சினிமா செய்தித் துளிகள் ராசியில்லாமல் போன ராதாவின் மகள்கள்

05 Sep,2015
 

சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் சுருதிஹாசன்



2011–ம் ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வெளியான ‘ஏழாம் அறிவு’ படத்தில் சூர்யா ஜோடியாக சுருதிஹாசன் நடித்தார். தற்போது விஜய் ஜோடியாக நடித்துள்ள ‘புலி’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அடுத்து அஜீத்தின் 56–வது படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார்.

தற்போது சூர்யா, விக்ரம்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘24’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வேகமாக முடித்து திரைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து ‘சிங்கம் 3’ படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் ஹரி இதற்கான கதையை தயாரித்து விட்டார். அவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘சிங்கம் 3’ படத்தில் சூர்யா ஜோடியாக மீண்டும் சுருதிஹாசன் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சு வார்த்தை முடித்து விட்டதாக கூறப்படுகிறது. ‘சிங்கம் 3’ கதை அமைப்பின்படி சூர்யா ஜோடியாக சுருதிஹாசன் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதி அவரை ஜோடியாக்கி இருக்கிறார்கள். இதற்கான முதல் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

சூர்யா தயார் ஆனதும் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அதன் பிறகு ‘சிங்கம் 3’ படப்பிடிப்பு நடைபெறும் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



 

நடிகரை காதலிக்கமாட்டேன்: கங்கனா ரணாவத்


 




தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ‘தாம் தூம்’ படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் நடித்த ‘குயீன்’ என்ற இந்தி படம் வசூலில் சாதனை படைத்தது. இதில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்துக்குப்பிறகு கங்கனா ரணாவத்தின் மார்க்கெட் அந்தஸ்து உயர்ந்தது.

தற்போது ஒரு படத்துக்கு அவர் ரூ.11 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தி நடிகைகள் யாரும் இவ்வளவு பெரிய தொகை சம்பளம் வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கங்கனா ரணாவத் மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் அதிக சம்பளம் வாங்குவதாக விமர்சிக்கப்படுகிறது. ஒரே படத்துக்கு நிறைய நாட்கள் எடுத்துக்கொண்டு நடிக்கவேண்டி உள்ளது. கதையும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருப்பது போலவே எனக்கு படங்கள் அமைகின்றன. எனவேதான், அதற்கேற்ப சம்பளம் வாங்குகிறேன். காதல் பற்றி என்னிடம் கேட்கிறார்கள். நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். நடிகரை காதலிக்கமாட்டேன்.

ஒரே துறையில் இருப்பவரை காதலிப்பது பாதுகாப்பானது அல்ல. அது ஆரோக்கியமானதாகவும் இருக்காது. நடிப்புத்தொழில் போட்டி நிறைந்தது. காதலிலும் அந்த போட்டி பிரதிபலிக்கும். எனவே, சினிமாவில் இருப்பவரை காதலிக்கமாட்டேன். நடிகர் அல்லாத ஒரு நல்ல காதலரை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்



சூர்யா கடந்து வந்த வேதனைகளும், சாதனைகளும்- ஸ்பெஷல்




சரவணனாக பிறந்து இன்று தமிழக குடும்பங்களில் ஒருவராக வாழ்ந்து வருபவர் சூர்யா. நடிகர்களில் மார்க்கெண்டேயன் என்று அழைக்கப்படும் சிவக்குமார் அவர்களின் மூத்த மகனான சூர்யா முதலில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் தான் வேலைப்பார்த்து வந்துள்ளார்.

சினிமா இரத்தில் ஊறிய விஷயம் என்பதால் சும்மா இருப்பாரா, முதல் படத்திலேயே அப்போது திரையுலகில் பெண்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட விஜய்க்கு போட்டியாக நேருக்கு நேர் படத்தில் களமிறங்கினார்.

முதல் படத்திலேயே வெற்றியை ருசிக்க, அதன் பின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் குடும்ப ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த ஜோதிகா தான் அவருடைய வருங்கால மனைவி என்பது அவருக்கே அப்போது தெரிந்திருக்காது.

இதன் பின் பல தோல்விகள், அப்பா பெயரை கெடுத்து விட்டார் என பல கடுமையான சொற்களை தாங்கி கொண்டு நந்தா படத்தில் மீண்டும் திரையுலகின் புதிய மனிதனாக பிறந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

தன் கண் அசைவாலேயே அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தார். இதை தொடர்ந்து காக்க காக்க, பேரழகன், உன்னை நினைத்து என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்தார்.

மகுடத்திற்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய கஜினி படம் தான் சூர்யாவின் திரை வாழ்க்கையை பல மடங்கு உயரத்திற்கு கொண்டு சென்றது. இப்படத்தின் வெற்றி இவரை முன்னணி நடிகர்ளின் தரத்திற்கு கொண்டு செல்ல ஆறு, வேல் என கமர்ஷியல் ருத்ரதாண்டவம் ஆடினார். பிறகு அப்படியே இதற்கு மாறாக ஒரு பக்கம் மௌனம் பேசியதே, வாரணம் ஆயிரம் போன்ற படங்களிலும் நடித்தார்.

சூர்யாவின் திரைப்பயணத்ல் இன்று தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸை ஆண்டு வரும் விஜய், அஜித்திற்கு நிகராக கொண்டு சென்ற படம் அயன். இதை தொடர்ந்து வெளிவந்த ஆதவன், சிங்கம், சிங்கம் 2, 7ம் அறிவு போன்ற படங்கள் சூர்யாவின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

ஆனால், சமீபத்தில் இவரின் அஞ்சான், மாஸ் போன்ற படங்களில் தோல்வி இவரை சோதித்து பார்த்தாலும் இதை விட பல மடங்கு கஷ்டத்தை வாழ்க்கையில் தாண்டி வந்த இவர், வெற்றியை ருசிக்க ’24’ மணி நேரமும் கடினமாக உழைத்து வருகிறார்.

கண்டிப்பாக இந்த சிங்கம் மீண்டும் பாக்ஸ் ஆபிஸை வேட்டையாடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்று திரையுலகில் 18வது வருடம் காலடி எடுத்து வைக்கும் சூர்யா அவர்களுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.









ராசியில்லாமல் போன ராதாவின் மகள்கள்





'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் நாயகியாக

அறிமுகமானவர் ராதா. 80களில் தமிழ்த் திரையுலகில் முன்னணியில் இருந்த ஒரு நடிகை. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என முன்னணியில் இருந்த ஒரு நடிகை. அழகுடன் அற்புதமான நடிப்புடன் அந்தக் கால ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். 'முதல் மரியாதை' படத்தில் சிவாஜிகணேசனுக்கு இணையாக அவருடைய நடிப்பும் அப்போது பாராட்டப்பட்டது. அந்தப் படத்தில் சொந்தக் குரலில் அவர் பேசியிருந்தால் கண்டிப்பாக தேசிய விருதை வாங்கியிருப்பார்.

முன்னணி ஹீரோயினாக இருந்த ராதா அவருடைய இரண்டு மகள்களையும் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகப்படுத்தினார். மூத்த மகள் கார்த்திகா 'கோ' படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன் பின் வெளிவந்த 'அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை' இரண்டு படங்களுமே தோல்வியைத் தழுவியது. அவர் நாயகியாக நடித்துள்ள 'வா டீல்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து எவ்வளவோ நாளாகியும் இன்னும் வெளிவராமலே உள்ளது.

 

இளைய மகள் துளசியை மணிரத்னம் இயக்கத்தில் 'கடல்' படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் படு தோல்வியைத் தழுவியதுதான் மிச்சம். அடுத்து துளசி நடித்த 'யான்' படமும் அதே படுதோல்வி வரிசையில் இணைந்தது. அதன் பின் துளசி வேறு எந்தப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. தான் நடிக்கும் போது முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை ராதா தனது இரண்டு மகள்களையும் முன்னணி ஹீரோயின்களாக்க எவ்வளவோ முயற்சி செய்கிறார். ஆனால், கார்த்திகாவும், துளசியும் ராசியல்லாத நாயகிகளின் பட்டியலில் இணைந்து விட்டார்கள். அதை எந்தப் படம் மாற்றப் போகிறதோ...?





சிவகார்த்திகேயனுடன் ஜோடி செரும் எமி ஜாக்சன்



ஆரம்பத்தில் கதைகளில் மட்டுமே தனிக்கவனம் செலுத்தி வந்த சிவகார்த்திகேயன் சமீபகாலமாக கதாநாயகி, டெக்னீஷியன்கள் என அனைத்து விசயங்களிலும் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது தனது மேனேஜர் ராஜா தயாரிப்பில்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் தான் நடிக்கும் புதிய படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல்பூக்குட்டி, அனிருத் பிரபல டெக்னீஷியன்களுடன் களமிறங்கியிருப்பவர், கதாநாயகி விசயத்திலும் முன்னணியில் இருக்கும் பிரமாண்டமான நடிகைகளுக்கு வலைவீசி வந்தார்.

காரணம், இப்படம் இதுவரை தான் நடித்ததில் பிரமாண்டமான படம் என்பதால். தன்னுடன் டூயட் பாடும் நடிகையும் பிரமாண்ட நடிகையாக ரசிகர்களின் பேராதரவு பெற்ற நடிகையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் தற்போது முன்வரிசையில் இருக்கும் நயன்தாரா, ஸ்ருதிஹாசன், சமந்தா, எமி ஜாக்சன் என பலரிடம் கால்சீட் கேட்க தனது மேனேஜரை அனுப்பி வைத்தார். ஆனால், இந்த நடிகைகள் அனைவருமே பிசியானவர்கள் என்றபோதும் எமிஜாக்சனின் கால்சீட் கிடைத்துள்ளதாம்.

அவரும் சிவகார்த்திகேயனின் நாயகி பட்டியலில் இருந்தவர்தான் என்பதோடு பிரமாண்ட இயக்குனரின் பிரமாண்ட படமான ஐ படத்தில் நடித்தவர் என்பதால், உடனே அவரை ஓகே செய்து விட்டார்களாம். தற்போது உதயநிதியுடன் கெத்து படத்தை முடித்து விட்டு, விஜய்யின் 59வது படத்தில் நடித்து வரும் எமிஜாக்சன், விரைவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்கிறாராம்



இரண்டாவது வாய்ப்பையும் இழந்த பூலோகம்...!


ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி த்ரிஷா நடித்த படம் - பூலோகம். பேராண்மை படத்தில் நடித்தபோது எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாளராக இருந்த கல்யாணகிருஷ்ணன் சொன்ன கதையைக் கேட்டு இம்ப்ரஸ்ஸான ஜெயம்ரவி நடிக்க ஓகே சொன்னார். அதன்

பிறகு ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் பூலோகம் கதையைக் கேட்டு அந்தப் படத்தை தானே தயாரிக்க முன்வந்தார்.

2010 ஆம் ஆண்டு இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி, 2012 ல் படப்பிடிப்பு தொடங்கியது. பூலோகம் படம் முடிவடைந்து சுமார் மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. பல படங்களை தயாரித்து வந்ததால் அந்தப் படங்களை ரிலீஸ் செய்துவிட்டு பூலோகம் படத்தை ரிலீஸ் செய்ய எண்ணி இருந்தார். இதற்கிடையில், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை காரணமாக பூலோகம் படத்தை வெளியிட முடியாதநிலை உருவாகிவிட்டது.

அதற்கு இன்னொரு காரணமும் உண்டு... ஜெயம் ரவிக்கு அப்போது மார்க்கெட் இல்லை என்பதே அது. சில மாதங்களுக்கு முன் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது. அந்த நேரத்தில் பூலோகம் படத்தை வெளியிட முயற்சி செய்திருந்தால் சாத்தியமாகி இருக்கும். ஏனோ அந்த நல்ல நேரத்தை தவறவிட்டுவிட்டனர்.

 

தற்போது தனி ஒருவன் படம் வெற்றியடைந்த காரணத்தினால் ஜெயம்ரவி மார்க்கெட் மறுபடி சூடுபிடித்திருக்கிறது. இந்த நேரத்தில் பூலோகம் படத்தை வெளியிட முயன்றால்தான் உண்டு. இந்த சந்தர்ப்பத்தையும் தவறிவிட்டால் பூலோகம் படத்தை இனி எக்காலமும் வெளியிட முடியாது என்கின்றனர் விநியோகஸ்தர்கள். 5 கோடி இருந்தால்தான் பூலோகம் படத்தை வெளியிட முடியும் என்ற இக்கட்டான சூழலில் இருக்கிறாராம் ஆஸ்கார் ரவி.




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies