம்பாக்கம் தன்னை வாரி எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்த்த மது ஷாலினிக்கு அந்த படமும் கைகொடுக்கவில்லை. அதனால் பெருத்த ஏமாற்றத்துடன் அவர் தமிழை மறந்து விட்டு தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது கமல் நடித்துள்ள தூங்காவனம் படத்தில் நடித்துள்ளார் மதுஷாலினி. இந்த படத்தின் நாயகி த்ரிஷா என்பதால் மதுஷாலினிக்கு ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதாவது, உத்தமவில்லன் படத்தில் கமலின் பர்சனல் டாக்டர் என்று சொல்லிக்கொண்டு அவர் பின்னாடியே ஆண்ட்ரியா சுற்றியது போன்று, கமலின் உதவியாளராக அவர் பின்னாடியே சுற்றும் வேடத்தில்தான் இந்த தூங்காவனம் படத்தில் நடிக்கிறாராம் மதுஷாலினி.

 

என்றாலும், இது கமல் படம் என்பதால், இதை வைத்து கோலிவுட்டில் தான் ஒரு இடத்தை பிடித்து விடலாம் என்று நம்பும் மதுஷாலினி, தூங்காவனம் படம் திரைக்கு வந்ததும், சில மெகாப்பட டைரக்டர்களை நேரில் சந்தித்து சான்ஸ் கேட்கவும் திட்டமிட்டுள்ளாராம்.




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies