சினிமா செய்தித் துளிகள் தமிழ் கற்க ஆர்வம் காட்டும் எமிஜாக்சன்

01 Sep,2015
 

 சார்மியின் கையை பிடித்து இழுத்து ரசிகர் ரகளை





தமிழில் ‘காதல் அழிவதில்லை. காதல் கிசுகிசு, லாடம்’ போன்ற படங்களில் நடித்தவர் சார்மி. தற்போது விக்ரமுடன் ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சார்மியை தனியார் அமைப்பு ஒன்று ஐதராபாத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தது.

இதில் கலந்துகொள்ள அவர் கவர்ச்சி உடை அணிந்து சென்றார். கூட்டத்தினர் சார்மியை பார்த்ததும் ஆட்டோகிராப் கேட்டு நெருங்கினர். ஒரு ரசிகர் செல்பி எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு அருகில் சென்றார். சார்மியும் அதனை அனுமதித்து செல்பிக்கு போஸ் கொடுத்தபடி ரசிகருடன் நெருங்கி நின்றார். அப்போது அந்த ரசிகர் அத்துமீறி திடீரென்று சார்மியின் கையை பிடித்தார்.

கட்டி அணைக்கவும் முயன்றார். சார்மி ஆவேசமாக அந்த ரசிகரை தள்ளிவிட்டார். தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக விருந்தை ஏற்பாடு செய்தவர்களிடம் புகார் செய்தார். இதையடுத்து அந்த ரசிகரை பிடித்து சிலர் அடித்து உதைத்தனர். பதிலுக்கு அவரும் திருப்பி அடித்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு அந்த ரசிகர் வெளியே விரட்டப்பட்டார்.

இந்த சம்பவம் சார்மிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு அவசரமாக புறப்பட்டுச்சென்றுவிட்டார்.




  

   தமிழ் கற்க ஆர்வம் காட்டும் எமிஜாக்சன்




 

‘மதராசபட்டினம்’ மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் எமிஜாக்சன். இங்கிலாந்தை சேர்ந்த இவர் ‘தாண்டவம்’, ‘ஐ’ படங்களில் நடித்தார்.

இப்போது தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் நடித்து வருகிறார். ஆங்கிலம் தாய் மொழி என்றாலும் தமிழ் கற்பதில் எமிஜாக்சன் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்.

காலையில் படப்பிடிப்புக்கு வரும் போது படக்குழுவினர் அனைவருக்கும் தமிழில் ‘வணக்கம்’ சொல்கிறார். யாராவது ‘குட் மானிங்’ என்று சொன்னாலும் எமிஜாக்சன் ‘வணக்கம்’ என்று கொஞ்சும் தமிழிலேயே சொல்கிறார்.

லைட்மேன், உதவியாளர்கள் அனைவரையும் ‘அண்ணா’ என்று அன்புடன் அழைக்கிறார். அவரிடம் ஆங்கிலத்தில் பேசுபவர்களிடம் ‘எனக்கு டமில்ல பேச ஆசை. உதவி செய்யுங்க...’ என்று மழலை மொழியில் கேட்கிறார்.

இது மட்டுமல்ல ‘டமில் ஸ்வீட் லேங்வேஜ்’ என்றும் அடிக்கடி புகழ்கிறார். அவரது தமிழ் ஆர்வத்தை கண்டு படப்பிடிப்பு குழுவினர் அசந்து நிற்கிறார்கள்.

தொடர்ந்து பேச முடியாவிட்டாலும் முடிந்த வரை சிறு சிறு வார்த்தைகளை தமிழில் சொல்கிறார். தொடர்ந்து தமிழில் பேச ஆசைப்படுகிறார். இது அவருடன் பழகுவோருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

   



  நடித்த படங்களை பார்ப்பது இல்லை: சமந்தா





தமிழ் திரை உலகில் முக்கியமான ஹீரோக்களுடன் நடித்து வருபவர் சமந்தா. அவர் நடித்த படங்களை அவரே பார்ப்பது இல்லை என்கிறார். காரணம் என்ன? அவரே சொல்கிறார்... நான் நன்றாக நடிக்க வேண்டும் என்று விரும்புவேன். படங்களில் இயக்குனர் விருப்பப்படி திருப்தி ஏற்படும் வரை நடிப்பேன்.

ஆனால் நான் நடித்த படங்களை நான் பார்க்க மாட்டேன். அதில் எனக்கு விருப்பம் இல்லை. என் நடிப்பை யாராவது குறை சொல்லிவிடுவார்களோ என்ற பயம் தான் இதற்கு காரணம். தமிழில் நான் விக்ரமுடன் நடித்துள்ள ‘பத்து எண்ணறதுக்குள்ள’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து இருக்கிறேன். இது எனக்கு புதிய அனுபவம். இந்த படத்தில் என் நடிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

தமிழில் நான் முதலில் நடித்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. ஆனால் ‘விண்ணை தாண்டி வருவாயா’ தெலுங்கு ரீமேக்கில் நான் நடித்தேன். அது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒரு படம் தோல்வி அடைந்து விட்டது என்று சோர்ந்து போனால் கவலைதான் மிஞ்சும். எத்தனையோ வெற்றி தோல்வியை பார்த்துள்ளேன். எதை பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடித்து வருவதால்தான் அடுத்த படங்களில் வெற்றி பெற முடிகிறது.

தற்போது ஓய்வு இல்லாமல் நடித்து வருகிறேன். இடைவெளி விழுந்தால் தோல்விகளை நினைத்து அழுது கொண்டுதான் இருக்கவேண்டும். அப்படி ஒரு நிலை வராமல் தமிழ், தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன. இதில் கதைக்கு ஏற்ப சிந்தித்து நடித்து வருகிறேன். மேலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.



இன்டர்நெட்டில் பரவும் நடிகை அனுபமா ஆபாச படங்கள்: போலீசில் புகார் கொடுக்க முடிவு



 



கேரளாவில் மலையாள நடிகைகளின் ஆபாச படங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கமலஹாசனின் பாபநாசம் படத்தில் நடித்த மலையாள நடிகை ஆஷாசரத்தின் ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது. இது பற்றி ஆஷாசரத் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து அவரது ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றியதாக கேரள வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிரேமம் படத்தில் நடித்த இன்னொரு நடிகையான அனுபமா பரமேஷ்வரனின் ஆபாச படங்களும் இப்போது இணையதளத்தில் உலவுகிறது. இதை அறிந்த நடிகை அனுபமா அதிர்ச்சி அடைந்தார்.

இணையதளத்தில் வெளியான படங்கள் போலியானவை என்று புகார் கூறிய அவர் இது பற்றி போலீசில் புகார் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் இது பற்றி அவர் கூறும் போது, நடிப்புலகில் இருக்கிறோம் என்பதற்காக எங்களை பற்றி இத்தகைய படங்களை போலியாக உருவாக்கி உலவ விடுபவர்களுக்கும் அம்மா, தங்கை இருக்கிறார்கள் என்பதை நினைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். ///


 
போட்டி போட நிறைய நடிகைகள் வேண்டும் - தமன்னா 




 
தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வரும் தமன்னா திரை உலகில் போட்டி இருந்தால்தான் முன்னேற முடியும் என்று கூறுகிறார். இது குறித்து அவர் அளித்த போட்டி... எனது படங்கள் வெற்றி பெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக நான் மட்டும்தான் திரை உலகில் இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. நான் மட்டும் நடித்தால் ‘போர்’ அடித்து விடும். எனவே என்னைப் போல் எல்லோரும் நடிக்க வேண்டும்.
தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வரும் தமன்னா திரை உலகில் போட்டி இருந்தால்தான் முன்னேற முடியும் என்று கூறுகிறார். இது குறித்து அவர் அளித்த போட்டி... எனது படங்கள் வெற்றி பெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக நான் மட்டும்தான் திரை உலகில் இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. நான் மட்டும் நடித்தால் ‘போர்’ அடித்து விடும். எனவே என்னைப் போல் எல்லோரும் நடிக்க வேண்டும்.
    

‘பாகுபலி’ படத்தில் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது. நான் எங்கு சென்றாலும், அந்த படத்தில் நான் நடித்த பாத்திரத்தின் பெயரை சொல்லி அன்புடன் அழைக்கிறார்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. அடுத்து ‘பெங்கால் டைகர்’ என்ற படத்தில் நடிக்கிறேன்.தென் இந்திய நடிகைகள் அனைவரும் திறமையானவர்கள். நிறைய நடிகைகள் இருப்பதால்தான் எந்த படத்துக்கு யார் தேவை, யார் திறமைசாலி என்பதை தெரிந்து பொருத்தமான நடிகையை தேர்வு செய்து நடிக்க வைக்கிறார்கள்.

நான் இன்னும் எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் போது ஒரு அனுபவம் கிடைக்கிறது. என்னுடன் போட்டி போட நிறைய நடிகைகள் வேண்டும். போட்டி இருந்தால்தான் திறமையாக நடித்து திரை உலகில் முன்னேற முடியும். இதற்கு நிறைய பேர் நடிக்க வேண்டும்.
 



தனுஷுக்கு ரெண்டாவது ஜோடியான அஜித் மச்சினி





தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முதன்முதலாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதனால், இப்படத்தில் இவருக்கு இரண்டு ஹீரோயின்கள் தேடுதல் வேட்டை நடந்து வந்தது. அதன் முதற்கட்டமாக, லட்சுமிமேனன் தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தமானார். மேலும், இன்னொரு நாயகியாக தற்போது அஜித்தின் மச்சினியும், நடிகை ஷாலினியின் தங்கையுமான நடிகை ஷாமிலி ஒப்பந்தமாகியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஹீரோயினாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போதுதான் தமிழுக்கு ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

தனுஷ் நடிக்கும் படம் தவிர, விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகவிருக்கும் ‘வீரசிவாஜி’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஷாமிலி ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகை வித்யாபாலனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.





Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies