சினிமா செய்தித் துளிகள் மாயாவின் வெற்றியைத் தொடர்ந்து மாயா -2

29 Sep,2015
 


இந்த வருடத்தில் அதிக படங்களில் நடித்து நயன்தாரா புதிய சாதனை: - 


 
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருப்பவர் நடிகை நயன்தாரா. தற்போது இருக்கும் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாயா படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு சிம்பு, பிரபுதேவா காதல் முறிவால் சோக கடலில் மூழ்கிய நயன்தாரா, இனிமேல் நடிக்காமல் சினிமாவுக்கே குட்பை சொல்லிவிட்டு போய்விடுவாரோ என்கிற சூழல் நிலவியது.. ஆனால் காதல் தோல்வியால் துவண்டு விடாமல், போராடி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி தற்போது நம்பர்-1 இடத்தை பிடித்திருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருப்பவர் நடிகை நயன்தாரா. தற்போது இருக்கும் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாயா படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு சிம்பு, பிரபுதேவா காதல் முறிவால் சோக கடலில் மூழ்கிய நயன்தாரா, இனிமேல் நடிக்காமல் சினிமாவுக்கே குட்பை சொல்லிவிட்டு போய்விடுவாரோ என்கிற சூழல் நிலவியது.. ஆனால் காதல் தோல்வியால் துவண்டு விடாமல், போராடி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி தற்போது நம்பர்-1 இடத்தை பிடித்திருக்கிறார்.
    

மேலும் இந்த வருடத்தில் இதுவரை 6 படங்களில் நடித்துவிட்டார் நயன்தாரா.. அதிலும் கடந்த 26 நாட்களுக்குள் (ஆக-28 முதல் செப்-24) நயன்தாராவின் மூன்று படங்கள் தொடர்ந்து ரிலீசாகிவிட்டன. இதில் ஜெயம் ரவியுடன் நடித்த ‘தனி ஒருவன்’, தனி ஹீரோயினாக நடித்த ‘மாயா’ இரண்டும் ஹிட்லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டன. அண்மையில் வெளியான ‘லைப் ஆப் ஜோஸுட்டி’ என்ற மலையாள படத்தில் திலீப்புடன் சிறப்பு தோற்றத்தில் நடித்து அதையும் தனது வெற்றிக்கணக்கில் சேர்க்க காத்திருக்கிறார்.. இதுதவிர இந்த வருடத்தில் நயன்தாரா
 நடித்துள்ள இன்னும் நான்கு படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.. சந்தேகமே இல்லாமல் இந்த வருடத்தில் அதிக படங்களில் நடித்தவர் என்கிற சாதனைக்கு நயன்தாரா தான் சொந்தக்காரர்
 


வித்தியாசமான கெட்டப்பில் ஸ்ருதிஹாசன்!


லக் இந்தி படத்தில் சல்மான்கானுடன் அறிமுகமான ஸ்ருதிஹாசன், முதல் படத்திலேயே நீச்சல் உடையணிந்து நடித்து

பாலிவுட்டை பரபரக்க வைத்தார். ஆனால் தமிழில் ஏழாம் அறிவு படத்தில் அழுத்தமான ஒரு பாத்திரத்தில் நடித்தார் அவர். இருப்பினும், ஸ்ருதி கிளாமர் வேடங்களிலேயே அதிகமாக கவனம் செலுத்தினார். அந்த வகையில், சில இந்தி, தெலுங்கு படங்களில் அவர் கொடுத்த ஓவர் கிளாமர் டோஸ் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, மாதர் சங்கங்கள் ஸ்ருதிக்கு எதிராக போர்க்கொடி பிடித்தனர். ஆனபோதும், எதற்கும் மசியவில்லை அவர். இப்போதுவரை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிளாமரில் அத்துமீறிக்கொண்டுதான் வருகிறார்.

 

இந்தநிலையில், தமிழில் ஓரளவு அடக்கி வாசித்து வரும் ஸ்ருதிஹாசன், தற்போது விஜய்யுடன் நடித்துள்ள புலி படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறாராம். அப்படி அவர் நடித்த காட்சிகளுக்காக தினமும் 3 மணி நேரம் மேக்கப் போட்டுக்கொண்டாராம் ஸ்ருதி. அந்த வகையில், இதுவரை நான் நடித்த படங்களில் புலி எனக்கு வித்தியாசமான படமாக இருக்கும் என்று கூறியுள்ள அவர், இந்த படம் தமிழ் ரசிகர்களை விட என்னை கிளாமர் வேடங்களிலேயே அதிகமாக பார்த்து பழக்கப்பட்ட தெலுங்கு, இந்தி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். அந்த அளவுக்கு என்னை முழுசாக மாற்றிக்காண்பித்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்



கமல்ஹாசன் முத்தப் பட்டியலில் புது நடிகை


தமிழ்த் திரையுலகத்தில் முத்தக் காட்சிகளைப் புகழ் பெற வைத்ததில் கமல்ஹாசனுக்குத்தான் முக்கியப் பங்குண்டு.

80களில் இளமை ததும்பும் பல காதல் கதைகளில் நடித்த கமல்ஹாசன் அப்போது தன்னுடன் நடிக்கும் சில கதாநாயகிகளுக்கு சில படங்களில் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அன்றிலிருந்து இன்று வரை அப்படிப்பட்ட காட்சிகளில் அவரைத் தவிர வேறு யாரும் புகழ் பெற முடியவில்லை.

கமல் தற்போது நடித்து வரும் 'தூங்காவனம்' படத்தின் முதல் பார்வை வெளியான போது அவர் யாரோ ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது போன்ற போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்தப் பெண் யாரென்று தெரியாத அளவிற்கு பெண்ணின் முகத்தை மறைத்துக் கொண்டு கமல் முத்தம் கொடுப்பது போன்றே அந்த போஸ்டர் இருந்தது. படத்தில் நாயகியாக நடிக்கும் த்ரிஷாதான் அந்தப் பெண் என்று அப்போது ஒரு பேச்சு எழுந்தது. படத்தின் டிரைலர் வெளியீட்டின் போதும் கமல்ஹாசன் அது பற்றி எதுவும் பேசவில்லை.

 

இப்போது அந்த 'முத்தப் பெண்' யாரென்ற உண்மை வெளிவந்துள்ளது. படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மது ஷாலினிதான் அந்த முத்தப் பெண் என்கிறார்கள். அந்த ரகசியத்தை படம் வெளியாகும் வரை காப்பாற்றலாம் என்றிருந்தார்களாம். ஆனால், எப்படியோ அந்த ரகசியம் வெளியாகிவிட்டது . முத்தக் காட்சியாயிற்றே அதனால்தான் சத்தமில்லாமல் அந்த ரகசியம் வெளிவந்து விட்டதோ...!





 ஒரேநாளில் அனுஷ்காவின் இரண்டு படங்கள்...!


ஒரு நடிகை நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதும் கூட அபூர்வமான நிகழ்வு என்றே சொல்ல வேண்டும்.

 

அப்படி நடந்தால் அந்த நட்சத்திரத்தின் ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷம்தான். இப்படியான டபுள் சந்தோஷத்தை தன் ரசிகர்களுக்குக் கொடுக்க இருக்கிறார் அனுஷ்கா.

யெஸ்.. அனுஷ்கா நடித்த இந்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கின்றன.

அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா முதலானோர் நடிப்பில் உருவாகியிருக்கும் பிரம்மாண்ட படம் ருத்ரமாதேவி.

ராஜமௌலியின் பாகுபலியை போலவே இப்படமும் சரித்திர கதையாக உருவாகியிருப்பதோடு இப்படம் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தெலுங்கில் உருவான இப்படம் தமிழ் மொழியிலும் வெளியாகவிருக்கிறது.

குணசேகர் இயக்கியுள்ள இப்படத்தை தமிழகத்தில் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அருந்ததி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்ததைப் போலவே ருத்ரமாதேவி படத்திலும் ருத்ரமாதேவியாக வேடமேற்று நடித்துள்ளார் அனுஷ்கா!

ருத்ரமாதேவி படத்தை அடுத்த மாதம் 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளநிலையில் அனுஷ்கா கதாநாயகியாக நடித்துள்ள மற்றொரு படமான இஞ்சி இடுப்பழகி படமும் அக்டோபர் 9 அன்று ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிரபல பிவிபி சினிமா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, அனுஷ்கா மாறுபட்ட ஒரு வேடத்தில் அதாவது குண்டான பெண்ணாக நடித்துள்ளார்.

பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசை அமைத்த மரகதமணி இசை அமைத்துள்ளார். ருத்ரமாதேவி படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.

 

ருத்ரமாதேவி படமும் இஞ்சி இடுப்பழகி படமும் ஒரேநாளில் வெளியாவதால் இரண்டு படங்களும் கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.




மாயாவின் வெற்றியைத் தொடர்ந்து மாயா -2



வாரத்துக்கு இரண்டு ஹாரர் படங்களாவது வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

 

கடந்த வாரம் நயன்தாரா நடித்த மாயா என்ற பேய்ப்படம் வெளியானது.

அதே தினத்தில் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் ஆபாசமாக இருப்பதாக மவுத் டாக் பரவியதால் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் அந்தப்படத்துக்கு செல்லவில்லை.

அது மாயா படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக அமைந்தது. மக்கள் மாயாவைத் தேடி வர ஆரம்பித்தனர்.

எனவே வசூல் ரீதியில் மாயா படத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

அந்த வெற்றியை ஊடகங்கள் மத்தியில் கொண்டாடும் எண்ணத்தில் சக்சஸ்மீட் நடத்தினர்.

மாயா படத்தின் இயக்குநர் அஷ்வின் சரவணன் யாரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லையாம்.

கார்த்திக் சுப்பராஜ் போல் குறும்படங்கள் எடுத்த அனுபவத்தை மட்டும் வைத்து மாயா படத்தை இயக்கினாராம்.

 

“மாயா படத்தின் வெற்றி எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்துள்ளது. மாயா படத்தை எடுக்கும்போது படத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தே எடுத்து முடித்தேன். இப்போது இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என பலரும் புதுப்புதுகதைகளை கூறி வருகிறார்கள். அவர்கள் என்னிடம் இப்படி கதைகளை சொல்லும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை வருகிறது. நிச்சயம் நல்ல கதை அமைந்தால் மாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன்” என்றார்.




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies